惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
宝玉的分享
宝玉的分享
博客园 - 叶小钗
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 司徒正美
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - Franky
爱范儿
爱范儿
罗磊的独立博客
IT之家
IT之家
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
N
Netflix TechBlog - Medium
云风的 BLOG
云风的 BLOG
P
Proofpoint News Feed
U
Unit 42
Engineering at Meta
Engineering at Meta
WordPress大学
WordPress大学
博客园 - 三生石上(FineUI控件)
T
Tailwind CSS Blog
H
Help Net Security
博客园_首页
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
人人都是产品经理
人人都是产品经理

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
யார் இந்த ஜோசப் விஜய்? - தமிழகத்தில் தடம் பதித்த தவெக தலை...
2026-05-04 · via hindutamil
வீரமணி சுந்தரசோழன்

Updated on

2 min read

குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்த முதல் படம் ‘வெற்றி’, அவர் ஆரம்பித்த கட்சியின் பெயர் தமிழக ‘வெற்றி’ கழகம். சினிமாவின் பெயர், அரசியல் கட்சியின் பெயர் இரண்டிலும் ‘வெற்றி’யை அடையாளமாக வைத்து தொடங்கிய விஜய், தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றியையும் வசமாக்கி ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறார்.

அசைக்கவே முடியாத இரும்புக் கோட்டையாக இருந்த திமுக, அதிமுகவை, அரசியலுக்கு வந்த இரண்டே வருடங்களில் அடித்து தூக்கி அரியணையில் கைப்பற்றியுள்ளார் விஜய். நடிகர்கள் நாடாளுவது எம்ஜிஆரோடு முடிந்துவிட்டது என்ற விமர்சனத்தை உடைத்து, 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சியை வசமாக்கியுள்ளார் விஜய்.

யார் இந்த விஜய்?

அரசியல் விமர்சனங்களை உள்ளடக்கிய பல்வேறு படங்களை இயக்கி கவனம் ஈர்த்த எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன்தான் ஜோசப் விஜய். 1974-ஆம் ஆண்டு ஜூன் 22ல் பிறந்த இவர், 1984-ஆம் ஆண்டு தந்தை எஸ்.ஏ.சி-யின் ‘வெற்றி’ திரைப்படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் 1992-ல் ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலமாக கதாநாயகனாக நடிப்பை தொடங்கினார். தனது தந்தையின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த விஜய், ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ படங்கள் மூலமாக முன்னணி நட்சத்திரமாக மாறினார்.

அதன்பின்னர் ‘குஷி’, ‘கில்லி’, ‘போக்கிரி’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து உச்ச நட்சத்திரமாகவும் உயர்ந்தார். குழந்தைகள், பெண்களின் விருப்பமான நாயகனாக திரைப்படங்களில் நடித்த அவர், இப்போது அதே பெண்கள், குழந்தைகள், இளைஞர்களின் ஆதரவோடு அரசியலிலும் உச்சம் தொட்டுள்ளார்.

விஜய் தொடக்க கால திரைப்படங்கள் முதலே அரசியல் தொடர்பான வசனங்களையும், காட்சிகளையும் தனது படங்களில் தொடர்ந்து பயன்படுத்தினார். முக்கியமாக 2010-க்கு பிறகான அவரது படங்களில் வசனங்கள், படத் தலைப்புகள், பாடல்களில் அரசியல் தொடர்பான குறியீடுகள் இடம்பெறத் தொடங்கின. இதன் காரணமாகவே ‘தலைவா’, ‘காவலன்’, ‘கத்தி’, ‘சர்க்கார்’, ‘மெர்சல்’ உள்ளிட்ட பல படங்கள் அப்போது ஆண்ட கட்சிகளால் நெருக்கடிக்கு ஆளாகின.

ஒருபக்கம் திரைப்படங்கள் மூலமாக அரசியல் ‘குறிப்பு’களை பேசிய விஜய், மறுபக்கம் 2009-ல் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். மக்கள் இயக்கத்துக்கு ஒரு கொடியையும் அறிமுகப்படுத்திய விஜய், தொடர்ந்து அதன் மூலமாக நற்பணிகளையும் ஒருங்கிணைத்து மாநிலம் முழுவதும் கட்டமைப்புகளை உருவாக்கினார். இதன்பின்னர் 2011-ல் விஜய் தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகளை தீவிரமாக ஆரம்பித்தார். 2011 பிப்ரவரியில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதற்காக நாகையில் விஜய் நடத்திய பொதுக்கூட்டம் கவனம் ஈர்த்தது.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை எதிர்த்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்தார். அந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்ற பின்னர், அதிமுகவின் வெற்றிக்கு ‘அணில்’ போல தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கியதாகவும் தெரிவித்தார். 2011 ஆகஸ்டில் டெல்லியில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்திய அன்னா ஹாசாரேவுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் விஜய். இந்தச் சம்பவம் விஜய்யின் அரசியல் ஆசையை வெளிச்சம் போட்டு காட்டியது.

2014 பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருந்த மோடியை கோவையில் நேரில் சந்தித்து பேசியதும், அப்போது சலசலப்புகளை உருவாக்கியது. அதேபோல இப்போது வரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் நல்ல உறவிலும் இருந்து வருகிறார் விஜய்.

2011-ல் அதிமுகவின் வெற்றிக்கு பிரச்சாரம் செய்தாலும் கூட, ‘தலைவா’ படத்தின் ‘டை டூ லீடு’ டேக்லைனால் விஜய் மீது ஜெயலலிதா கடும் கோபமடைந்தார். இதற்காக பணிவான ஒரு வீடியோவை வெளியிட்டு சமரசம் செய்தார் விஜய். இந்தச் சம்பவத்துக்கு பிறகுதான் விஜய்யின் திரைப்படங்களில் அரசியல் காரம் அதிகமாக ஆரம்பித்தது.

விஜய் மக்கள் இயக்கத்தை எஸ்ஏசி தான் தொடக்கம் முதல் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் மக்கள் இயக்கத்தில் அவரின் ஆதிக்கம் அதிகமானது. அதன்பின்னர் 2020-ஆம் ஆண்டு விஜய்க்கே தெரியாமல், விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாகவும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து பரபரப்பை உருவாக்கினார் எஸ்ஏசி. இதனால் கோபமடைந்த விஜய், எஸ்ஏசி தன் பெயரை பயன்படுத்தக் கூடாது என வழக்கு தொடர்ந்து பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது முதலே பல்வேறு உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு, பல இடங்களில் வெற்றியும் பெற்றது. இவை கொடுத்த உற்சாகமே விஜய்யை அரசியலை நோக்கி நகர்த்தியது. இதன் தொடர்ச்சியாக 2024 பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய், மைனாரிட்டி அரசே அமைக்க முடியும் என்றாலும் கூட, இரண்டே ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து அசத்தியுள்ளார்.

விஜய்யால் கட்சியை தொடங்க முடியாது என தொடக்கத்தில் சொல்லப்பட்டது; அதனை உடைத்து கட்சியை ஆரம்பித்தார். கட்சியின் கட்டமைப்பை உருவாக்கும் அனுபவம் அவருக்கு இல்லை என விமர்சனம் எழுந்தது; அதனையும் உடைத்து கட்சியை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றார். அவரால் பிரச்சாரத்துக்கே செல்ல முடியாது; 234 தொகுதிக்கும் வேட்பாளர்கள் கூட போட முடியாது என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. இதனையெல்லாம் தகர்த்து இப்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளார்