惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
M
MIT News - Artificial intelligence
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 聂微东
量子位
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
博客园 - 【当耐特】
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
小众软件
小众软件
Stack Overflow Blog
Stack Overflow Blog
Vercel News
Vercel News
D
Docker
J
Java Code Geeks
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - Franky
Recent Announcements
Recent Announcements
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
MongoDB | Blog
MongoDB | Blog
D
DataBreaches.Net
Y
Y Combinator Blog
云风的 BLOG
云风的 BLOG
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“சமூக நீதி சர்வே அறிவிப்புக்காக முதல்வர் விஜய்யை எவ்வளவு ...
வெற்றி மயிலோன் · 2026-06-18 · via hindutamil

Updated on: 

சென்னை: “மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு, தமிழ்நாட்டில் சமூக நீதி சர்வே நடத்தப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாமகவின் 46 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் விஜய்யை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சட்டப்பேரவையில் தமிழக அரசின் நடப்பாண்டுக்கான கொள்கை ஆவணமான ஆளுனர் உரை இன்று படிக்கப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரால் படித்தளிக்கப்பட்ட ஆவணத்தில், ‘‘ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவிலான பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூக நீதி என்பது இந்த அரசின் அடிப்படைக் கொள்கை.

இந்தக் கொள்கை மற்றும் வாக்குறுதியை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பினை மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இணைந்து விரைந்து முடிக்க நாம் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னர் தமிழ்நாடு அரசு சமூக நீதி கணக்காய்வினை நடத்தும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஒற்றை சமூக நீதி அறிவிப்புக்காகவே முதல்வர் விஜய்யை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதற்காக தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் பாமக சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு மாநிலத்தின் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய அடிப்படையான தேவை அந்த மாநிலத்தில் வாழும் அனைத்து சமூக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட தரவுகள் தான். சமூக நீதி சர்வே எனப்படும் சாதிவாரி சர்வேயை நடத்துவதன் மூலம்தான் இந்தத் தரவுகளைத் திரட்ட முடியும். அதனால், தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் சாதிவாரி கணக்கெடுப்புகளை தனித்தனியாக நடத்த வேண்டும் என்று 46 ஆண்டுகளாக பாட்டாளிகள் பாடுபட்டு வருகின்றனர்.

1980-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி மருத்துவர் ராமதாஸின் அயராத முயற்சியால் வன்னியர் சங்கம் நிறுவப்பட்டபோது நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்களில் முதல் தீர்மானமே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான்.

அதன்பின் கடந்த 46 ஆண்டுகளில் இந்தக் கோரிக்கையை ஆயிரமாயிரம் முறை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியிருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டில் தொடங்கி டெல்லி வரை ஏராளமான போராட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் உள்ளிட்ட மக்கள் இயக்கங்களையும் பாமக நடத்தியிருக்கிறது. அவற்றில் சமூக நீதி சர்வே நடத்தப்பட வேண்டும் என மீண்டும், மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கும் சமூக நீதி சர்வே அவசியமாகும். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தியதாலும், பிரதமர்களுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதியதாலும் தேசிய அளவில் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, வீட்டுப் பட்டியல் தயாரிப்பு பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் கூட, மாநில அளவில் சமூகநீதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு 2008-ஆம் ஆண்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சமூக நீதி சர்வே எனப்படும் சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்தியது. கடந்த ஆட்சிகளின் போது முதலமைச்சர்களிடம் இதற்கான கோரிக்கை மனுக்களை பா.ம.க. வழங்கியது.

2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்னர், கடந்த மே 11ஆம் தேதி எனது இல்லத்திற்கு வந்து என்னை சந்தித்த முதல்வர் விஜய்யிடம், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூக நீதி சர்வே நடத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்தினேன். அதன் தொடர்ச்சியாக கடந்த 5-ஆம் தேதி சென்னையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி சர்வேயை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.

தொடர்ந்து முதல்வர் விஜய்யை கடந்த 9-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் சந்தித்து, அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவுகளை விளக்கியதுடன், சமூகநீதி சர்வே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதை ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய், எங்களின் கொள்கையும் அது தான் என்று கூறி தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

அதை நிறைவேற்றும் வகையில் ஆளுநர் உரையில் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை எந்த பெயரில் நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்ததோ, அதே சமூக நீதி சர்வே என்ற பெயரில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 95 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பும், சமூக நீதி சர்வேயும் நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியான தருணம் சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.

தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்த வேண்டும் என்று 1980களில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் தொடங்கி, கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின் வரை கடந்த 46 ஆண்டுகளில் முதல்வராக இருந்த அனைவரிடமும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினோம். ஆனால், அவர்களின் ஆட்சிக் காலங்களில் இது சாத்தியமாகவில்லை. முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் தான் சமூக நீதி சர்வேயை சாத்தியமாக்குவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் பாட்டாளி மக்கள் கட்சியின் 46 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது. இதை பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கவில்லை. கடந்த 46 ஆண்டு கால எங்களின் சமூக நீதிப் பயணத்தில் தோளோடு தோள் நின்ற, போராட்டங்கள், மாநாடுகள், மக்கள் இயக்கங்கள் முதல் அண்மையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உள்ளிட்ட அனைவரின் வெற்றியாகத் தான் இதை நான் பார்க்கிறேன். அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள். நிறைவாக, தமிழ்நாட்டில் சமூக நீதி சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிடச் செய்த தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்க்கு தமிழக மக்கள் சார்பில் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.