惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
Y
Y Combinator Blog
T
Tailwind CSS Blog
G
Google Developers Blog
博客园 - Franky
Google DeepMind News
Google DeepMind News
阮一峰的网络日志
阮一峰的网络日志
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 聂微东
爱范儿
爱范儿
博客园 - 【当耐特】
腾讯CDC
T
The Blog of Author Tim Ferriss
MongoDB | Blog
MongoDB | Blog
H
Help Net Security
C
Check Point Blog
大猫的无限游戏
大猫的无限游戏
M
MIT News - Artificial intelligence
博客园_首页
Stack Overflow Blog
Stack Overflow Blog
The GitHub Blog
The GitHub Blog
Engineering at Meta
Engineering at Meta
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் சார்...
2026-05-18 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: நீட் தேர்​வில் ஏற்​பட்​டுள்ள குளறு​படிகளைக் கண்​டித்​தும், நீட் தேர்வை முற்​றி​லு​மாக ரத்து செய்ய வலி​யுறுத்​தி​யும், தமிழ்​நாடு மாநில இளைஞர் காங்​கிரஸ் சார்​பில், சென்​னை​யில் ரயில் மறியல் போராட்​டம் நடை​பெற்​றது.

நீட் தேர்வு வினாத்​தாள் கசிந்த விவ​காரத்​தால் லட்​சக்​ கணக்​கான மாணவர்​கள் கடுமை​யாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்​குப் பொறுப்​பேற்று மத்​திய அரசு உரிய நடவடிக்கை எடுக்​கக் கோரி, இந்த ரயில் மறியல் போராட்​டம் நடத்​தப்​பட்​டது.

சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் நடை​பெற்ற இந்த ஆர்ப்​பாட்​டத்​துக்​கு, தமிழ்​நாடு மாநில இளைஞர் காங்​கிரஸ் தலை​வர் சூர்யா பிர​காஷ் தலைமை தாங்​கி​னார். இதில், நூற்​றுக்​கணக்​கான இளைஞர் காங்​கிரஸ் தொண்​டர்​கள் கலந்​து கொண்​டனர்.

போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​கள், சென்னை எழும்​பூரில் இருந்து திருநெல்​வேலி நோக்​கிப் புறப்​படத் தயா​ராக இருந்த ‘வந்தே பாரத்’ ரயிலை மறித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

மத்​திய பாஜக அரசைக் கண்​டித்​தும், நீட் தேர்வை உடனடி​யாக ரத்து செய்​யக் கோரி​யும், மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தானை பதவி விலக வலி​யுறுத்​தி​யும் கைகளில் பதாகைகளை ஏந்தி அவர்​கள் கோஷங்​களை எழுப்​பினர்.

இந்த திடீர் மறியல் போராட்​டத்​தின் காரண​மாக, நெல்லை வந்தே பாரத் ரயில் எழும்​பூர் நிலை​யத்​தில் இருந்து சுமார் 10 நிமிடங்​கள் தாமத​மாகப் புறப்​பட்​டுச் சென்​றது. பின்னர் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​களை காவல்​துறை​யினர் கைது செய்​தனர்.

இதுகுறித்​து, சூர்யா பிர​காஷ் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “மத்​திய அரசு நடத்​தும் நீட் தேர்​வில் தொடர்ந்து பல்​வேறு குளறு​படிகளும் முறை​கேடு​களும் அரங்​கேறி வரு​கின்​றன.

வினாத்​தாள்​கள் கசிந்​ததன் காரண​மாக, லட்​சக்​கணக்​கான மாணவர்​களின் எதிர்​காலம் கேள்விக்​குறி​யாகி உள்​ளது. கடந்த 10 ஆண்டுக்கால பாஜக ஆட்​சி​யில், போட்​டித் தேர்​வு​களின் வினாத்​தாள்​கள் 80-க்​கும் மேற்​பட்ட முறை கசிந்​துள்​ளன.

தமிழகத்​தில் நீட் தேர்வு எழுதச் செல்​லும் நமது மாணவ, மாணவி​களைத் தேர்வு மைய வாசலில் வைத்​துப் பாது​காப்பு என்ற பெயரில் கடுமை​யான சோதனை​களுக்கு உள்​ளாக்​கு​கிறார்​கள். அவர்​கள் அணிந்​திருக்​கும் சிறிய கம்​மல், கொலுசு உள்​ளிட்ட நகைகளைக் கூடகழற்​றச் சொல்லி மன உளைச்​சலை ஏற்​படுத்​துகிறார்​கள்.

ஆனால், வட மாநிலங்​களிலோ வினாத்​தாள்​கள் மிகச் சாதா​ரண​மாகத் தொடர்ந்து கசிந்து வரு​கின்​றன. எனவே, தேர்வு முறை​கேடு​களுக்​குக் காரண​மான தேசிய தேர்வு முகமையை உடனடி​யாகத் தடை செய்ய வேண்​டும்.

இந்த வினாத்​தாள் கசிவுக்​குப் பொறுப்​பேற்று பிரதமர் மோடி​யும், மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தானும் உடனடி​யாகத்​ தங்​களது பதவி​களை ராஜி​னா​மா செய்​ய வேண்டும்'' என்றார்.