惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
博客园 - Franky
MyScale Blog
MyScale Blog
L
LangChain Blog
Martin Fowler
Martin Fowler
Recent Announcements
Recent Announcements
Stack Overflow Blog
Stack Overflow Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 司徒正美
量子位
A
About on SuperTechFans
C
Check Point Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Last Week in AI
Last Week in AI
小众软件
小众软件
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
I
InfoQ
V
Visual Studio Blog
Vercel News
Vercel News
B
Blog
爱范儿
爱范儿
aimingoo的专栏
aimingoo的专栏
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெக​வுடன் திடீர் கூட்​ட​ணி: இனி யார் நம்மை நம்புவார்கள்?
2026-05-08 · via hindutamil

Updated on

2 min read

அண்​மை​யில் நடந்த முடிந்த தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் காங்​கிரஸ் 28 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு 5 இடங்​களில் வென்​றுள்​ளது. இந்த வெற்றி காங்​கிரஸ் கட்​சி​யின் சொந்த பலத்​தால் கிடைத்​து​விட​வில்​லை. திமுக கூட்​ட​ணி​யால்​தான் சாத்​தி​ய​மானது. நான் எம்​.பி.​யாக இருந்த மயி​லாடு​துறை திமுக கூட்​ட​ணிக்கு எஃகு கோட்​டை​யாக இருந்​துள்​ளது. காரணம் மயி​லாடு​துறை மக்​கள​வைத் தொகு​திக்கு உட்​பட்ட 6 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் 5 இடங்​களை திமுக கூட்​டணி கட்​சிகள் வென்​றுள்​ளன. இரண்டு இடங்​கள் திமுக​வுக்​கும், தேமு​திக, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக், காங்​கிரஸ் கட்​சிகளுக்கு தலா ஓர் இடமும் கிடைத்​துள்​ளன.

அதாவது 5 தொகுதி​களில் விஜய்​யின் தவெக​வுக்கு எதி​ராக மக்கள் வாக்​களித்​துள்​ளனர். எனவே, மக்​கள் தீர்ப்பு திமுக கூட்டணிக்கு ஆதர​வாக​வும் தவெக​வுக்கு எதி​ராக​வும் அமைந்​திருப்​ப​தையே இந்த முடிவு​கள் காட்​டு​கின்​றன. கடந்த 35 ஆண்டு காலமாக தனித்​து​வ​மிக்க மயி​லாடு​துறை தொகு​தி​யுடன் கொண்ட என் தொடர்​பின் பின்​னணியி​லிருந்தே இதனை ஆழ்ந்த வருத்​தத்​துட​னும் துயரத்​துட​னும் தெரிவிக்​கிறேன்.

அதே​நேரத்​தில் மாநில அளவி​லான மக்​கள் தீர்ப்​பு, திமுக-அ​தி​முக ஆகிய இரு திரா​விட கட்​சிகளுக்கு எதி​ராக​வும், விஜய்​யின் தவெக​வுக்கு ஆதர​வாக​வும் அமைந்​துள்​ளது என்​பது உண்​மையே. விஜய் முற்​றி​லும் மதச்​சார்​பற்​றவர் என்​பதும், பரந்த திரா​விட ஒரு​மைப்​பாட்​டுக்கு உட்​பட்​ட​வர் என்​பதும் உண்​மை​தான். அதில் எள்​ளள​வும் சந்​தேகம் இல்​லை. ஆனால், நீண்​ட​கால நம்​பக​மான கூட்​ட​ணிக் கட்​சியை காங்​கிரஸ் இப்​படி திடீரென்று கைவிடு​வது மலி​வான சந்​தர்ப்​ப​வாத அரசி​யல் வாசனையை வீசுகிறது. சந்​தர்ப்​ப​வாதம்​தான் சாணக்​கிய அரசி​யலின் சாரம்.

ஆனால், அது காந்​தி​யின் காங்​கிரஸின் உண்மை அரசி​யல் அல்ல. இந்​திய தேசிய காங்​கிரஸின் மூதாதையர்​கள் இத்​தகைய சந்​தர்ப்​ப​வாத, மலி​வான அரசி​யலை ஏற்​றுக்​கொள்​வார்​கள் என்று என்​னால் கற்​பனை கூட செய்ய முடிய​வில்​லை. மேலும், எப்​போதும் யதார்த்​த​வா​தி​யான ஜவஹர்​லால் நேரு​வும் சந்​தேகப்​பட்​டிருப்​பார். நீண்ட கால​மாக கொந்​தளிப்​பான காலங்​களி​லும் நம்​முடன் நின்ற, நெருக்​கடி​யில் உறு​தி​யாக இருந்த ஒரு நேர்​மை​யான கூட்​டணி கட்​சியை மே 4-ம் தேதி வரை நாம் இகழ்ந்த ஒரு​வருக்​காக கைவிடு​வது என்​பது அரசி​யல் ரீதி​யில் அர்த்​த​முள்​ள​தா? நெறி​முறை​யான​தா? அரசி​யல் ரீதி​யில் கூட புத்​தி​சாலித்​தன​மான​தா?

இந்த கேள்வி​களோடு தவிக்​கும்​ போது, போட்டி முடிந்த பின் குதிரையை மாற்​றிக் கொள்​ளும் இந்தச் செயல் என்​னில் ஆழ்ந்த அமைதி​யின்​மையை ஏற்​படுத்​துகிறது. இத்​தகைய சந்​தர்ப்​ப​வாத மாற்​றத்​தில், மகாத்மா காந்தி கற்​றுக் கொடுத்​தது போல நன்னடத்​தை, தன்​னடக்​கம், தியாகம் ஆகியவற்​றால் தூண்டப்படா​மல், அரசி​யலின் எதிர்​காலம் நிச்​சயமற்​ற​தாக இருந்தா​லும் உடனடி பலனை நோக்கி நகர்​கிறோம் என்​பது தெளிவாகிறது. இந்​தியா கூட்​ட​ணி​யில் திமுக தலை​வர் மு.க.ஸ்டாலின் ஒரு​வர் மட்​டுமே ‘சகோ​தரர்’ ராகுல் காந்​தியை பிரதமர் வேட்பாளர் என்று பிரகடனப்​படுத்​தி​னார். அந்த நண்பரை இவ்​வாறு திடீரென கைவிடு​வதை எப்​படி நியாயப்படுத்த முடி​யும்? மேலும், ஒரு​வர் தண்​ணீரில் மூழ்​கிக்​கொண்​டிருக்​கும்​போது, கரை சேர வேண்​டும் என்​ப​தற்​காக, அந்த மூழ்​கடிப்​புக்கே பொறுப்​பான நபரோடு... ஓர் அமைச்​சர் அல்​லது இரண்டு அமைச்​சர் பதவிக்​காக நமது கவுர​வத்தை விற்றுவிடுவதா? மிக யதார்த்​த​மாக சிந்​தித்​தா​லும், நாம் நிலையான ஒரு கப்​பலில் சேரு​கிறோமா அல்​லது மூழ்​கும் கப்பலில் ஏறும் எலி​யாக மாறுகிறோ​மா?

என்​னைப் பொறுத்​தவரை, நெருக்​கடி​யான நேரங்​களில் கூட நெறி​முறை​யும் அரசி​யலும் ஒன்​றிணை​கின்​றன. நமது மிகக் கடின​மான காலங்​களி​லும் திமுக நம்​முடன் உறு​தி​யாக நின்​றது. எனவே, அவர்​களு​டன் கூட்​ட​ணியை தொடர்​வது​தான் நெறி​முறை. திமுக அரசு கடந்த 5 ஆண்​டு​களில் தமிழகத்தை ஆசிய அளவில் மிக உயர்ந்த இடத்​துக்கு கொண்டு சென்​றிருக்​கிறது.

சில ஆண்டு காலம் காத்​திருந்​து, 2029 அல்​லது 2031-ல் யாரை கூட்​ட​ணிக்கு தேர்ந்​தெடுப்​பது என்று நன்கு மதிப்​பீடு செய்து காங்​கிரஸ் முடி​வெடுத்​திருக்​கலாம்.

ஆனால், காங்​கிரஸ் கட்சி போட்​டி​யிட்ட 28 தொகு​தி​களில் 23 இடங்​களில் தவெக நம்மை தோற்​கடித்​திருக்​கிறது. இந்த பின்​னணி​யில் அக்​கட்​சி​யுடன் காங்​கிரஸ் கூட்​டணி சேரு​வது, கட்​சியை நெறியற்​ற​தாக மட்​டுமல்ல, அரசி​யல் ரீதி​யிலும் மூர்க்​க​மான​தாக காட்​டும்.

மேலும், பின்​கதவு வழியே வகுப்​பு​வாத பாஜக நுழைவதை இது எளி​தாக்​கு​மா​னால், அரசி​யல் கால்​பந்து வரலாற்​றில் மிக மோச​மான ‘சேம் சைட் கோல்’ அடித்​தவர்​கள் ஆவோம். இனி யார் நம்மை நம்புவார்கள்?

- மணி சங்​கர் அய்​யர், காங்​கிரஸ் மூத்த தலை​வர்