惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
The GitHub Blog
The GitHub Blog
Vercel News
Vercel News
D
DataBreaches.Net
MongoDB | Blog
MongoDB | Blog
H
Help Net Security
小众软件
小众软件
美团技术团队
T
The Blog of Author Tim Ferriss
爱范儿
爱范儿
D
Docker
Martin Fowler
Martin Fowler
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 聂微东
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
罗磊的独立博客
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
S
SegmentFault 最新的问题
云风的 BLOG
云风的 BLOG
B
Blog
雷峰网
雷峰网
The Cloudflare Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தொழிற்புரட்சிக்கு வித்திட்ட ஜேம்ஸ் வாட்! - இயந்திரத்தால் ...
2026-05-13 · via hindutamil

Updated on

2 min read

நாம் இயந்திர உலகில் வாழ்ந்துவருகிறோம். வீடுகள் தொடங்கி பெரும் ஆலைகள்வரை இயந்திரங்களே ஆட்சி செய்கின்றன. இந்த நிலை உருவாவதற்கு இங்கிலாந்தில் நிகழ்ந்த தொழிற்புரட்சி முக்கியக் காரணம்.

ஐரோப்பியக் கண்டம் குளிரில் நடுங்கும் பூமி. இதனால் வீடுகளை வெப்பமூட்ட விறகுகள் தேவை. 17ஆம் நூற்றாண்டில் விறகுக்காக இங்கிலாந்தின் பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டன.

வெளிநாடுகளில் இருந்த மரங்களை இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் விறகுக்கு மாற்றாக அமைந்தது நிலக்கரி. பல்வேறு இடங்களில் நிலக்கரி கிடைத்ததால், அவற்றைத் தோண்டி எடுத்து விற்பனை செய்யத் தொடங்கினர்.

ஆனால் நிலக்கரியைத் தோண்டத் தோண்ட நிலத்தடி நீர் சுரங்கத்துக்குள் புகுந்து வேலையைக் கடினமாக்கியது. சுரங்கத்திலிருந்து நீரை இறைக்க, கயிறுகட்டிய வாளிகளும், அதை இழுக்க மாடுகளும் பயன்பட்டன. ஆனாலும் சுரங்கநீரைப் போதுமான அளவு அகற்ற முடியவில்லை. அப்போதுதான் தாமஸ் சேவரி (Thomas Savery) ஓர் இயந்திரத்தை உருவாக்கினார்.

நீராவியின் விசையால் இயங்கும் இயந்திரம் அது. இந்த இயந்திரத்திலுள்ள பாய்லரில் நீர் சூடாக்கப்படும். அப்போது எழும் நீராவி, பாய்லருடன் பொருத்தப்பட்டிருக்கும் சிலிண்டருக்குள் சென்று அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் பிஸ்டனைத் தள்ளும்.

அந்த பிஸ்டன் மேலே செல்லும்போது கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் வாளி சுரங்கத்துக்குள் சென்று நீரை நிரப்பும். இதன்பின் சிலிண்டரில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். இதனால் நீராவி வெப்பம் இழந்து நீராக மாறும்.

அப்போது அழுத்தம் குறைவதால் பிஸ்டன் இழுக்கப்பட்டு அதனுடன் கட்டப்பட்டிருக்கும் வாளி மேலே வரும். இதுதான் அந்த இயந்திரம் இயங்கும் விதம். இதில் சில பிரச்சினைகள் இருந்தன. ஒவ்வொரு முறையும் பிஸ்டன் இயங்க குளிர்ந்த நீரை மனிதர்கள்தான் ஊற்ற வேண்டும்.

ஆனாலும் இந்த இயந்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பலர் உரிமம் பெற்று இந்த இயந்திரத்தை விற்றனர். அதில் ஒருவர் தாமஸ் நியூகோமன். இவர் விற்பனை மட்டும் செய்யாமல், அந்த இயந்திரத்தைச் சீர்ப்படுத்தவும் செய்தார்.

பிஸ்டன் இயங்கும் விதத்தில் சில மாறுதல்கள் செய்து மனிதர்கள் உதவி இல்லாமல் தானாகவே குளிர்ந்த நீரைக் கொண்டு நீராவியின் இயக்கம் மாறும்படிச் செய்தார்.

இது சாவேரியின் இயந்திரத்தைவிடப் பெரிய வெற்றி பெற்றது. ஆனாலும் இந்த இயந்திரத்தில் ஒரு பிரச்சினை இருப்பதை ஒருவர் கண்டறிந்தார்.

அதைச் சீர் செய்து புதிய இயந்திரமாகவும் மாற்றினார். அந்தப் புதிய இயந்திரம் இங்கிலாந்தின் தொழிற்புரட்சிக்கு வித்திட்டது. அதைச் செய்தவர் ஜேம்ஸ் வாட் (James Watt).

வாட் ஸ்காட்லாந்தில் பிறந்தவர். 18 வயதில் லண்டன் சென்று சிறு கணித இயந்திரங்கள் உருவாக்குவதற்கும், பழுது பார்ப்பதற்கும் கற்றுக் கொண்டார்.

பின்னர் நியூகோமனின் இயந்திரம் அறிமுகமானது. நியூகோமன் இயந்திரத்தைப் பழுதுபார்க்கும் போது, அந்த இயந்திரம் நீராவியைச் சூடாக்குவதன் மூலமும் குளிர்விப்பதன் மூலமும் இயங்குகிறது எனப் புரிந்துகொண்டார்.

ஆனால் இவை இரண்டுமே ஒரே சிலிண்டரில் நடைபெறுவதால் ஒவ்வொரு முறையும் நீரைக் குளுமைப்படுத்தி மீண்டும் சூடாக்க அதிக எரிபொருள் வீணாகிறது என்று உணர்ந்தார்.

இதை எப்படிச் சரிசெய்யலாம் என்று யோசித்தபோது, வாட்டுக்கு ஜோசப் ப்ளாக் அறிமுகம் கிடைத்தது. இவர், தான் கண்டறிந்த மறைவெப்பம் எனும் கருத்தை வாட்டிடம் கூற, இயந்திரத்தைச் சரிசெய்ய வாட் தேடிக்கொண்டிருந்த வழி கிடைத்தது.

அது என்ன மறைவெப்பம்?

ஒரு பொருளை அதன் நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றுவதற்கு வேண்டிய வெப்பத்தைத்தான் மறைவெப்பம் (Latent Heat) என்கிறோம். தண்ணீரைச் சுடவைக்கிறோம். அது 100 டிகிரி செல்சியஸை எட்டியவுடன் உடனே நீராவியாக மாறாது. அதை நீராவியாக மாற்றுவதற்குக் கூடுதல் வெப்பம் தேவை.

இந்தக் கூடுதல் ஆற்றல்தான் மறைவெப்பம். இந்தக் கருத்தை நியூகோமன் இயந்திரம் இயங்கும் விதத்தில் பொருத்திப் பார்த்தார் வாட். நியூகோமன் இயந்திரத்தில் நீராவி சிலிண்டரில் செலுத்தப்படும்போது பிஸ்டன் கீழ்நோக்கிச் செல்கிறது.

மீண்டும் குளிர்ந்த நீரை விட்டு நீராவியைக் குளிர்விக்கும்போது வெற்றிடம் உருவாகி பிஸ்டன் மேல்நோக்கி வருகிறது. இந்தச் செயல்பாட்டினால்தான் சுரங்கத்திலுள்ள நீர் வெளி வருகிறது. இதில் உள்ள பிரச்சினை, ஒவ்வொரு முறை நீராவியைக் குளிர்விக்கும்போதும் சிலிண்டர் குளிர்கிறது.

இதனால் வெளியில் இருந்து புதிதாக நீராவி செலுத்தப்படும்போது குளிர்ந்த சிலிண்டரால் அந்த நீராவியின் மறை வெப்பமும் குறைகிறது. அதனைச் சூடாக்க மேலும் எரிபொருள் தேவைப்படுகிறது.

இதற்குப் பதில் நீராவி செலுத்தப்படும் சிலிண்டரைக் குளுமைப்படுத்தாமல், அதற்கு என்று தனி சிலிண்டரை அமைத்தால், நீராவி முதல் சிலிண்டரில் நுழைந்து இரண்டாவது சிலிண்டருக்குச் சென்று குளிரும். முதல் சிலிண்டர் எப்போதும் சூடாகவே இருக்கும்.

இதனால் பெரும் அளவில் எரிபொருள் செலவு குறையும். இந்த மாற்றத்தைத்தான் செய்தார் வாட். இதுவே ‘வாட் நீராவி இயந்திரம்’ என அறியப்படுகிறது. 1775இல் தனது கண்டுபிடிப்புக்கு 25 வருடக் காப்புரிமை வாங்கினார் வாட்.

இதன்பின் இங்கிலாந்து முழுவதும் வாட் நீராவி இயந்திரம் புழக்கத்துக்கு வந்தது. மாவு அரைக்கும் ஆலைகள், காகித ஆலைகள், நெசவாலைகள் எனப் பல ஆலைகளிலும் வாட் இயந்திரத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இந்த ஆலைகளில் அதுவரை குதிரைகள்தான் இயந்திரங்களை இயக்கிவந்தன.

ஆலை அதிபர்களிடம் இயந்திரத்தின் ஆற்றல் 8 குதிரைக்குச் சமம், 10 குதிரைக்குச் சமம் என்று ஜேம்ஸ் வாட் கூறினார். இதுவே ‘குதிரை சக்தி’ என்கிற அளவுகோலாக மாறியது. பிற்காலத்தில் இயந்திர சக்தியின் அளவுக்கு ‘வாட்’ என்றே பிரிட்டன் அரசின் அறிவியல் கழகம் அலகிட்டது.

வாட் இயந்திரத்தின் வருகை தொழிற்சாலை உற்பத்தி, போக்குவரத்து எல்லாவற்றையும் மாற்றியது. பிரிட்டன் உலகின் வல்லரசாக மாறியது. இதைத்தான் நாம் ‘தொழிற்புரட்சி’ என்கிறோம்.

(திருப்புமுனையைக் காண்போம்)

- tnmaran25@gmail.com