惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Engineering at Meta
Engineering at Meta
雷峰网
雷峰网
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog
Y
Y Combinator Blog
WordPress大学
WordPress大学
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
小众软件
小众软件
G
Google Developers Blog
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 叶小钗
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
量子位
The Cloudflare Blog
T
The Blog of Author Tim Ferriss
博客园_首页
B
Blog RSS Feed
Hugging Face - Blog
Hugging Face - Blog
IT之家
IT之家
阮一峰的网络日志
阮一峰的网络日志
L
LangChain Blog
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தில் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: 59 ஆண்டுகளுக...
2026-05-22 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உட்பட 23 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களுக்காக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. முதல்வராக விஜய் கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்றார். அவருடன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பில், அதிமுகவின் 25 எம்எல்ஏக்களும் ஆதரவு அளிக்க, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. சமீபத்தில் அமைச்சர்களுக்கான இலாகா விவரங்கள் அறிவிக்கப்பட்டன. முதல்வர் விஜய் உட்பட 10 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்ற நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

தவெக அரசுக்கு முதன்முதலில் ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்படுவதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஏற்கெனவே அறிவித்திருந்தார். காங்கிரஸ் எம்எல்ஏக்களான செ.ராஜேஷ் குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோரை அமைச்சரவையில் இணைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சரவையில் விசிக, 2 கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் விஜய் விரும்புவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். விசிக, ஐயூஎம்எல் தரப்பும் இதற்கு ஒப்புதல் தெரிவித்தன.

இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாகவும், காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உட்பட 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அமைச்சரவையில் இடம்பெறும் 23 எம்எல்ஏக்கள் பட்டியலை ஆளுநர் மாளிகை நேற்று காலை 9 மணிக்கு வெளியிட்டது. முதல்வர் விஜய் காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வந்தார். புதிய அமைச்சர்களை ஆளுநர் அர்லேகருக்கு அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, வந்தே மாதரம், தேசிய கீதம் அதையடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது.

தொடர்ந்து, ஸ்ரீநாத் (தூத்துக்குடி), கமலி.எஸ். (அவிநாசி), சி.விஜயலட்சுமி (குமாரபாளையம்), ஆர்.வி.ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்), வினோத் (கும்பகோணம்), ராஜீவ் (திருவாடானை), பி.ராஜ்குமார் (கடலூர்), வி.காந்திராஜ் (அரக்கோணம்), மதன் ராஜா.பி (ஓட்டப்பிடாரம்), ஜெகதீஸ்வரி.கே (ராஜபாளையம்), ராஜேஷ்குமார்.எஸ் (கிள்ளியூர்), எம்.விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு), லோகேஷ் தமிழ்ச்செல்வன்.டி (ராசிபுரம்), விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ (சேலம் தெற்கு), ரமேஷ் (ஸ்ரீரங்கம்), பி.விஸ்வநாதன் (மேலூர்), குமார்.ஆர் (வேளச்சேரி), தென்னரசு.கே (பெரும்புதூர்), வி.சம்பத்குமார் (கோவை வடக்கு), முகமது பர்வேஸ் (அறந்தாங்கி), டி.சரத்குமார் (தாம்பரம்), என்.மரிய வில்சன் (ஆர்.கே.நகர்), விக்னேஷ்.கே (கிணத்துக்கடவு) ஆகிய 23 எம்எல்ஏக்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பின்னர், முதல்வர் உள்ளிட்ட அமைச்சரவைக் குழுவினர் அனைவரும் ஆளுநருடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர், தலைமைச் செயலர் சாய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், தேசிய தரவுப் பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன், புதிய அமைச்சர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செங்கோட்டையன் இலாகா மாற்றம்: நேற்றைய விரிவாக்கத்தின்போது, சிலரது இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. இதில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு நிதித்துறைக்கு பதில், வருவாய்த் துறையும் அமைச்சர் நிர்மல்குமார் வசமிருந்த சட்டப்பேரவை விவகாரங்கள் துறையும் வழங்கப்பட்டுள்ளது. நிதித்துறை மரிய வில்சனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் வசம் முதலில் இருந்த துறைகளில் பெண்கள் நலன் துறைக்கு பதில் சிறப்பு முயற்சிகள் துறையும், அமைச்சர் ஆனந்த் வசம் இருந்த வறுமை ஒழிப்புத் துறையும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஐயூஎம்எல் சார்பில் ஷாஜகானும், விசிக சார்பில் வன்னி அரசும் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ்: தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் இடம்பெற்றுள்ளது. கடைசியாக 1967-ல் முதல்வர் பக்தவத்சலம் தலைமையில் திமுகவிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ், தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம் ஆட்சியில் பங்கேற்றுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2006-ல் தனிப்பெரும்பான்மையற்ற திமுக அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளித்தது. தற்போது அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றதன்மூலம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர்ந்துள்ளது.