惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
爱范儿
爱范儿
博客园_首页
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
大猫的无限游戏
大猫的无限游戏
月光博客
月光博客
IT之家
IT之家
WordPress大学
WordPress大学
N
Netflix TechBlog - Medium
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
The GitHub Blog
The GitHub Blog
C
Check Point Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - Franky
G
Google Developers Blog
V
V2EX
雷峰网
雷峰网
美团技术团队
博客园 - 【当耐特】
人人都是产品经理
人人都是产品经理
有赞技术团队
有赞技术团队
MongoDB | Blog
MongoDB | Blog
V
Visual Studio Blog
J
Java Code Geeks

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தூத்துக்குடி மாவட்டத்துக்கு மீண்டும் இரண்டு அமைச்சர்கள்!
2026-05-22 · via hindutamil

Updated on

1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்துக்கு மீண்டும் இரண்டு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இம்முறை தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் வென்றவர்கள் அமைச்சர்களாகி உள்ளனர்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராக தூத்துக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற ஸ்ரீநாத், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சராக ஓட்டப்பிடாரம் மதன்ராஜா ஆகியோர் பதவியேற்றனர்.

ஸ்ரீநாத், சினிமா நடிகர் மற்றும் இயக்குநராக பணியாற்றியவர். முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பரான இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜி.ஆர்.எட்மண்ட், பழம்பெரும் நடிகர் சந்திரபாபு ஆகியோரது உறவினர் ஆவார். முதல் முறையாக தூத்துக்குடி தொகுதியில் களம் கண்ட இவர், யாரும் எதிர்பாராத வகையில் திமுக முன்னாள் அமைச்சர் பி.கீதாஜீவனை 37,731 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

மீனவர் சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் வரவேற்றுள்ளனர்.

இதேபோல், ஓட்டப்பிடாரம் தனித் தொகுதியில் முதல் முறையாக களம் கண்ட பி.மதன்ராஜா, திமுக வேட்பாளர் ராமஜெயத்தை 29,083 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வென்ற ஒருவர் அமைச்சராவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடதக்கது. இதனால் ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சர் பதவி என்பது கடந்த 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வருகிறது. 2011-ல் அமைந்த அதிமுக அமைச்சரவையில் தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் அமைச்சரானார்கள்.

2016-ல் அமைந்த அதிமுக அமைச்சரவையில் ஸ்ரீவைகுண்டம் சண்முகநாதன் மற்றும் கோவில்பட்டி கடம்பூர் ராஜூ ஆகியோர் அமைச்சர்களானார்கள். தொடர்ந்து 2021-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த திமுக அமைச்சரவையில் தூத்துக்குடி பி.கீதாஜீவன், திருச்செந்தூர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அமைச்சர்களானார்கள்.

அந்த வரிசையில் தற்போது தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள இருவருக்கும் ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன.

தொழில் துறை, வேளாண்மை, நீர்வளம், மீன்வளம், உப்புத் தொழில் போன்ற முக்கிய துறைகளில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவைகளை சமாளித்து மாவட்டத்தை எவ்வாறு வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.