惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
G
Google Developers Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
U
Unit 42
A
About on SuperTechFans
Vercel News
Vercel News
B
Blog
Martin Fowler
Martin Fowler
MyScale Blog
MyScale Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
腾讯CDC
D
Docker
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
The Cloudflare Blog
Jina AI
Jina AI
B
Blog RSS Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
WordPress大学
WordPress大学
T
Tailwind CSS Blog
MongoDB | Blog
MongoDB | Blog
D
DataBreaches.Net
月光博客
月光博客
大猫的无限游戏
大猫的无限游戏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வழிகாட்டி நெறிமுறைகளை அமல்படுத்துவதற்கு ஐசியூ பிரிவுக்குச...
2026-04-26 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: ‘‘தீ​விர சிகிச்​சைப் பிரிவு​களுக்​கான (ஐசி​யூ) வழி​காட்டி நெறி​முறை​களை அமல்​படுத்​து​வதற்​கு, செயல் திட்​டங்​களை தயாரிக்க வேண்​டும்’’ என்று அனைத்து மாநிலங்​களை​யும் உச்ச நீதி​மன்​றம் அறி​வுறுத்தி உள்​ளது.

மருத்​து​வ​மனை​களில் தீவிர சிகிச்சை பிரி​வில் (ஐசி​யூ) நோயாளி​களுக்​குச் தரமான சிகிச்சை அளிப்​பதை உறுதி செய்ய வழி​காட்டி நெறி​முறை​களை வகுக்க வேண்​டும் என்​பது தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இந்த வழக்கு கடந்த ஏப்​.20-ம் தேதி உச்ச நீதி​மன்​றத்​தில் மீண்​டும் விசாரணைக்கு வந்​தது. நீதிப​தி​கள் அசனுதீன் அமானுல்லா மற்​றும் ஆர்​.ம​காதேவன் ஆகியோர் அடங்​கிய அமர்வு விசா​ரணை நடத்​தியது. அப்​போது மத்​திய அரசு சார்​பில் ஐசி​யூ.​வில் சிகிச்சை அளிப்​ப​தற்​கான வழி​காட்டி நெறி​முறை​கள் சமர்ப்​பிக்​கப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி​கள் தங்​கள் உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: ஐசி​யூ.​வில் நோயாளி​களுக்கு சிகிச்சை அளிக்​கும் விஷ​யத்​தில், முதல் கட்​ட​மாக போதிய ஊழியர்​கள் எண்​ணிக்​கை, அத்​தி​யா​வசிய கருவி​கள் உட்பட 5 அடிப்​படைப் பிரச்​சினை​களை அடை​யாளம் கண்​டு, அவற்​றுக்கு முன்​னுரிமை அளிக்க வேண்​டும். ஐசி​யூ.​வில் அமல்​படுத்த வேண்​டிய வழி​காட்டி நெறி​முறை​களை மத்​திய சுகா​தா​ரத் துறை சமர்ப்​பித்​துள்​ளது. அதன் நகல்​களை அனைத்து மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களுக்கு மத்​திய அரசு அளிக்க வேண்​டும். அத்​துடன், அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்​களைச் சேர்ந்த கூடு​தல் தலைமைச் செயலர்​கள், சுகா​தா​ரத் துறை மற்​றும் மருத்​து​வக் கல்​வித் துறை செயலர்​கள் உடனடி​யாக கூட்​டத்தை கூட்ட வேண்​டும். அதில், ஐசி​யூ.​வில் கடைபிடிக்​கப்பட வேண்​டிய வழி​காட்டி நெறி​முறை​களை அமல்​படுத்​து​வது தொடர்​பாக துறை சார்ந்த நிபுணர்​களு​டன் அவர்​கள் ஆலோ​சனை நடத்த செயல் திட்​டத்தை வகுக்க வேண்​டும்.

ஐசி​யூ.​வில் அளிக்​கப்பட வேண்​டிய சிகிச்​சைகள் குறித்த செயல் திட்​டங்​களை வகுக்க வேண்​டும். அதை விட முக்​கிய​மானது, அந்த செயல் திட்​டங்​கள் அமல்​படுத்​து​வதை தீவிர​மாகக் கண்​காணிக்க வேண்​டும். இந்த நடை​முறை​களை முதல் கூட்​டத்​திலேயே உடனடி​யாக செய்ய வேண்​டும் என்று நாங்​கள் எதிர்​பார்க்​கிறோம். இன்று முதல் (ஏப்​.20) ஒரு வாரத்​துக்​குள் இதற்​கான செயல் திட்​டத்தை வகுக்க வேண்​டும்.

ஐசி​யூ.​வில் பணி​யாற்​றும் நர்​ஸ்​களுக்கு முறை​யான பயிற்சி அளிக்​கப்பட வேண்​டும். ஆனால், 24 மணி நேர​மும் ஐசி​யூ.​வில் பணி​யாற்​றும் நர்​ஸ்​கள், நோயாளி​களுக்கு ஏற்​படும் எந்த சிக்​கலை​யும் சமாளிக்​கும் வகை​யில் பயிற்சி பெற வேண்​டும்.

இந்த நீதி​மன்​றத்​தில் மத்​திய சுகா​தா​ரத் துறை சமர்ப்​பித்த வழி​காட்டி நெறி​முறை​களை, மத்​திய அரசின் சுகா​தா​ரத் துறை அமைச்​சகத்​தின் இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்ய வேண்​டும். இவ்​வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த வி​சா​ரணை​யை மே மாதம்​ 18-ம்​ தேதிக்​கு தள்​ளி வைத்​தனர்​.