惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
爱范儿
爱范儿
博客园 - 三生石上(FineUI控件)
Microsoft Security Blog
Microsoft Security Blog
Google DeepMind News
Google DeepMind News
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
GbyAI
GbyAI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
V
V2EX
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
量子位
博客园_首页
T
Tailwind CSS Blog
aimingoo的专栏
aimingoo的专栏
A
About on SuperTechFans
T
The Blog of Author Tim Ferriss
Stack Overflow Blog
Stack Overflow Blog
Recent Announcements
Recent Announcements
P
Proofpoint News Feed
博客园 - 司徒正美
有赞技术团队
有赞技术团队
Engineering at Meta
Engineering at Meta
Last Week in AI
Last Week in AI
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேகேதாட்டு விவகாரத்தில் தனித் தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவ...
மோகன் கணபதி · 2026-06-19 · via hindutamil

Updated on: 

சென்னை: “நீண்ட சட்டப்போராட்டத்தின் அடிப்படையில் நிலைநிறுத்தப்பட்ட தமிழக மக்களின் உரிமை, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம், 20 மாவட்டங்களுக்கான குடிநீர் ஆதாரம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் முயற்சியை கண்டித்து தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது,” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “முதல்வர் தனித்தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார். அதில் அதிமுக சார்பில் எனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படுவதை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது 5.12.2014 அன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் 28.03.2015 அன்று பிரதமரை சந்தித்து கொடுத்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை திரட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாகவும், கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் பிரதமர் உறுதி அளித்தார்.

மேலும், முதல்வராக இருந்த ஜெயலலிதா 25.04.2015 அன்று பிரதமரை நேரில் சந்தித்து, மேகேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்டக்கூடாது என அம்மாநில அரசுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளும் கடிதத்தை அளித்தார். அதோடு, 07.08.2015, 14.06.2016 ஆகிய நாட்களில் முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபடக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மீறும் வகையிலும், தமிழ்நாடு அரசின் ஒப்புதலைப் பெறாமலும் காவிரியின் குறுக்கே மேகதாது உட்பட எந்த ஒரு கட்டுமான திட்டத்தையும் கர்நாடக அரசு உத்தேசிக்குமானால் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் 18.08.2016 அன்று விதி எண் 110 விதியின் கீழ் உறுதிபட தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பல மாநிலங்கள் வழியாகப் பாயும் நிதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர முடியாது என்று 1991, நவம்பரில் உச்ச நீதமன்றம் தெரிவித்த கருத்து மீண்டும் இந்த தீர்ப்பில் உறுதி செய்யப்படுகிறது. 1892, 1924ம் ஆண்டுகளின் ஒப்பந்தம் செல்லத்தக்கதல்ல என்ற கர்நாடக அரசின் வாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

தமிழகத்தின் காவிரி பாசன பரப்பான 24.708 லட்சம் ஏக்கர் என்பதை 21 லட்சம் ஏக்கராக குறைக்க வேண்டும் என கர்நாடக அரசு நடுவர் மன்றத்தின் முன் வாதிட்டது. இதை காவிரி நடுவர் மன்றம் ஏற்கவில்லை. தமிழகத்தின் காவிரி பாசன பரப்பு 24.708 லட்சம் ஏக்கர் என காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாதகம் ஏதும் இல்லாமல், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி மாதாதந்திர அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு தமிழகத்துக்கு நீர் வழங்க வேண்டும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கீழ் படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல், மேல் படுகை மாநிலங்கள் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க, காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாட்டு அணையைக் கட்டக்கூடாது என நான் முதல்வராக இருந்த காலகட்டத்தில் பலமுறை பிரதமருக்கு நேரிலும் கடிதம் மூலமாகவும் வலியுறுத்தி உள்ளேன். கர்நாடக அரசு, மேகேதாட்டு அணையை கட்டினால் அது தமிழகத்தின் காவிரி படுகையை பாலைவனமாக்கிவிடும்; தமிழகத்தின் உரிமையையும் அது பறித்துவிடும்.

இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

நீண்ட சட்டப்போராட்டத்தின் அடிப்படையில் நிலைநிறுத்தப்பட்ட தமிழக மக்களின் உரிமை, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம், 20 மாவட்டங்களுக்கான குடிநீர் ஆதாரம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை வழங்கிய இறுதித் தீர்ப்பை மதிக்காமல் மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு தன்னிச்சையாக நிதி ஒதுக்கீடு செய்ததும், திருத்திய தொழில்நுட்ப திட்ட அறிக்கையை மீண்டும் இம்மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது. எனவே, முதல்வர் கொண்டு வந்த அரசின் தனித்தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது” என தெரிவித்தார்.