惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
V
Visual Studio Blog
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
B
Blog
I
InfoQ
博客园 - 三生石上(FineUI控件)
阮一峰的网络日志
阮一峰的网络日志
F
Fortinet All Blogs
H
Help Net Security
博客园 - Franky
宝玉的分享
宝玉的分享
博客园 - 司徒正美
C
Check Point Blog
G
Google Developers Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Jina AI
Jina AI
T
The Blog of Author Tim Ferriss
MongoDB | Blog
MongoDB | Blog
云风的 BLOG
云风的 BLOG
A
About on SuperTechFans
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெக அரசுக்கு எதிரான குதிரை பேர புகார்: சிபிஐ விசாரணை கோர...
செய்திப்பிரிவு · 2026-06-20 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: தவெக அரசு மீதான நம்​பிக்கை வாக்​கெடுப்பு குதிரை பேர முறை​கேடு புகார்​கள் மீது சிபிஐ விசா​ரணை கோரிய ரிட் மனுவை விசா​ரணைக்கு ஏற்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்ட ரிட் மனு​வில் கூறியிருந்ததாவது: தமிழ்​நாடு சட்​டப்​பேர​வை​யில் கடந்த 13-ம் தேதி நடத்​தப்​பட்ட தவெக அரசு மீதான நம்​பிக்கை வாக்​கெடுப்பு வெற்றி பெற செய்​யும் வகை​யில் ஆதர​வளித்த கட்​சிகளுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு தொகை​யும், 1000 கோடி ரூபாய் அளவுக்கு அரசு ஒப்​பந்​தங்​களுக்​கான உறு​தி​யும் அளிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், நம்​பிக்கை வாக்​கெடுப்பு ஜனநாயக முறை​யில் நடை​பெற​வில்லை என்​றும் புகார்​கள் எழுந்​துள்ளன. மேலும் அமு​முக எம்​எல்ஏ காம​ராஜும், எஸ்.பி. வேலுமணி தலை​மையி​லான பிரி​வினர் தவெக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர்.

இது​போன்ற குதிரைபேர புகார்​கள் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும். தவெக அரசு மீதான நம்​பிக்கை வாக்​கெடுப்பு முறை​கேடு புகார்​களை சிபிஐ விசா​ரித்து முடிக்​கும் வரை குடியரசுத் தலை​வர் ஆட்​சியை நடை​முறைப்​படுத்​த​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த ரிட் மனுவை உச்​சநீ​தி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி வி. மோகனா அடங்​கிய அமர்வு நேற்று விசா​ரித்​தது. மனு​தா​ரர் சார்​பில் வழக்​கறிஞர் சி.ஆர். ஜெய்​சுகின் ஆஜராகி, “ஒவ்​வொரு மாநிலத்​தி​லும், மத்​தி​யிலும் கூட ஆளும் கட்சி குதிரை பேரத்​தில் ஈடு​படு​கிறது. கிழக்கு இந்​தி​யா​விலும், மத்​திய இந்​தி​யா​விலும் இது​போன்ற குதிரை பேரம் நடை​பெறுகிறது.

வசதியை செய்து தருவது யார்? - எம்​எல்​ஏக்​கள் தனி விமானத்​தில் செல்​கின்​றனர். அவர்​களுக்கு யார் இந்த வசதியை செய்து தரு​வது? தமிழ்​நாடு சட்​டப்​பேரவை தலை​வர் ஊடகங்​களை​யும் எம்​எல்​ஏக்​களை​யும் அழைத்து தீர்​மான கடிதத்தை வழங்​கியதுடன், அதி​முக எம்​எல்​ஏக்​களின் ராஜி​னாமா கடிதத்தை ஏற்​றுக் கொண்​ட​தாக​வும் அறி​வித்​தார். ஏற்​றுக்​கொண்ட சில நிமிடங்​களி​லேயே மற்​றொரு கட்​சி​யில் அவர்​கள் இணை​கிறார்​கள். இது தெளி​வான குதிரை பேரம். நமது நாட்​டில் ஆளுங் கட்​சிகள் இரு​வகை​யில் ஜனநாயக மாண்​பு​களை சீரழிக்​கின்​றன.

இது போன்ற குதிரை பேர விவ​காரத்​தில் ஜனநாயகத்தை காக்​கும் நோக்​கில் நீதி​மன்​றம் தலை​யிட வேண்​டும்​”என்று வாதிட்​டார். “மனு​தா​ரர் தாக்​கல் செய்​துள்ள பொதுநல மனுவை தள்​ளு​படி செய்​தால் ஏமாற்​றத்​துக்​கும் உள்​ளாக மாட்​டார். ஏராள​மான பொதுநல மனுக்​களை தாக்​கல் செய்​வதை வழக்​க​மாகக் கொண்​டுள்​ளார்” என்று தலைமை நீதிபதி குறிப்​பிட்ட போது, “இது ரிட் மனு” என மனுதா​ரர் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

வாதத்தை பதிவு செய்து கொண்ட உச்​சநீ​தி​மன்​றம், வாதங்​களை விரி​வாக கேட்​டோம். தெளி​வில்​லாத, வெறுமனே சுமத்​தப்​பட்​டுள்ள கடும் குற்​றச்​சாட்​டு​களுக்கு எவ்​வித ஆதா​ர​மும் இல்​லாத​தால், இந்த விவ​காரத்​தில் தலை​யிட வேண்​டிய மு​காந்​திரம்​ எழவில்​லை என்​று குறிப்​பிட்​டு ரிட்​ மனுவை தள்​ளு​படி செய்​து உத்​தரவிட்​டது.