惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
J
Java Code Geeks
Vercel News
Vercel News
A
About on SuperTechFans
G
Google Developers Blog
C
Check Point Blog
腾讯CDC
N
Netflix TechBlog - Medium
博客园 - 司徒正美
S
SegmentFault 最新的问题
D
DataBreaches.Net
博客园_首页
美团技术团队
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 聂微东
量子位
雷峰网
雷峰网
IT之家
IT之家
小众软件
小众软件
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - 三生石上(FineUI控件)
H
Help Net Security
宝玉的分享
宝玉的分享
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மாணவர்களின் கவனத்திறனை வளர்க்கும் யோகா!
Guest Author · 2026-06-20 · via hindutamil

Updated on: 

இன்றைய டிஜிட்டல் உலகில் அதிகப்படியான பாடச்சுமை, திறன்யோகாபேசி பயன்பாடு, தொடர்ச்சியான தேர்வுகள் காரணமாகப் பள்ளி மாணவர்கள் மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.

ஒரு மாணவர் படிக்கும்போது திணறுவதாகவோ, பதற்றமாகவோ உணரும்போது, அவர்களின் சுவாசம் வேகமாகவும் மேலோட்டமாகவும் மாறுகிறது. இது அவர்களின் மன அழுத்தத்தை மேலும் அதிகரித்து, கவனச்சிதறலை ஏற்படுத்துகிறது. இதற்கு நடைமுறைத் தீர்வை யோகா வழங்குகிறது. உடலின் சரியான சீரமைப்போடு முறையான சுவாசத்தை இணைப்பதன் மூலம், தங்களின் பதற்றமான மனநிலையை மாற்றி, ‘விழிப்புணர்வுடன் கூடிய அமைதி’ நிலையை மாணவர்கள் அடைய முடியும்.

குறிப்பிட்ட சில யோகாசனங்கள் சிதறிய ஆற்றலை ஒன்றுதிரட்டி, அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்த உதவுகின்றன. புத்தகங்களை எடுத்து மாணவர்கள் படிக்கத் தொடங்குவதற்கு முன், இந்த எளிய ஆசனங்களில் சிலவற்றைச் செய்தால் மனத்தெளிவு கணிசமாக அதிகரிக்கும்.

மனதை நிலைநிறுத்தும் ஆசனங்கள்:

பாலாசனம்: இந்த எளிய ஓய்வு நிலை ஆசனம், உங்களின் சுறுசுறுப்பான நரம்பு மண்டலத்தை உடனடியாக அமைதிப் படுத்துகிறது. இது வெளி உலகப் பிரச்சினைகளில் இருந்து மனதிற்கு ஒரு தற்காப்புக் கவசத்தை உருவாக்கி, படிப்பதற்கான மனநிலைக்கு உங்களை மெதுவாக அழைத்துச் செல்கிறது.

சுப்த பத்த கோணாசனம்: நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பதால் ஏற்படும் உடல் சோர்வை நீக்கும் மிகச் சிறந்த ஆசனம் இது. இடுப்பு, நெஞ்சுப் பகுதியைத் தளர்த்தி, அடி வயிற்று சுவாசத்தை ஊக்குவிக்கிறது. இதனால் உடலில் உள்ள மன அழுத்த ஹார்மோனான கார்டிசால் அளவு குறைகிறது.

கூர்மையான கவனத்திற்கான ஆசனங்கள்: உடலைச் சம நிலையில் வைக்கும் ஆசனங்கள் உங்களின் கவனத்திறனைக் காட்டும் கண்ணாடி. வரவிருக்கும் தேர்வுகளைப் பற்றியோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றைப் பற்றியோ உங்கள் மனம் சிந்திக்கத் தொடங்கினால், நீங்கள் உடனடியாக உடல் சமநிலையை இழப்பீர்கள். எனவே, இந்த ஆசனங்களுக்கு முழுமையான கவனம் தேவை.

விருக் ஷாசனம்: உங்களின் பார்வையை உங்களுக்கு முன்னால் உள்ள அசையாத ஒரு புள்ளியில் நிலை நிறுத்துவதன் மூலம், இந்த ஆசனம் சிதறிய எண்ணங்களை ஒருங்கிணைத்து, மனதிற்கு ஒருமுகத் தன்மையைத் தருகிறது. மேலும், வெளி உலகக் கவனச்சிதறல்களை எதிர்க்க மூளைக்குப் பயிற்சி அளிக்கிறது.

வீரபத்ராசனம்: இந்தத் தீவிரமான, ஆற்றல்மிக்க ஆசனம் உடலையும் மனதையும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்கிறது. உடல் வலிமை யையும் மன உறுதியையும் உருவாக்குகிறது.

நடராஜாசனம்: இந்த ஆசனத்திற்கு நேர்த்தியான உடல் ஒருங்கிணைப்பும் அடிவயிற்றுத் தசைகளின் வலிமையும் தேவை. உங்கள் நெஞ்சுப் பகுதியை விரிவடையச் செய்வதன் மூலம், ஆக்சிஜன் உள்ளெடுப்பை இது மேம்படுத்துகிறது. மூளைக்குப் புதிய ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தகவல்களை விரைவாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

கருடாசனம்: கைகளையும் கால்களையும் இறுக்கமாகப் பின்னுவதன் மூலம், இந்த ஆசனம் மூளையின் இடது, வலது அரைக்கோளங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைத் தூண்டுகிறது. மனதில் உள்ள தேவையற்ற குழப்பங்களை நீக்கி, அறிவாற்றலைக் கூர்மையாக்குகிறது.

மூளைக்குப் புத்துணர்ச்சி: புவியீர்ப்பு விசைக்கு எதிராக உடலின் நிலையை மாற்றுவதன் மூலம், இந்த ஆசனங்கள் ரத்த ஓட்டத்தைத் தூண்டி, நீண்ட நேரம் படிப்பதால் ஏற்படும் மூளைச் சோர்வை நீக்குகின்றன.

அதோ முக ஸ்வானாசனம்: இதயத்திற்குக் கீழே தலையைக் கொண்டுவரும் இந்த நிலை, ஆக்சிஜன் நிறைந்த புதிய ரத்தத்தை நேரடியாக மூளைக்குச் செலுத்துகிறது. இது கழுத்து எலும்புகளின் அழுத்தத்தைக் குறைத்து, படிப்பதால் ஏற்படும் மனச் சோர்வை நீக்கும்.

சேது பந்தாசனம்: இந்த மிதமான பின்வளைவு ஆசனம், குனிந்து அமர்வதால் ஏற்படும் தோள்பட்டைச் சோர்வை நீக்கி, உடலின் மேல் பகுதியை விரிவடைய வைக்கிறது.

சிரசாசனம்: ஆசனங்களின் ராஜா என்று அழைக்கப்படும் இந்த மேம்பட்ட தலைகீழ் ஆசனம், மூளையின் உயர் செயலாக்க மையங்களுக்கு அதிகப் படியான ரத்த ஓட்டத்தை வழங்குகிறது. இது நினைவாற்றல், பகுப்பாய்வுத் திறன், மூளைச் செயல் பாட்டை மேம்படுத்துகிறது.

சவாசனம்: இது இல்லாமல் எந்த யோகா பயிற்சியும் முழுமை பெறாது. இது உங்கள் மூளையைத் தீவிர உழைப்பிலிருந்து ஆழ்ந்த மீட்புநிலைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்கிறது. நீங்கள் யோகா பயிற்சியின் மூலம் பெற்ற மனத்தெளிவையும் படித்த தகவல்களையும் மூளை ஒருங்கிணைத்துச் சேமிக்க, இந்த ஆசனம் அமைதியான இடத்தை வழங்குகிறது.

த்ராடகம்: பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படும் பயிற்சி இது. ஏதேனும் ஓர் அசையாத பொருளை உற்று நோக்குவதை உள்ளடக்கியது. இது கவனத்தை அதிகரித்து, கண்களைத் தூய்மைப் படுத்தி, கண் தசைகளை வலுப்படுத்துகிறது. மாணவர் களின் தன்னம்பிக்கை, பொறுமை, மன உறுதியை அதிகரிப்பதோடு தேர்வு நேரத் தலைவலி, பதற்றம், தூக்கமின்மை போன்ற கோளாறுகளையும் குணப்படுத்துகிறது.

முத்திரைகள்

கை முத்திரைகள் ஆற்றலைச் சீராக்கவும் மாணவர் களின் பதற்றத்தைக் குறைத்துக் கவனத்தை அதிகரிக்கவும் உதவும் சிறந்த கருவிகள். இவை மாணவர்கள் தேர்வு எழுதும்போது அல்லது படிக்கும்போது எங்கும் எளிதாகச் செய்யக்கூடியவை:

ஞான முத்திரை: நினைவாற் றலையும் ஒருமுகப்படுத்தும் திறனையும் மேம்படுத்து வதற்கான மிக முக்கியமான முத்திரை இது. பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் இணைப்பதன் மூலம் இது செய்யப்படுகிறது.

ஹாகினி முத்திரை: அனைத்து விரல் நுனிகளையும் ஒன்றோடு மற்றொன்று தொடுவதன் மூலம் இது செய்யப்படுகிறது. இது மூளையின் செயல்திறனையும் சிந்தனைத் தெளிவையும் அதிகரிக்க உதவுகிறது.

பிராணமுத்திரை: நீண்ட நேரம் படித்து உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ சோர்வடையும் போது, உடலில் புதிய ஆற்றலைத் தூண்ட இந்த முத்திரை உதவுகிறது.

சாம்பவி முத்திரை: இது கண்களைப் புருவமத்தியில் நிலைநிறுத்திச் செய்யப்படும் தியானப் பயிற்சி. இதனை பிரமரி சுவாசப் பயிற்சியுடன் சேர்த்துச் செய்யும்போது, மாணவர் களின் கவனத்திறன் உயர்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கல்வியின் முதன்மை நோக்கம் மாணவர்களைத் தேர்வுகளுக்கு மட்டும் தயார்படுத்துவது அல்ல, மாறாக வாழ்க்கைக்குத் தயார்படுத்துவதே. மாணவர்களுக்குச் சுய விழிப்புணர்வையும் மன உறுதியையும் யோகா கற்றுத் தருகிறது.

மனம் எப்போது அலைபாய்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதை மீண்டும் படிப்பை நோக்கித் திருப்புவதற்கான உத்திகளை யோகா வழங்குகிறது. சுவாசத்தைக் கட்டுப்படுத்தவும் உடலை நிலைநிறுத்தவும் கற்றுக்கொள்ளும் மாணவர்கள், தங்களின் கல்விப் பயணத்தில் மிகச் சிறந்த பயனைப் பெறுகிறார்கள்.

- செ.செல்வலட்சுமி

யோகா வழிகாட்டியிடம் பயிற்சி பெற்ற பின் இவற்றைச் செய்ய வேண்டும். கட்டுரையாளர், இணைப் பேராசிரியர், யோகா துறை, தமிழ்நாடு உடல்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்.