惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
B
Blog
IT之家
IT之家
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 聂微东
量子位
博客园 - 叶小钗
T
Tailwind CSS Blog
小众软件
小众软件
WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - Franky
雷峰网
雷峰网
博客园 - 三生石上(FineUI控件)
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Blog — PlanetScale
Blog — PlanetScale
V
V2EX
博客园_首页
I
InfoQ
B
Blog RSS Feed
Microsoft Azure Blog
Microsoft Azure Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தில் மாற்றத்தை விரும்பிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!
2026-05-06 · via hindutamil

Updated on

2 min read

தூத்துக்குடி: தேர்தல்களில் வழக்கமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் வாக்குகளை திமுக மொத்தமாக பெறும் நிலையில், இம்முறை தவெகவுக்கு அதிகமான தபால் வாக்குகள் கிடைத்துள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது.

அதிக இடங்களில் வென்றுள்ள தவெக ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலேயே தவெக மகத்தான வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அதிமுகவின் முன்னணி தலைவர்கள் என பலரை தவெக வேட்பாளர்கள் வீழ்த்தியுள்ளனர்.

தபால் வாக்குகள்

வழக்கமாக எல்லா தேர்தல்களிலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மொத்தமாக திமுகவின் பக்கமே இருப்பார்கள். இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செலுத்தும் தபால் வாக்குகளை திமுகவே மொத்தமாக பெறும் நிலை இருக்கும்.

ஆனால், இந்த முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினர் செலுத்திய தபால் வாக்குகளில் தவெகவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. சில தொகுதிகளில் திமுகவின் தோல்விக்கு இந்த தபால் வாக்குகளும் காரணமாக இருந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டபேரவை தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் தபால் வாக்குகளை மிக கணிசமாக பெற்றுள்ளனர். தூத்துக்குடி தொகுதியில் 2,227 தபால் வாக்குகள் பதிவான நிலையில் திமுக வேட்பாளர் கீதாஜீவன் 760 தபால் வாக்குகளை பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக தவெக வேட்பாளர் நாத்துக்கு 636 தபால் வாக்குகள் கிடைத்துள்ளன. அதிமுக வேட்பாளருக்கு 334, நாதக வேட்பாளருக்கு 178 தபால் வாக்குகள் கிடைத்துள்ளன.

திருச்செந்தூர் தொகுதியில் 2,568 தபால் வாக்குகள் பதிவான நிலையில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 1,159 வாக்குகளை பெற்றார். தவெக வேட்பாளர் முருகனுக்கு 501, பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு 494, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஒபிலியாவுக்கு 118 தபால் வாக்குகள் கிடைத்தன.

வைகுண்டம் தொகுதியில் 3,094 தபால் வாக்குகள் பதிவான நிலையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 961 தபால் வாக்குகளும், அதிமுக வேட்பாளருக்கு 916, தவெக வேட்பாளருக்கு 671, நாதக வேட் பாளருக்கு 241 தபால் வாக்குகளும் கிடைத்துள்ளன. கோவில்பட்டி தொகுதியில் 2,723 தபால் வாக்குகள் பதிவான நிலையில் திமுக 840, தவெக 658, அதிமுக 621, நாதக 228 வாக்குகளை பெற்றுள்ளன.

விளாத்திகுளம் தொகுதியில் 2,474 தபால் வாக்குகள் பதிவான நிலையில் திமுக 937, தவெக 589, அதிமுக 418, நாதக 206 வாக்குகளை பெற்றுள்ளன. ஓட்டப்பிடாரம் தொகுதியில் 3,274 தபால் வாக்குகள் பதிவான நிலையில் தவெகவுக்கு 1064 வாக்குகள் கிடைத்துள்ளன. திமுக 615, அமமுக 481, நாதக 313 தபால் வாக்குகளை பெற்றுள்ளன.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினர். தேர்தலுக்கு முன்பாக அரசு சார்பில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சில உறுதிமொழிகளை அளித்து போராட்டங்களை வாபஸ் பெற வைத்தனர்.

இருப்பினும் திமுக அரசு மீதான தங்களது அதிருப்தி குறையாததால் மாற்றத்தை விரும்பி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் தவெகவுக்கு அதிக வாக்குகளை செலுத்தியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

நோட்டா வாக்குகள் குறைவு

வழக்கமாக திமுக, அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பார்கள். இதனால் நோட்டாவுக்கு பதிவாகும் வாக்குகள் அதிகமாக இருக்கும். ஆனால், இம்முறை நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் குறைவாக உள்ளன.

திமுக, அதிமுக கட்சிகளை பிடிக்காதவர்கள் தவெகவுக்கு தங்கள் வாக்குகளை செலுத்தியிருப்பதையே இது காட்டுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தொகுதியில் 853, திருச்செந்தூரில் 722, ஸ்ரீவைகுண்டத்தில் 579, கோவில் பட்டியில் 593, விளாத்திகுளத்தில் 642, ஓட்டப்பிடாரத்தில் 879 வாக்குகள் மட்டுமே நோட்டாவில் பதிவாகியுள்ளன.