










Updated on
:
1 min read
ஆவடியை அடுத்த கோவில் பதாகை மேட்டு தெருவில் வசித்து வருபவர் கணேசன். இவரது மகன் சுதர்சன் (16) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் மெரினா கடற்கரைக்கு சென்றார். மெரினா கண்ணகி சிலை பின்புறம் தனது தம்பி கமலேஷ் உடன் கடலில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென தம்பி கமலேஷை ராட்சத அலை இழுத்து சென்றுள்ளது. உடனடியாக தம்பியை காப்பாற்றுவதற்காக சுதர்சன் கையைப் பிடித்து இழுத்து உள்ளார். அப்போது, தம்பி கரைக்கு வந்துவிட்ட நிலையில், சுதர்சன் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை கணேசன், தம்பி கமலேஷ் ஆகியோர் பதற்றம் அடைந்து கூச்சலிட்டுள்ளனர். கடல் அலையில் சிக்கி காணாமல் போன மாணவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மெரினா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, மாணவனின் தாய் நேற்று, விஜய்க்கு என்னை ஓட்டுப்போட சொல்லி வற்புறுத்திய மகன் தற்போது இல்லை எனவும், முதல்வர் விஜய் தனது மகனை காப்பாற்ற வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டு கோள் விடுத்தார்.
此內容由慣性聚合(RSS閱讀器)自動聚合整理,僅供閱讀參考。 原文來自 — 版權歸原作者所有。