惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
V
Visual Studio Blog
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
B
Blog
I
InfoQ
博客园 - 三生石上(FineUI控件)
阮一峰的网络日志
阮一峰的网络日志
F
Fortinet All Blogs
H
Help Net Security
博客园 - Franky
宝玉的分享
宝玉的分享
博客园 - 司徒正美
C
Check Point Blog
G
Google Developers Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Jina AI
Jina AI
T
The Blog of Author Tim Ferriss
MongoDB | Blog
MongoDB | Blog
云风的 BLOG
云风的 BLOG
A
About on SuperTechFans
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அசாமில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய பாஜக -...
2026-05-04 · via hindutamil

அசாம் தேர்தல் வெற்றியை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து கொண்டாடிய ஹிமந்த பிஸ்வா சர்மா

Updated on

2 min read

குவஹாட்டி: அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி 90-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற உள்ளதால், அக்கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

அசாம் சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 85.96% வாக்குகள் பதிவாகின. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. மாலை நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 90 இடங்களில் வெற்றி பெற்று, 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சி அமைக்க 64 தொகுதிகள் தேவை எனும் நிலையில், 90க்கும் அதிகமான இடங்களில் வெற்றியை வசப்படுத்த உள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் பாஜக 81 தொகுதிகளில் வெற்றி பெற்று, 1 தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஜலுக்பாரி தொகுதியில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 186 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பாஜகவின் கூட்டணி கட்சியான அசாம் கன பரிஷத் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான போடோலாந்து மக்கள் முன்னணியும் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 38 சதவீதத்துக்கும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. அசாம் கன பரிஷத் 6.42 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. போடோலாந்து மக்கள் முன்னணி 3.75 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் வெற்றியும், 4 தொகுதிகளில் முன்னிலையும் வகித்து வருகிறது. ஜோர்ஹட் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முதல்வர் முகமான கவுரவ் கோகாய் பாஜகவின் ஹிதேந்திரா நாத் கோஸ்வாமியிடம் 23,182 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது அக்கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சுதந்திர இந்தியாவில் சுமார் 50 ஆண்டுகள் அசாமை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜகவிடம் தோல்வியடைந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அசாமில் 61 சதவீதம் இந்துக்களும் 34 சதவீதம் முஸ்லிம்களும் உள்ளனர். முஸ்லிம்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்ற வாதத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் பாஜக, ஊடுருவல்காரர்களை முழுமையாக திருப்பி அனுப்ப பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது அவசியம் என பிரச்சாரம் செய்தது. மேலும், கவுரவ் கோகாயின் மனைவிக்கு பாகிஸ்தான் நாட்டுடன் தொடர்பு இருப்பதாகவும் பாஜக பிரச்சாரம் செய்தது.

பாஜகவின் இத்தகைய பிரச்சாரம் காரணமாக காங்கிரஸ் கட்சி, இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாடு கொண்ட கட்சி என்ற பிம்பம் உருவானது. வங்கதேசத்தை ஒட்டிய மாநிலம் என்பதால், இந்து - முஸ்லிம் விவகாரம் அசாம் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தது என்றே சொல்ல வேண்டும். இது மக்களிடையே குறிப்பாக இந்துக்களிடையே மத ரீதியான சிந்தனையை வலுப்படுத்தி, அவர்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வழிவகுத்தது. கடந்த முறையைவிட அதிக வெற்றியை பாஜகவுக்கு தேடித்தந்துள்ள ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார் என எதிர்பார்க்கப்படுகிறது.