惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Google DeepMind News
Google DeepMind News
小众软件
小众软件
GbyAI
GbyAI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
F
Fortinet All Blogs
博客园 - 三生石上(FineUI控件)
B
Blog
量子位
B
Blog RSS Feed
Vercel News
Vercel News
Blog — PlanetScale
Blog — PlanetScale
Last Week in AI
Last Week in AI
博客园 - 叶小钗
MongoDB | Blog
MongoDB | Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
爱范儿
爱范儿
Jina AI
Jina AI
C
Check Point Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
IT之家
IT之家
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
云风的 BLOG
云风的 BLOG

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
எதிர்கட்சிகளில் பிளவு எதிரொலி - மகளிர், தொகுதிவரையறை மசோத...
ஆர்.ஷபிமுன்னா · 2026-06-21 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ்(டிஎம்சி), சிவசேனா(யுபிடி) போன்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் ராஜினாமா அல்லது கட்சி தாவலால் நாடாளுமன்றத்தின் சமன் மாறி வருகிறது. இதன் பலனால் மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி வரையறை மசோதாக்களை நிறைவேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு தயாராகி வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக தேசிய அரசியலில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசியல் மாற்றத்தின் தாக்கம் நாடாளுமன்றத்தின் எம்பிக்கள் எண்ணிக்கையின் சமனை மாற்றி அமைத்துள்ளது. இது, அடுத்து வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரலில் நிறைவடைந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் இடையே ஒருங்கிணைந்த செயல்பாடு நிலவியது. இதன் காரணமாக, முக்கியமான மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் 54 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனால் இப்போது எதிர்கட்சிகளில் அதன் எம்பிக்களின் செயல்பாடுகளால், சூழ்நிலை முற்றிலும் மாறியுள்ளது.

இம்மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அது நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எனவே, மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற அரசு மீண்டும் தயாராகி வருகிறது. இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணம், மம்தா பானர்ஜியின் டிஎம்சியில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சி.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் டிஎம்சியின் தோல்வியால் அக்கட்சி அனைத்து மட்டங்களிலும் சிதைந்து வருகிறது. கட்சியின் 28 மக்களவை எம்பிக்களில் 20 பேர் கிளர்ச்சி செய்து 'நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா' (என்சிபிஐ) என்ற புதிய கட்சியில் இணைந்துள்ளனர். என்சிபிஐ இப்போது பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் நேரடியாக இணையவுள்ளது.

இதேபோல், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா(யுபிடி) கட்சியிலும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்தச் சிதைவும் நாடாளுமன்றத்தில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த மக்களவையின் 9 எம்.பி.க்களில் 6 பேர் அணி மாறி, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் இணைந்துள்ளனர். ஏக்நாத்தின் சிவசேனா ஏற்கெனவே என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இதுவும், பாஜகவின் நாடாளுமன்றத்தில் என்டிஏவின் நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்கும்.

இந்த இரு கட்சிகளின் கிளர்ச்சியால் என்டிஏவில் 26 எம்பிக்கள் எண்ணிக்கை கூடிவிடும். இந்த கிளர்ச்சியின் பின்னணியில் பாஜக இருப்பதாகப் புகார்கள் உள்ளன. இச்சூழலில் அரசியலமைப்பு மசோதா நிறைவேற்ற 28 எம்பிக்கள் குறைகிறது. இதையும் சமன் செய்ய சமாஜ்வாதியிலும் கிளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் சில சிறிய கட்சிகளின் எம்பிக்களும் என்டிஏ ஆதரவு நிலை எடுக்க ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இதன்பலனாக, அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களுக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு மத்திய அரசு மிக அருகில் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்த அதே மசோதாவை மீண்டும் நிறைவேற்ற குறைந்தது ஆறு மாதங்கள் இடைவெளி தேவை. இதனால், அந்த மசோதாக்களில் சிறிய மாற்றங்கள் செய்து புதிதாக அறிமுகப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. மாற்றத்திற்காக திமுக உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பாஜக திட்டமிடுகிறது.

மக்களவையில் திமுகவிடம் 22 எம்பிக்கள் உள்ளனர். மற்றொரு முக்கிய அரசியல் நிகழ்வாக, தமிழ்நாட்டின் முக்கிய எதிர்கட்சியான திமுக, காங்கிரஸுடனான உறவை முறித்துக்கொண்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியிலிருந்தும் திமுக விலகுகிறது.

மசோதாவிற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் சில கட்சிகள் வெளியேறும் சூழலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் என்டிஏவிற்கு சாதகமாகவே அமையும். மக்களவையை போல், மாநிலங்களவையிலும் இந்த மசோதாவுக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 164 வாக்குகள் தேவைப்படுகின்றன.

என்டிஏவிடம் தற்போது 150 எம்பிக்கள் உள்ளனர். இங்கு திமுகவின் ஆதரவு கிடைத்தால், எண்ணிக்கை 158 என உயரும். அப்போதும் பெரும்பான்மைக்கு 6 வாக்குகள் தேவைப்படும். திரிணாமுல் எம்பிக்களின் ராஜினாமாவால் காலியான இடங்களுக்கு நடைபெறும் இடைத்தேர்தல்கள் மற்றும் பிற சிறிய கட்சிகளின் ஆதரவு மூலம் இந்த 6 வாக்குகளையும் எளிதாகப் பெற முடியும்.

இதனிடையே, அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின்10 எம்பிக்களிலும் பிளவு ஏற்பட்டது. இதன் மாநிலங்களவை 7 எம்பிக்கள் பாஜகவில் இணைந்தனர். இவர்களின் பதவி பறிப்பு இன்னும் முடிவாகவில்லை.