惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
人人都是产品经理
人人都是产品经理
爱范儿
爱范儿
云风的 BLOG
云风的 BLOG
Last Week in AI
Last Week in AI
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
B
Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
H
Help Net Security
B
Blog RSS Feed
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
N
Netflix TechBlog - Medium
S
SegmentFault 最新的问题
The Cloudflare Blog
I
InfoQ
美团技术团队
博客园 - 三生石上(FineUI控件)
MyScale Blog
MyScale Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 司徒正美
L
LangChain Blog
A
About on SuperTechFans
T
The Blog of Author Tim Ferriss
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மதுரையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: இன்று கா...
2026-04-29 · via hindutamil

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை விழாவின் 10-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் மணக்கோலத்தில் அருள்பாலித்தனர். உடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளினர். | படம்: நா.தங்கரத்தினம் |

Updated on

2 min read

மதுரை: மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் சித்​திரைத் திரு​விழா​வின் 10-ம் நாளான நேற்று காலை​ மீனாட்​சி- சுந்​தரேசுவரர் திருக்​கல்​யாணம் கோலாகல​மாக நடை​பெற்​றது. பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​களின் தரிசனம் செய்தனர்.

அப்​போது பெண்​கள் புது மாங்​கல்ய கயிறு அணிந்து கொண்​டனர். திரு​விழா​வின் 11-ம் நாளான இன்று (ஏப்.29) தேரோட்​டம் நடை​பெறுகிறது. உலகப் புகழ்​பெற்ற மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லின் சித்​திரைத் திரு​விழா ஏப்​.19-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்கி ஏப்​.30-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

திரு​விழா நாட்​களில் காலை, மாலை வேளை​களில் சுவாமி, அம்​மன் பல்​வேறு வாக​னங்​களில் எழுந்​தருளினர். விழா​வின் 10-ம் நாளான நேற்று (ஏப்.28) முக்​கிய நிகழ்ச்​சி​யான மீனாட்​சி-சுந்​தரேசுவரர் திருக்​கல்​யாண வைபவம் நடந்தது.

இதை முன்​னிட்டு கோயி​லிலிருந்து அதி​காலை 4 மணி​யள​வில் வெள்ளி சிம்​மாசனத்​தில் புறப்​பட்ட மீனாட்சி அம்​மன், பிரி​யா​விடை சுந்​தரேசுவரர் நான்கு மாசி வீதி​களில் பல்​வேறு மண்​டகப்​படிகளில் எழுந்​தருளினர்.

திருக்​கல்​யாணத்​தில் பங்​கேற்க திருப்​பரங்​குன்​றம் முரு​கன் கோயி​லிலிருந்து புறப்​பட்ட சுப்​பிரமணிய சுவாமி- தெய்​வானை, பவளக்​க​னி​வாய் பெரு​மாள் நேற்று அதி​காலை​யில் கோயிலுக்கு வந்​தடைந்​தனர்.

திருக்​கல்​யாணத்தை முன்​னிட்டு கோயில் வளாகத்​தில் ஆடி வீதி​யில் திருக்​கல்​யாண மேடை 10 டன் மலர்​களால் அலங்​கரிக்​கப்​பட்​டிருந்​தது. திருக்​கல்​யாண மேடை​யில் முதலில் திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி, தெய்​வானை​யுடன் காலை 8.07 மணிக்கு எழுந்​தருளினர்.

பின்பு பிரி​யா​விடை​யுடன் சுந்​தரேசுவரர் காலை 8.09 மணிக்கு எழுந்​தருளினார். மீனாட்சி அம்​மன் 8.17 மணி​யள​வில் எழுந்​தருளினார். பவளக்​க​னி​வாய் பெரு​மாள் காலை 8.20 மணி​யள​வில் எழுந்​தருளி​னார்.

பின்​னர் காலை 8.30 மணி​யள​வில் மங்கல வாத்​தி​யங்​கள் முழங்க விநாயகர் பூஜை ஹோமத்​துடன் திருக்​கல்​யாணம் தொடங்​கியது. சிவாச்​சா​ரி​யார்​கள் வேதமந்​திரங்​கள் முழங்க பூஜைகள் செய்​தனர்.

பூஜைக்கு பின்பு காலை 8.43 மணிக்கு சுவாமி அம்​மனுக்கு காப்பு கட்​டப்​பட்​டது. காலை 8.45 மணி​யள​வில் பவளக்​க​னிவாய் பெரு​மாள் தாரை​வார்க்​கும் வைபவமும் 8.49-க்கு மாலைகள் மாற்​றும் வைபவமும் நடந்​தது.

கோயில் நிர்​வாகம் சார்​பில் சுவாமி, அம்​மனுக்கு பட்டு வஸ்​திரம் சாற்​றப்​பட்​டது. காலை 8.54 மணியளவில் சுந்​தரேசுவரர் மங்கல நாண் அணிவிக்க திருக்​கல்​யாணம் கோலாகலமாக நடை​பெற்​றது.

பின்பு தீப, தூப ஆராதனை​கள் நடை​பெற்​றன. அப்​போது பெண்​கள் புது திரு​மாங்​கல்ய கயிறு அணிந்து கொண்​டனர்.

இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்கேற்று மீனாட்சி அம்மனையும் சுந்தரேசு வரரையும் தரிசனம் செய்தனர். பின்​னர் சுவாமி​யும், அம்​மனும் பழைய திருக்​கல்​யாண மண்​டபத்​தில் எழுந்​தருளினர்.

அங்​கும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். இவ்​விழா​வில் அமைச்​சர்​கள் சேகர்​பாபு, பி.மூர்த்​தி, பழனிவேல் தியாக​ராஜன், ஆட்​சி​யர் பிரவீன்​கு​மார், மாநக​ராட்சி ஆணை​யர் சித்​ரா, எம்​எல்​ஏக்​கள் செல்​லூர்கே.​ராஜூ, ராஜன் செல்​லப்​பா,அறங்​காவலர் குழுத் தலை​வர் ருக்​மணி பழனிவேல்​ராஜன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

நேற்று இரவில் யானை வாக​னத்​தில் தங்க அம்​பாரி​யில் பிரி​யா​விடை சுந்​தரேசுவரர், ஆனந்​த​ராயர் பூப்​பல்​லக்​கில் மீனாட்சி அம்​மன் நான்கு மாசி வீதி​களில் வலம்வந்து அருள்பாலித்தார். மீனாட்​சியை திருக்​கல்​யாண கோலத்​தில் திரளான பக்​தர்​கள் தரிசித்​தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று (ஏப்​.29) காலை 6.30 மணி​யள​வில் நான்கு மாசி வீதி​களில் தேரோட்​டம் நடை​பெறுகிறது. 12-ம் நாள் (ஏப்.30) தீர்த்த பூஜை​யுடன் திரு​விழா நிறைவு​பெறுகிறது.