























சென்னை குரோம்பேட்டை பகுதியில் இருக்கும் பச்சைமலை குன்றுக்குத் தினமும் காலை முதல் மாலை வரை நிறைய பேர் மலையேற்றம் செய்யவும், கோயிலைக் காணவும் செல்வது வழக்கம்.
பெருநகரத்தின் மத்தியில் இருக்கும் இந்தப் பச்சைமலையில் செருந்தி, மோதிரக்கண்ணி, குகமதி, காட்டு ஆதொண்டை, முல்லை, வேம்பு, புங்கன், ஒதியன், பூவந்தி, வெப்பாலை, பிடவம், களா, மிளகரணை, காட்டு எலுமிச்சை, நிலக்குமிழ், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி வகை என்று பல வகையான தாவரங்கள் உள்ளன. அவற்றைச் சார்ந்த தேனீக்கள், நிறைய வண்ணத்துப்பூச்சி வகைகள், பல பறவை வகைகள், தட்டான்கள், மேலும் பல உயிரினங்கள் வாழும் பல்லுயிர் சூழல் நிறைந்த இடமாக இம்மலை உள்ளது.
தேன்துளிச் சிறகன் (Amber winged Marsh Glider)
பச்சைமலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மிகவும் அரிதான இரண்டு தட்டான் வகைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு அரிதான தட்டான் தேன்துளிச் சிறகன் என்று அழைக்கப்படும் Amber-winged Marsh Glider. இதன் அறிவியல் பெயர் Hydrobasileus croceus. இது சென்னையில் முதன் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。