惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Microsoft Security Blog
Microsoft Security Blog
Jina AI
Jina AI
量子位
博客园 - 叶小钗
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
IT之家
IT之家
S
SegmentFault 最新的问题
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
雷峰网
雷峰网
博客园 - 聂微东
美团技术团队
Last Week in AI
Last Week in AI
罗磊的独立博客
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 三生石上(FineUI控件)
WordPress大学
WordPress大学
宝玉的分享
宝玉的分享
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园_首页
V
Visual Studio Blog
大猫的无限游戏
大猫的无限游戏
The Cloudflare Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கூட்டுறவு பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி விவ...
செய்திப்பிரிவு · 2026-06-23 · via hindutamil

Updated on: 

சென்னை: தேர்​தல் வாக்​குறு​திப்​படி, விவ​சா​யிகள் பெற்​றுள்ள கூட்​டுறவு பயிர்க் கடனை முழு​மை​யாக தள்​ளு​படி செய்ய வலி​யுறுத்​தி, தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கங்​களின் மாநிலக்​குழு சார்​பில், சென்னை கீழ்ப்​பாக்​கம் மாநில கூட்​டுறவு சங்​கங்​களின் பதி​வாளர் அலு​வல​கம் முன்பு தொடர் முழக்க போராட்​டம் நேற்று நடை​பெற்​றது.

போராட்​டத்​தில், தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் (சிபிஐ) பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி, தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் (சிபிஎம்) மாநில பொதுச்​செய​லா​ளர் சாமி.நட​ராஜன் உட்பட 300-க்​கும் மேற்​பட்​டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கங்​களின் மாநிலக் குழு நிர்​வாகி​கள் கூறிய​தாவது: தமிழகம் முழு​வதும் தொடக்க வேளாண்மை கூட்​டுறவு வங்​கி​களில் விவ​சா​யிகள் பெற்​றுள்ள பயிர்க் கடன் ரூ.2,044.46 கோடிதள்​ளு​படி செய்​யப்​படு​வ​தாக வெளி​யான அரசின் முதல்​கட்ட அறி​விப்​பில், ஒரு பகுதி விவ​சா​யிகள் மட்​டும் பலன் பெறு​வர்.

பெரும்​பகுதி விவ​சா​யிகளுக்கு தேர்​தல் வாக்​குறு​திப்​படி கடன் தள்ளுபடி அறி​விப்பை அரசு வெளி​யிட வேண்​டும் என வலி​யுறுத்​தி, மே 26-ல் எங்​கள் சங்​கங்​களின் சார்​பில் கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டம் நடத்​தினோம்.

ஜூன் 2-ல் தமிழக முதல்​வரை நேரில் சந்​தித்​து, கடன் தள்​ளு​படி செய்ய மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என வலி​யுறுத்​தினோம். அதனடிப்​படை​யில், ஜூன் 16-ம் தேதி மாநில அரசு புதிய அறி​விப்பு வெளி​யிட்​டது.

அதில் ரூ.75 ஆயிரம் வரை பயிர்க் கடன் பெற்​றுள்​ளவர்​களுக்கு முழுத் தள்​ளு​படி​யும், அதற்கு மேல் கடன் பெற்​றுள்ள விவ​சா​யிகளுக்கு ரூ.35 ஆயிரம் தள்​ளு​படி​யும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது ஏற்​கனவே அறிவிக்​கப்​பட்​டதை விட ஒரு சிறிய முன்​னேற்​றமே தவிர, முழு​மை​யான தள்​ளு​படி​யாக அமைய​வில்​லை.

எனவே, தேர்​தல் வாக்​குறு​திப்​படி 5 ஏக்​கர் வரை பயிர்க்கடன் பெற்ற விவ​சா​யிகளின் கடனை முழு​மை​யாக​வும், 5 ஏக்​கருக்கு மேல் பயிர்க் கடன் பெற்ற விவ​சா​யிகளின் கடனில் 50 சதவீத​மும் தள்​ளு​படி செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.