惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
有赞技术团队
有赞技术团队
罗磊的独立博客
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
U
Unit 42
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Recent Announcements
Recent Announcements
Y
Y Combinator Blog
Vercel News
Vercel News
Martin Fowler
Martin Fowler
V
V2EX
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
L
LangChain Blog
云风的 BLOG
云风的 BLOG
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
aimingoo的专栏
aimingoo的专栏
G
Google Developers Blog
The GitHub Blog
The GitHub Blog
N
Netflix TechBlog - Medium
Google DeepMind News
Google DeepMind News
雷峰网
雷峰网
阮一峰的网络日志
阮一峰的网络日志
F
Fortinet All Blogs

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வடபழனி முருகன் கோயிலில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தை புதுப...
செய்திப்பிரிவு · 2026-06-03 · via hindutamil

Updated on: 

சென்னை: வடபழனி முரு​கன் கோயி​லில் உள்ள வள்ளி திருமண மண்​டபத்தை புதுப்​பி்க்​கும் பணி​களுக்கு விதிக்​கப்​பட்ட தடையை நீ்ட்​டித்​து, உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கோயில் உபரி நிதி​யைக் கொண்டு திருமண மண்​டபங்​கள் கட்​டவோ அல்​லது புதுப்​பிக்​கும் பணி​களை மேற்​கொள்​ளவோ கூடாது என சென்னை உயர் நீதி​மன்​றம் கடந்​தாண்டு ஆக.19 அன்று உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை எதிர்த்​து, அரசு தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் கடந்​தாண்டு ஏப்​ரல் முதல் வடபழனி முரு​கன் கோயி​லில் உள்ள வள்ளி திருமண மண்​டபத்தை புதுப்​பித்​தல், புதி​தாக ஜெனரேட்​டர் அமைத்​தல், அறநிலை​யத் துறை துணை ஆணை​யர் அலு​வல​கத்தை சீரமைத்​தல் என ரூ. 8.72 கோடிக்​கான ஒப்​பந்​தப் பணி​களை அறநிலை​யத் துறை மேற்​கொண்டு வரு​வ​தால் இப்​பணி​களுக்கு தடை விதிக்க வேண்​டும் எனக் கூறி, தேவா என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​க​னவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், இதுதொடர்​பாக, இந்து சமய அறநிலை​யத் துறை பதிலளிக்க உத்​தர​விட்டு கட்​டு​மானப் பணி​களை தொடரக்​கூ​டாது என இடைக்​காலத் தடை விதித்​திருந்​தது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, அறநிலை​யத் துறை தரப்​பில் பதிலளிக்க அவகாசம் கோரப்​பட்​டது.

அதையடுத்​து, இதுதொடர்​பாக, இரு வாரங்​களில் பதிலளிக்க வேண்​டுமென அறநிலை​யத்​துறைக்​கு, நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

அது​வரை, வடபழனி முரு​கன் கோயி​லில் நடை​பெறும் கட்​டு​மானப் பணி​களுக்கு விதிக்​கப்​பட்ட தடையை நீட்​டித்​தும், தற்​போதைய நிலையே தொடர வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டு, வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​தனர்​.