惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
J
Java Code Geeks
博客园 - 聂微东
量子位
C
Check Point Blog
T
The Blog of Author Tim Ferriss
T
Tailwind CSS Blog
G
Google Developers Blog
Google DeepMind News
Google DeepMind News
B
Blog
罗磊的独立博客
腾讯CDC
GbyAI
GbyAI
博客园 - 【当耐特】
A
About on SuperTechFans
M
MIT News - Artificial intelligence
U
Unit 42
D
Docker
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Y
Y Combinator Blog
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
有赞技术团队
有赞技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் இளைஞர் ...
2026-05-01 · via hindutamil

குற்றவாளி கருணாஸை நீதிமன்றம் அழைத்து வந்த போலீஸார். (உள்படம்) சிறையில் தற்கொலை செய்துகொண்ட விவேகானந்தன். | படம்: செ. ஞானபிரகாஷ் |

Updated on

2 min read

புதுச்சேரி: புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் கருணாஸ் குற்றவாளி என போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி நேற்று அறிவித்தார். மே 5-ம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி முத்​தி​யால்​பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்த 9 வயது சிறுமி கடந்த 2024 மார்ச் 2-ம் தேதி வீட்​டின் அருகே விளை​யாடிக் கொண்​டிருந்​த​போது திடீரென மாயமா​னார்.

2 நாட்​களுக்​குப்பின் அருகே உள்ள வாய்க்​காலில் கை, கால்​கள் கட்​டப்​பட்டு போர்​வை​யால் சுற்​றப்​பட்​ட நிலையில், பிண​மாக மீட்​கப்​பட்​டார். இச்​சம்​பவம் புதுச்​சேரியை உலுக்​கியது.

முத்​தி​யால்​பேட்டை போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, அதே பகு​தி​யைச் சேர்ந்த காக்கா என்ற கருணாஸ் (19), விவே​கானந்​தன் (59) ஆகியோரை போக்சோ வழக்​கில் கைது செய்​தனர். இவ்​வழக்கு தொடர்​பாக 540 பக்க குற்​றப்​பத்​திரி​கையை போலீ​ஸார் தாக்​கல் செய்​தனர்.

ஒருவர் தற்கொலை

இதில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த விவே​கானந்​தன் கடந்​த 2024 செப்​டம்​பரில் கழி​வறை​யில் தூக்​குப் போட்டு தற்​கொலை செய்து கொண்​டார். தொடர்ந்து வழக்கு போக்சோ விரைவு நீதி​மன்​றத்​தில் நீதிபதி சுமதி முன்பாக நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.

விசா​ரணை முடிந்த நிலை​யில் நேற்று இந்த வழக்​கில் தீர்ப்பு வழங்​கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட கருணாஸை குற்றவாளி என தீர்ப்பளித்தார். மே 5-ம் தேதிஇரு தரப்பு வாதத்துக்குப் பிறகு தண்டனை விவரத்தை அறிவிப்ப தாகவும் தெரிவித்தார்.

இவ்வழக்கு தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் கூறியதாவது: இந்திய தண்டனை சட்டம் 366 வது பிரிவில் பாலியல் நோக்கில் குழந்தை கடத்தல், 342-வது பிரிவில் குழந்தையை அடைத்து வைத்தல், 302-வது பிரிவான கொலை செய்தல் ஆகிய பிரிவுகளிலும் தடயம் ஆதாரம் மறைத்து வைத்தல் மற்றும் போக்சோ சட்டம் 6-ன் கீழ் குற்றம்சாட்டப் பட்ட கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

இவ்வழக்கில் மரண தண்டனைக்கான குற்றங்களுக்கான பிரிவுகள் இருக்கின்றன. அரசு தரப்பில் குற்றவாளிக்கு மரணதண்டனைதான் தீர்வு என வாதங்கள் வைத்துள்ளோம். இருதரப்பு வாதங்கள் கடந்த 15 முதல் 17 -ம் தேதி வரை நடந்தது.

இவ்வழக்கில் புதுச்சேரி வழக்கறிஞர்கள் எதிர்தரப்புக்கு ஆஜராகவில்லை. சிறுமியை தங்கள் வீட்டு குழந்தையாக புதுச்சேரி வழக்கறிஞர்கள் பார்த்தனர். இலவச சட்ட உதவி மையம் மூலம் விழுப்புரம் வழக்கறிஞரை குற்றம் சாட்டப்பட்டோர் தரப்புக்காக நீதிமன்றம் நியமித்தது.

ஆவணங்கள், சான்றுகள்...

81 ஆதார ஆவணங்கள், பாதிக்கப்பட்ட சிறுமியின் செருப்பு, ஆடை, முடி, கைப்பற்றப்பட்ட உயிரி மாதிரிகள், டிஎன்ஏவிவரங்கள் என 37 சான்று பொருட்களாக சமர்ப்பித்தோம்.

இவ்வழக்கில் 54 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டன. குற்றம்சாட்டப்பட்ட விவேகானந்தன் தற்கொலை செய்ததால் அவர் மீது இவ்வழக்கில் இருந்த எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும் குற்றம் சாட்டப்பட்டோர் செல்போனில் ஆபாச வீடியோக்கள், உயிர் மாதிரிகள் கிடைத்தன. முக்கிய வழக்குகளில் பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ வழக்குகளில் கூட்டு பாலியல் பலாத்காரம், குழந்தை இறப்பு , குழந்தை 12 வயதுக்கு கீழ் இருப்பது ஆகிய மூன்று முக்கியக் குற்றங்கள் அடிப்படையில் இவ்வழக்கு தண்டனைகள் இருக்கின்றன.

அதனால் தண்டனையை உடன் அறிவிக்க இயலாது என்ற நிலை இருக்கிறது. வழக்குகளில் குற்றவாளி தீர்ப்பு வந்த பிறகு தண்டனையைக் குறைக்க குற்றவாளி தரப்பும், அதிகபட்ச தண்டனை தர அரசு தரப்பும் மே 5-ல் வாதம் செய்யவுள்ளனர். அதன்பிறகுதான் தண்டனை விவரம் அறிவிக்கப்படும்’’ என்றார்.

இவ்வழக்கு தீர்ப்பையொட்டி சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் நீதிமன்றம் வந்திருந்தனர். நீதிமன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டிருந்தன.