惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
C
Check Point Blog
B
Blog RSS Feed
G
Google Developers Blog
H
Help Net Security
博客园 - Franky
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
量子位
Recent Announcements
Recent Announcements
B
Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
D
DataBreaches.Net
小众软件
小众软件
T
The Blog of Author Tim Ferriss
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
MongoDB | Blog
MongoDB | Blog
Y
Y Combinator Blog
T
Tailwind CSS Blog
J
Java Code Geeks
MyScale Blog
MyScale Blog
雷峰网
雷峰网
有赞技术团队
有赞技术团队
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா ந...
செய்திப்பிரிவு · 2026-06-28 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் கே.வெங்கடநாராயணா நியமிக்கப்பட்டுள் ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அவரது நியமனத்தை உடனடியான திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தமிழே தெரியாத வெங்கட நாராயணாவை தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்திருக்கிறது தவெக அரசு. மத்திய அரசுக்கும், தமிழகஅரசுக்கும் இடையே ஓர் இணைப்பு பாலமாக செயல்படவேண்டிய பொறுப்பில், தமிழகத்துக்கு சம்பந்தமே இலலாத ஒருவரை எப்படி நியமிக்கலாம். தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் அறியாத ஒருவர் எப்படி தமிழக மக்களின் எண்ணத்தையும், குரலையும் டெல்லியில் எதிரொலிக்க முடியும்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: ‘மேகேதாட்டு அணையை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது’ என கர்நாடக அரசு தொடர்ந்து தெரிவித்து வரும் சூழலில் கர்நாடக பின்னணியை கொண்ட ஒருவரை தமிழகத்தின் டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக அரசு இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்து, வெங்கட நாராயணாவின் நியமனத்தை திரும்பப்பெற வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: திரையுலகில் இருந்து தனக்கு பிரியா விடைகொடுக்கும் நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்தியதற்காக வெங்கட நாராயணாவுக்கு, தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி, தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை முதல்வர் விஜய் நிரூபித்துள்ளார். வெங்கட நாராயணாவின் நியமனத்தை அரசு திரும்பப்பெற வேண்டும்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிராக போராடி கொண்டிருக்கும் சூழலில், தமிழர் அல்லாத கர்நாடகத்தை சேர்ந்த ஒருவரை தமிழக பிரதிநிதியாக முதல்வர் விஜய் பணியமர்த்தி இருப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. அவரை தமிழக அரசு உடனே விடுவிக்க வேண்டும்.

தவாக தலைவர் தி.வேல்முருகன்: டெல்லியில் சிறப்பு பிரதிநிதி பொறுப்புக்கு கர்நாடக முதல்வர் மற்றும் அங்குள்ள அரசியல், தொழில் வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்புடைய வெங்கட நாராயணாவை நியமித்திருப்பது ஜனநாயக நம்பிக்கை யையே கேள்விக்குள்ளாக்கியுள் ளது. இந்த சர்ச்சைக்குரிய நியமனத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்து, திரும்பப்பெற வேண்டும்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன்: வெங்கட நாராயணா என்ற கன்னடர் தமிழகபிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை தருகிறது. எந்த அனுபவமும் அற்ற, தமிழக அரசியலில் எந்த பங்கும் வகிக்காத, தமிழராக இல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது தமிழர் நலன் எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டு உள்ளது என்பதற்கு சான்றாகும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்: மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கூறும்போது, ‘‘தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி வெங்கட நாராயணா, கர்நாடகாவைச் சேர்ந்தவரல்ல, கர்நாடகாவில் தொழில் செய்கிறார். அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். அரசியல் காரணங்களுக்காக கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்கின்றனர். எந்த பதவியும் தவறான நபருக்கு தரப்படவில்லை.

டெல்லியில் ஒரு பிரதிநிதியாக ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ளப்போகிறார், எந்த பெரிய முடிவுகளும் எடுக்கப் போவதில்லை. கட்சியின் கொள்கை தலைவர்கள், கொள்கை முடிவுகள் எடுக்க உறுதுணை யாக இருந்தவர்கள் ஆலோசகர்களாக இருப்பதில் தவறில்லை. இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்களுக்கு சலுகை கிடையாது என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு விரைவில் மேல்முறையீடு செய்யும்’’ என்றார்.