惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
A
About on SuperTechFans
Y
Y Combinator Blog
V
V2EX
Engineering at Meta
Engineering at Meta
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
博客园 - 聂微东
阮一峰的网络日志
阮一峰的网络日志
H
Help Net Security
小众软件
小众软件
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The GitHub Blog
The GitHub Blog
WordPress大学
WordPress大学
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog
G
Google Developers Blog
J
Java Code Geeks
博客园 - 三生石上(FineUI控件)
IT之家
IT之家
N
Netflix TechBlog - Medium
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேல்முறையீட்டு வழக்குகள் இருந்தாலும் பரோல் கோரும் விண்ணப்...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

Updated on: 

சென்னை: ‘சிறை தண்டனையை எதிர்த்து தொடரப்படும் மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் பரோல் கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்கலாம்’ என தமிழக அரசுக்கு 5 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் விதிக்கப்படும் தண்டனையை எதிர்த்து தொடரப்படும் மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சம்பந்தப்பட்ட கைதிக்கு பரோல் வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் இருவேறு அமர்வுகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின.

அதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் விதமாக தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, எம். நிர்மல்குமார், சுந்தர் மோகன் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வில் விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் ஏதேனும் மாற்று கருத்துகள் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் வண்ணம் நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் நியமி்க்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞரான அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, ‘‘இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருவதாகவும், தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்குவது தொடர்பாக நாடு தழுவிய அளவில் கொள்கையை வகுப்பது குறித்து உச்ச நீதிமன்றமும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதை் காரணம் காட்டி பரோல் அல்லது விடுப்பு போன்ற சலுகைகளை காலவரம்பின்றி நிறுத்த முடியாது.

மேல்முறையீடு நிலுவையில் இருந்தாலும், பரோல் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை உயர்நீதிமன்ற பதிவுத்துறை விசாரணைக்கு பட்டியலிடலாம்.

அதே போல, சிறைத்துறை அதிகாரிகளும் பரோல் கோரும் விண்ணப்பங்களை விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கலாம். இந்த உத்தரவு குறித்து சிறைத்துறை அதிகாரிகளுக்கும் தகுந்த அறிவுறுத்தல்களை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.