






















அதைத் தொடர்ந்து, மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில், கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிட்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 2 சதவீதம் உயர்ந்து இனி 60 சதவீதமாக வழங்கப்படும்.
16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இதனால், ஆண்டுக்கு ரூ.1,230 கோடி தமிழக அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படும்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நலன்கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் அலுவலர் ஒன்றியத்தின் தலைவர் த.அமிர்தகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தலைவர் சா.அருணன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் ராமஜெயம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் இந்த அறிவிப்பை வரவேற்று, நன்றி தெரிவித்துள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。