惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

大猫的无限游戏
大猫的无限游戏
U
Unit 42
T
Tailwind CSS Blog
罗磊的独立博客
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
Recent Announcements
Recent Announcements
博客园 - 聂微东
Jina AI
Jina AI
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 【当耐特】
爱范儿
爱范儿
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
GbyAI
GbyAI
V
V2EX
博客园 - 三生石上(FineUI控件)
I
InfoQ
雷峰网
雷峰网
G
Google Developers Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
B
Blog
腾讯CDC
A
About on SuperTechFans
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“4 தொகுதிகளிலும் பொது வேட்பாளர்களை நிறுத்துவோம்” - தவெகவு...
அ.முன்னடியான் · 2026-05-27 · via hindutamil

Updated on: 

புதுச்சேரி: “இடைத்தேர்தல் வந்தால் 4 வேட்பாளர்களும் படுதோல்வி அடைவார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம். அந்தளவுக்கு எங்களை தள்ளாதீர்கள்.” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி, புதுச்சேரியில் உள்ள பாமக முன்னாள் மாநில அமைப்பாளர் தன்ராஜ் வீட்டுக்கு இன்று வருகை தந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மக்களுடைய விருப்பத்துக்கு எதிராக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்களை எந்தக் காரணமும் இன்றி திடீரென வெற்றி பெற்ற 20 நாட்களில் ராஜினாமா செய்ய வைத்து அடுத்த 10 நிமிடத்தில் தவெகவில் இணைத்துள்ளனர்.

இது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல, ஒரு மோசடி. நாங்கள் மட்டும் அல்ல தமிழக மக்களும் இதனை விரும்பவில்லை. கோடிக்கணக்கான இளைஞர்கள் ஒரு மாற்றம் வர வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய்யை வெற்றி பெற வைத்தார்கள். இது அந்த இளைஞர்களுடைய நம்பிக்கைக்கு எதிரான செயல். இது நேர்மையான முறையில் ஆட்சி செய்வதும் கிடையாது. இது குதிரை பேரத்தைவிட மோசமானது.

தமிழகம் இதுபோன்ற ஒரு சூழலை பார்த்தது கிடையாது. வாக்களித்த மக்கள் அவர்கள் என்ன தவறு செய்தார்கள். 20 நாட்களில்  ராஜினாமா செய்து உடனே இன்னொரு கட்சியில் சேர்வது நல்லதல்ல.

இடைத்தேர்தல் வந்தால் 4 வேட்பாளர்களும் படுதோல்வி அடைவார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.  அந்தளவுக்கு எங்களை தள்ளாதீர்கள்.

மதுராந்தகம், பெருந்துரை, தாராபுரம் ஆகிய 3 தொகுதிகளின் வெற்றிக்கு பாமகவின் பங்களிப்பு மிகப்பெரியது. அங்குள்ள மக்கள் என்ன முட்டாள்களா? அல்லது தமிழக மக்கள் முட்டாள்களா?  இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். முதல்வர் விஜய், அவரது அமைச்சர்களும் மக்களை அலட்சியப்படுத்தாதீர்கள். கோடிக்கணக்கான இளைஞர்களும் இடைத்தேர்தலில் உங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள்.  

எவ்வளவு சிரமப்பட்டு இவர்களை எம்எல்ஏக்களாக எங்கள் கூட்டணி உருவாக்கி இருக்கின்றோம். அவர்களை வேண்டுமென்றே ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளீர்கள்.

மரகதம் குமரவேல் இனி மதுராந்தகம் தொகுதிக்குள் போக முடியாது. தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துரையிலும் இதே நிலை தான். இதனை நிறுத்திக்கொள்ளுங்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.

மக்கள் உங்களுக்கு 108 எம்எல்ஏக்களை அளித்து ஒரு தீர்ப்பை கொடுத்துள்ளனர். அந்த தீர்ப்பை மதியுங்கள். எதிர்கட்சினருக்கு பதவி, பணம் கொடுத்து ஆசைகாட்டி ராஜினாமா செய்ய வைப்பது என்ன செயல். இதனை நிறுத்திக்கொள்ளுங்கள்

மேகேதாட்டு தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினை. அதில் கவனத்தை செலுத்துங்கள்.

5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று சொன்னீர்கள். முதல்கட்டமாக ரூ. 50 ஆயிரம் தள்ளுபடி செய்திருக்கிறீர்கள். 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாக்க ஆய்வை நடத்தி இருக்கிறீர்கள். இதையெல்லாம் நாங்கள் வரவேற்கின்றோம்.

சமுக நீதி கணக்கெடுப்பை நடத்தி தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களில் 2.5 கோடி மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துங்கள். அதனை விடுத்து ஜனநாயகத்துக்கு எதிரான செயலை செய்ய வேண்டாம்,” என்றார்.

தொடர்ந்து அவர்,  “தவெக அரசுக்கு ஓரிரு மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் நாங்கள் கேட்போம். திமுக 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள் கடந்த 5 ஆண்டு காலத்தில் 66 வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக நிறைவேற்றி உள்ளனர். ஆகவே தவெகவுக்கு சில காலம் கொடுக்க வேண்டும்.  

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. சட்டப்பேரவையில் வாக்கெடுப்பை பாமக எதிர்க்கவில்லை. ஆதரிக்கவும் இல்லை. சமூக நீதிக் கணக்கெடுப்பு நடத்துவோம், டாஸ்மாக்கில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம், தனியார் தொழிற்சாலைகளில் 75 விழுக்காடு உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, மணல் கொள்ளையை தடுப்போம் போன்ற வாக்குறுதிகளை முதல்வர் விஜய் கொடுத்துள்ளார்.

அத்தனை வாக்குறுதிகளும் பாமக கொடுத்த வாக்குறுதி. எங்களுக்கு தமிழக மக்கள் பயன்பெற வேண்டும். கண்மூடித்தனமாக நாங்கள் எதிர்க்க மாட்டோம். அதே நேரத்தில் கணமூடித்தனமாக நாங்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டோம. அதனால் தான் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பின் போது பாமக நடுநிலை வகித்தது.” என்று தெரிவித்தார்.