惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
博客园 - 司徒正美
V
Visual Studio Blog
博客园 - 【当耐特】
T
Tailwind CSS Blog
美团技术团队
博客园 - 叶小钗
Jina AI
Jina AI
宝玉的分享
宝玉的分享
IT之家
IT之家
Hugging Face - Blog
Hugging Face - Blog
雷峰网
雷峰网
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园_首页
人人都是产品经理
人人都是产品经理
T
The Blog of Author Tim Ferriss
P
Proofpoint News Feed
Microsoft Security Blog
Microsoft Security Blog
Y
Y Combinator Blog
GbyAI
GbyAI
大猫的无限游戏
大猫的无限游戏
Martin Fowler
Martin Fowler
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ரீல்ஸ் மோகம்: புல்லாவெளி அருவிக்கு சென்று ஆபத்தை விலைக்கு...
ஆ.நல்லசிவன் · 2026-05-25 · via hindutamil

தாண்டிக்குடி அருகேயுள்ள புல்லாவெளி அருவி பகுதிக்கு ஆபத்தான முறையில் செல்லும் இளைஞர்கள்.

Updated on: 

பழநி: ‘ரீல்ஸ்’ மோகத்தில் கொடைக் கானல் தாண்டிக்குடி அருகே யுள்ள புல்லாவெளி அருவிக்கு தடையை மீறிச் சென்று சுற்றுலாப் பயணிகள் குளித்து வருவதால் ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி அருகே ஆபத்து மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது புல்லாவெளி அருவி. ஆடலூர், பன்றிமலையில் பெய்யும் மழை நீர் புல்லாவெளியில் அருவியாக கொட்டுகிறது.

இந்த அருவியில் இருந்து செல்லும் தண்ணீர், திண்டுக்கல் மாநகராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. அருவியில் தண்ணீர் கொட்டும் அழகை அருவியின் மேற்பரப்பில் இருந்து மட்டுமே கண்டு ரசிக்க முடியும். பல நூறு அடி கீழே இறங்கிச் சென்றால்தான் அருவியில் குளிக்க முடியும்.

ஆனால், ஆபத்து நிறைந்துள்ளதால் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு புல்லாவெளி அருவியை கண்டுபிடித்த ஆங்கிலேயேர், மரத்தால் அமைத்த தொங்கு பாலத்தை கடந்துதான் அருவிக்கு செல்ல வேண்டும். இப்பாலத்தை இப்பகுதியினர் ‘ஆடு’ பாலம் என்றும் அழைக்கின்றனர்.

அருவிக்கு செல்ல தடைபோதிய பராமரிப்பின்றி பாலம் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. இயற்கைச் சூழல் நிறைந்த இப்பகுதி வெளி மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இங்கு போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் தவறி விழுந்தும், நீரில் மூழ்கியும் உயிரிழக்கின்றனர்.

இதுவரை இந்த அருவியில் 14 பேர் தவறி விழுந்து இறந்துள்ளனர். அதனால், புல்லாவெளி அருவி, பேத்துப்பாறையில் உள்ள அஞ்சு வீடு அருவி மற்றும் அரசால் அனுமதிக்கப்படாத வன அருவிகள் அனைத்தும் தற்காலிகமாக சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் 2025 அக்.25-ம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தும் ‘ரீல்ஸ்’ மோகத்தில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்துவரும் இளைஞர்கள், சுற்றுலாப் பயணிகள் தடையை மீறி அருவிக்கு சென்று ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் விதமாக குளிக்கின்றனர்.

மேலும், அப்பகுதியில் ஆபத்தான முறையில் புகைப் படமும் எடுக்கின்றனர். கோடை சீசனையொட்டி இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனைக் கண்காணித்து தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், புல்லாவெளி அருவியை சுற்றுலாத் தலமாக்கும் வகையில் ரூ.3 கோடியில் சாலை வசதி, அருவிக்குச் செல்ல படிக்கட்டுகள், உடை மாற்றும் அறைகள் அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது.

இன்னும் பணிகள் நிறைவடையாத நிலையில், சிலர் தடையை மீறி ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர். அருவிக்கு சென்று பார்வையிட மற்றும் குளிப்பதற்கு முயற்சிக்கும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அருவிக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.