惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
V2EX
小众软件
小众软件
GbyAI
GbyAI
B
Blog RSS Feed
月光博客
月光博客
A
About on SuperTechFans
Microsoft Security Blog
Microsoft Security Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
U
Unit 42
云风的 BLOG
云风的 BLOG
P
Proofpoint News Feed
Recent Announcements
Recent Announcements
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Vercel News
Vercel News
F
Fortinet All Blogs
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
雷峰网
雷峰网
Google DeepMind News
Google DeepMind News
MongoDB | Blog
MongoDB | Blog
Engineering at Meta
Engineering at Meta
aimingoo的专栏
aimingoo的专栏
博客园_首页
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புதுச்சேரி, காரைக்காலில் ஜூன் 14-ல் செவிலியர் பொது நுழைவ...
2026-05-15 · via hindutamil

Updated on

1 min read

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் ஜூன் 14-ல் செவிலியர் பொது நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்காக மே 18 முதல் ஜூன் 1-ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் புதுச்சேரி மருத்துவத் துறை இயக்குநரும் நோடல் அதிகாரியுமான டாக்டர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று கூறியதாவது: ”புதுடெல்லியில் உள்ள இந்திய செவிலியர் மன்றத்தின் செயலாளரால் ஜனவரி 29-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நல சேவை இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் செவிலியர் தேர்வுகள் வாரியம் மூலம், பிஎஸ்சி (நர்சிங்) சென்டாக் அரசு ஒதுக்கீட்டு சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்த முன்மொழிந்துள்ளது.

அதன்படி, பொது நுழைவுத் தேர்வு வரும் ஜூன் 14-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பதிவு விண்ணப்பம் சென்டாக் இணையத் தளத்தில் ( https://www.centacpuducherry.in/) வரும் மே 18-ம் தேதி காலை 10 முதல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி மாலை 5.45 மணியுடன் நிறைவடைகிறது.

பிஎஸ்சி (நர்சிங்) படிக்க விரும்புவோர், சென்டாக் படிப்புக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் இரண்டு முறை விண்ணப்பிக்க வேண்டும். முதலில் நீட் அல்லாத படிப்புகளுக்கும், பின்னர் பிரத்தியேகமாக பிஎஸ்சி (நர்சிங்) படிப்புக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IGMC & RI) நர்சிங் கல்லூரியில் உள்ள பிஎஸ்சி (நர்சிங்) சுயநிதி இடங்களும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அன்னை தெரசா முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (MTPG&RI) உள்ள சுயநிதி, வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டு இடங்களும் நீட் இளங்கலை (NEET UG) மதிப்பெண்களை கருத்தில் கொண்டு நிரப்பப்படும்.

மேலும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட நடைமுறையின்படியே சேர்க்கை நடைபெறும். தற்போதைய நிலவரப்படி, கலந்தாய்வுக்காகக் கிடைக்கும் மொத்த சென்டாக் பிஎஸ்சி (நர்சிங்) அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை 558 ஆகும்” என்று டாக்டர் செவ்வேள் தெரிவித்தார்.