惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

P
Proofpoint News Feed
V
V2EX
博客园_首页
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Recent Announcements
Recent Announcements
博客园 - 司徒正美
Microsoft Security Blog
Microsoft Security Blog
K
KPMG report finds enterprise disconnect between AI and its ROI | CIO
Latest news
Latest news
Vercel News
Vercel News
The Register - Security
The Register - Security
T
The Exploit Database - CXSecurity.com
S
Schneier on Security
N
Netflix TechBlog - Medium
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
L
Lohrmann on Cybersecurity
GbyAI
GbyAI
P
Privacy & Cybersecurity Law Blog
T
Tor Project blog
AWS News Blog
AWS News Blog
美团技术团队
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
K
Kaspersky official blog
B
Blog RSS Feed
G
Google Developers Blog
量子位
大猫的无限游戏
大猫的无限游戏
Google DeepMind News
Google DeepMind News
Scott Helme
Scott Helme
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
I
Intezer
雷峰网
雷峰网
Martin Fowler
Martin Fowler
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Blog — PlanetScale
Blog — PlanetScale
IT之家
IT之家
F
Full Disclosure
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 【当耐特】
The Hacker News
The Hacker News
U
Unit 42
S
SegmentFault 最新的问题
I
InfoQ
aimingoo的专栏
aimingoo的专栏
Y
Y Combinator Blog
宝玉的分享
宝玉的分享
罗磊的独立博客
Spread Privacy
Spread Privacy
C
CERT Recently Published Vulnerability Notes

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
தமிழக மாணவர்களின் அரசியல் பேரார்வத்தை ‘அணுகுவது’ எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை
2026-04-29 · via hindutamil

Updated on

4 min read

‘தமிழக தேர்தல் களம் 2026’ தனித்துவமானது மட்டுமல்ல; அரசியல் கட்சிகளுக்கும் குடிமக்களுக்கும் மிக முக்கிய படிப்பினையை தந்த ஜனநாயக நிகழ்வும் கூட. ஆம், நாம் பேசுவது இளம் தலைமுறையினரின் அரசியல் ஆர்வ எழுச்சி பற்றியே.

கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சாரை சாரையாகப் வாக்களிக்க படையெடுத்தது ஒருபக்கம் என்றால், ‘நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று சிறுவர்கள் தங்களது பெற்றோரை ‘இன்ஃப்ளூயன்ஸ்’ செய்தது மறுபக்கம் கவனிக்க வைத்தது.

இந்தப் பின்னணியில்தான் ‘தமிழக இளம் தலைமுறையினர் இன்னும் அரசியல்மயப்படுத்தப்பட வேண்டும். கல்விக் கூடங்களில் கட்சி சார்பின்றி ஆக்கப்பூர்வமான அரசியல் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். மாணவர்களின் அரசியல் புரிதல் என்பது ஆக்கபூர்வமாக இருந்தால் சமூகத்துக்கு நிச்சயம் நன்மை பயக்கும்.

இளைஞர்களின் இந்த ஆர்வம், அரசியல்வாதிகளை இன்னும் பொறுப்புணர்வுடன் செயல்பட வைக்கும் என்பதில் ஐயமில்லை. தற்போது காணப்படும் அரசியல் ஆர்வம் வெறும் தேர்தல் கால உற்சாகத்தோடு நின்றுவிடக் கூடாது. அது ஒரு தெளிவான அரசியல் முதிர்ச்சியாக உருவெடுக்க வேண்டும்” என்கின்றனர் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர்கள்.

கோவை அரசு கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் சிவராஜன் கூறும்போது, “அரசியல் தலைவர்களின் உணர்ச்சிகரமான பேச்சுகள் இளைஞர்களை வாக்குச் சாவடிக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அவர்களுக்குத் தேவையான 'அரசியல் கல்வி' இன்னும் சென்றடையவில்லை என்றே தோன்றுகிறது.

தமிழக இளைஞர்கள் இன்னும் 'அரசியல்மயப்படுத்தப்பட' வேண்டும். இந்திரா காந்தி யார் என்று கேட்டால், 'அவர் காந்தியின் பேத்தி' என்று சொல்லும் அளவுக்குத்தான் இப்போதைய பல இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது. அனைத்து இளைஞர்களும் அப்படி கிடையாது; ஒரு சிலர் இப்படியும் இருக்கிறார்கள்.

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் இளைஞர்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டுவதை இணையத்தில் காண முடிகிறது. சினிமா பிம்பங்களை அரசியலோடு குழப்பிக் கொள்ளும் போக்கு தமிழகத்தில் நீடிப்பதாக தோன்றுகிறது. அரசியலை ஒரு பொழுதுபோக்காக பார்க்காமல், அடுத்த தலைமுறையின் விடியலாக பார்க்க வேண்டும்.

தமிழக இளைஞர்களுடன் ஒப்பிடுகையில், கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இளம் தலைமுறை அரசியல் அறிவு மற்றும் கொள்கை கோட்பாடுகளில் சற்று ஒரு படி தெளிவு மிக்கவர்களாக அறியப்படுகிறார்கள். கேரளா மட்டுமல்லாமல், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மாணவர் பருவத்திலேயே சித்தாந்தங்கள் (Ideologies) விவாதிக்கப்படுகின்றன.

செய்தித்தாளைத் தொடுவதைக் கூடத் தவிர்த்துவிட்டு, சமூக வலைதளங்களில் வரும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்பி, தலைவர்களைத் தீர்மானிக்கும் போக்கு தீங்கானது.

நமது இளைஞர்களைச் சரியான பாதையில் கொண்டு செல்லும் பெரும் பொறுப்பு குடும்பங்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அரசுக்கும் உண்டு. கல்வி என்பது வெறும் வேலை வாய்ப்புக்கானது மட்டுமே என மாறிவிட்டதால், தங்களைச் சுற்றி நடக்கும் சமூக மாற்றங்களை மாணவர்கள் கவனிப்பதில்லை.

குடும்பம் என எடுத்துக் கொண்டால் தாய், தந்தையர் தங்கள் சித்தாந்தங்களைக் குழந்தைகள் மீது திணிக்காமல், அரசியல் விழிப்புணர்வை மட்டும் ஊட்ட வேண்டும். ரீல்ஸ் கலாச்சாரத்தால், அரசியலின் ஆழமான வரலாற்றைக் கற்க இளைஞர்களுக்குப் பொறுமை இல்லை. தலைவரின் கொள்கையை விட, அவரைப் பற்றி வரும் மீம்ஸ்களை வைத்தே அவர் மீதான பிம்பத்தை இளைஞர்கள் கட்டமைக்கிறார்கள். இது தவறான புரிதலுக்கு கொண்டு செல்கிறது.

பள்ளி ,கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு மாதிரி சட்டமன்றம், நாடாளுமன்றம் நடத்தப்பட வேண்டும். கல்விக் கூடங்களில் கட்சி சார்பின்றி ஆக்கப்பூர்வமான அரசியல் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இதை மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு வழிவகுக்கும். இந்த 85% வாக்குப் பதிவு என்பது தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்கான சக்தியாக மாறும். இளைஞர்களின் அரசியல் ஆர்வத்தை மே 4-ம் தேதி தான் முழுமையாக கணிக்க முடியும். அவர்களின் அரசியல் புரிதல் ஆக்கபூர்வமாக இருந்தால் சமூகத்துக்கு நன்மை பயக்கும்” என்றார் முனைவர். சிவராஜன்.

சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை உதவி பேராசிரியர் முனைவர் எஸ்.பார்த்திபன் கூறும்போது, “நடந்து முடிந்த தேர்தலில் இளைஞர்களின் அதீதப் பங்களிப்பு, ஆர்வம் பல விவாதங்களை எழுப்பியுள்ளது உண்மைதான். இளைஞர்களிடம் தற்போது காணப்படும் அரசியல் ஆர்வம் வெறும் தேர்தல் கால உற்சாகத்தோடு நின்றுவிடக்கூடாது. அது ஒரு தெளிவான அரசியல் முதிர்ச்சியாக (Political Maturity) உருவெடுக்க வேண்டும்.

தமிழக அரசியலுக்கும் சினிமாவுக்கும் எப்போதும் பிரிக்க முடியாத பிணைப்பு உண்டு. திரையில் ஒரு மீட்பராக (Savior) காட்டப்படும் நடிகர், நிஜ வாழ்விலும் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்ற உளவியல் தாக்கம் இளைஞர்களிடம் இருப்பதை மறுக்க முடியாது.

‘தவறு செய்யாத ஹீரோ’ என்ற பிம்பம், ஏற்கெனவே இருக்கும் அரசியல் கட்சிகள் மீதான அதிருப்தியோடு சேரும்போது, அது ஒரு வலுவான வாக்குகளாக மாறுவதாக தோன்றுகிறது. ஆனால், இந்த மாற்றம் வெறும் திரைப் பிம்பத்தை மட்டும் நம்பியதா அல்லது கொள்கை மாற்றத்துக்கானதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

நகர்ப்புற இளைஞர்கள் பெரும்பாலும் ஒட்டுமொத்த நிர்வாகத் திறன் (Governance), சர்வதேச / தேசிய அளவிலான மாற்றங்களைக் கணக்கில் கொள்கிறார்கள். மறுபுறம், கிராமப்புற இளைஞர்கள் நேரடிப் பயனளிக்கும் நலத்திட்டங்கள் மற்றும் தங்கள் பகுதிக்குச் செய்யப்பட்ட அடிப்படை வசதிகளை வைத்து அரசியல்வாதிகளை மதிப்பிடுகிறார்கள்.

வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலம் அரசியல் தகவல்கள் மிக வேகமாக இளைஞர்களைச் சென்றடைகின்றன. பெற்றோர்களுக்குத் தெரியாத அரசியல் நுணுக்கங்களைத் தங்களது பிள்ளைகள் விளக்கிச் சொல்லும் போக்கு, குடும்பங்களுக்குள் ஓர் அரசியல் உரையாடலை உருவாக்கியுள்ளது.

<div class="paragraphs"><p>உதவி பேராசிரியர்கள் சிவராஜன், எஸ்.பார்த்திபன், பச்சமுத்து</p></div>

உதவி பேராசிரியர்கள் சிவராஜன், எஸ்.பார்த்திபன், பச்சமுத்து

ஆனால், அது ஆரோக்கியமானதாக மாற வேண்டும். தற்போதைய அரசியல்வாதிகளே தங்களது கொள்கைகள் சித்தாந்தங்களை பின்பற்றி நடப்பதாக தெரியவில்லை. அப்படி இருக்கும்போது தற்போது வாக்குரிமை பெற்றிருக்கும் இளம் வாக்காளர்களை நாம் 'தற்குறிகள்' என விமர்சிப்பது ஏற்புடையதாக இல்லை.

பெரிய தலைவர்களைப் பார்ப்பதற்கு முன்பு தங்கள் வார்டு உறுப்பினர் யார், ஊராட்சி மன்றத் தலைவர் யார் என்பன போன்ற அடிப்படை அரசியலில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். ஆனால், அந்தச் சூழல் தற்போது இல்லை.

இனி வரும் காலங்களில் இளைஞர்கள் இன்னும் அரசியல்படுத்தப்பட வேண்டும். இன்று ஓட்டு செலுத்துவது ஜனநாயக கடமை என உணர்ந்த இளைஞர்கள் இனி அது குறித்து தேட ஆரம்பித்து ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

கல்லூரிகளில் அரசியல் விவாதங்கள் குறைந்து வருவது அல்லது அதற்கான களம் இல்லாமல் இருப்பது ஒரு வருத்தமான விஷயம். ஆசிரியர்கள் - மாணவர்களிடையே விமர்சன ரீதியான சிந்தனையை (Critical Thinking) தூண்டாதபோது, இளைஞர்கள் வெறும் உணர்ச்சிவசப்பட்ட அரசியலை நோக்கித் தள்ளப்படும் அபாயம் உள்ளது. கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததும் கவனிக்கபட வேண்டிய விஷயம்.

இளைஞர்களின் இந்த அதிகப்படியான ஆர்வம், அரசியல்வாதிகளை இன்னும் பொறுப்புணர்வுடன் செயல்பட வைக்கும் என்பதில் ஐயமில்லை. மாணவர்கள் பகுத்தறிவடன் கூடிய அரசியல் விவாதங்களில் ஈடுபட வேண்டும். அதற்கு கல்வி நிறுவனங்கள் சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். அரசாங்கமும் அவர்களுக்கு துணைநிற்க வேண்டும்” என்கிறார் முனைவர் எஸ்.பார்த்திபன்.

வேல்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் அரசியல் அறிவியல் துறையின் உதவி பேராசிரியர் பச்சமுத்து கூறும்போது, “தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் கட்சி தோன்றும்போது, சமூக வலைதளங்களில் அதற்கான ஆதரவு மிகுந்ததாக காட்டப்படுவது இயல்பான ஒன்று. ஆனால், இது புதிய நிகழ்வு அல்ல. இன்றைய இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு ஆழமான புரிதலுடன் இணைந்திருக்கிறதா என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.

மத்தியிலும் மாநிலத்திலும் யார் ஆட்சி செய்கிறார்கள், தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் எவை, அவற்றின் சின்னங்கள் என்னென்ன, ஓர் அரசு எப்படி செயல்படுகிறது போன்ற அடிப்படை விஷயங்களில்கூட சிலருக்கு தெளிவு இல்லாத நிலை காணப்படுகிறது. கல்லூரியில் மாணவர்களிடம் பேசும்போது எங்களுக்கு ‘மாற்றம் தேவை’ என சொல்கிறார்கள். அதைத் தாண்டி அவர்களால் வேறு எதுவும் பேச முடியவில்லை.

ஒரு பைக், கார் அல்லது மொபைல் வாங்குவதற்காக இளைஞர்கள் செலவிடும் நேரம் மற்றும் ஆர்வத்தை புத்தக வாசிப்பு, அரசியல் கொள்கைகள், கட்சிகள் மற்றும் தலைவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுவதிலும் செலவிட வேண்டும்.

தமிழகத்தின் அரசியல் வரலாறு, இடஒதுக்கீட்டு கொள்கை, இந்திய அரசியலமைப்பு, பல்வேறு கட்சிகளின் நோக்கங்கள் மற்றும் அவற்றின் தலைவர்களின் சிந்தனைகள் போன்றவை குறைந்தபட்சமாக இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த அடிப்படை அறிவுதான் ஒரு பொறுப்பான வாக்காளரை உருவாக்கும். எஸ்.ஐ.ஆர் காரணமாகவே வாக்கு சதவீதம் அதிகரித்து இருப்பதாகவே தெரிகிறது.

இந்தத் தேர்தலில் இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் ஒரு வகையில் கட்டுப்பாட்டை மீறிய உற்சாகத்துக்குள் சென்றனர். சிலர் கட்சிகளின் ‘ஐடி வீரர்கள்’ ஆக மாறி, சமூக வலைதளங்களில் ஒருதலைப்பட்சமான பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். சினிமா மற்றும் அரசியல் இரண்டையும் ஒரே தராசில் போட்டு அளவிடும் பழக்கம் இன்று பெரும் பிரச்சினையாக உள்ளது. சினிமா, கிரிக்கெட்டில் உள்ள ஆர்வம் கூட அரசியலில் இல்லை என்றே எண்ண வைக்கிறது.

சமூக வலைத்தளங்களில் உருவாகும் இந்த பிம்பங்களைக் கொண்டு மட்டும் முடிவெடுப்பது தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும்.

முடிவாக, இளைஞர்களின் அரசியல் பங்கேற்பு அதிகரிப்பது ஜனநாயகத்துக்கு நல்ல அறிகுறிதான். ஆனால் வன்முறையற்ற, ஆரோக்கியமான அரசியல் களத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கு உண்டு. இந்த அடிப்படைப் புரிதல் இல்லாதபோதுதான், அரசியல் பஞ்ச் வசனங்களாக சுருங்கிப் போகிறது” என்றார் உதவிப் பேராசிரியர் பச்சமுத்து.