惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园_首页
雷峰网
雷峰网
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
WordPress大学
WordPress大学
腾讯CDC
T
Tailwind CSS Blog
A
About on SuperTechFans
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
T
The Blog of Author Tim Ferriss
G
Google Developers Blog
The Cloudflare Blog
D
DataBreaches.Net
Recent Announcements
Recent Announcements
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
博客园 - 聂微东
阮一峰的网络日志
阮一峰的网络日志
月光博客
月光博客
博客园 - 司徒正美
MongoDB | Blog
MongoDB | Blog
Google DeepMind News
Google DeepMind News
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கட்சித் தாவல் ‘ஊக்குவிப்பு’ - நாடாளுமன்ற 2/3 மெஜாரிட்டி ‘...
பாரதி ஆனந்த் · 2026-06-20 · via hindutamil

Updated on: 

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை பாஜகவால் நிறைவேற்ற முடியவில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற போர்வையில் தொகுதி மறுவரையறையை பாஜக நிறைவேற்ற முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் பலமாக எதிரொலிக்க, அந்த மசோதா தோல்வியடைந்தது.

அடுத்ததாக மழைக்கால கூட்டத் தொடரை நாடாளுமன்றம் எதிர்நோக்கியிருக்கிறது. இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) மெஜாரிட்டியை பெறுவது என்பது பாஜகவுக்கு அரசியல் ரீதியாக பல்வேறு வகையிலும் சகாயமளிக்கக் கூடியது. அதைப் பற்றி சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

இன்றைய அரசியல் நிலவரப்படி ஆம் ஆத்மி தொடங்கி திரிணமூல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்தும் எம்.பி.க்கள் கொத்துக் கொத்தாக கட்சித் தாவுவது அல்லது கட்சித் தாவ ஆயத்தமாவது பாஜகவுக்கு ஒரு புதிய நம்பிக்கையை பாய்ச்சியிருக்கிறது.

அதனாலேயே, “நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறுவது மழைக்கால கூட்டத் தொடருக்குள் சாத்தியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதைக் கொண்டு அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா - தொகுதி மறுவரையறை மசோத்தாக்களை நிறைவேற்றுவோம்” என்று மத்திய அமைச்சராக உள்ள பாஜக மூத்த தலைவர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை நிறைவேற்ற அரசியல் சாசன திருத்த மசோதா பாஜகவுக்கு அவசியமாகிறது. அதற்கு நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி மிக மிக அவசியம்.

மக்களவையில் உள்ள 540 உறுப்பினர்களில் 360 என்ற சாதகமான வாக்குகள்தான் பாஜகவின் இலக்கு. இப்போதைக்கு அதன் பலம் 293 ஆக இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸிலிருந்து 20 எம்.பி.க்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிருப்தி எம்.பி.க்கள் 9 பேரில் 6 பேர் பாஜகவுக்கு தாவக்கூடும். அப்படியென்றால் அவர்களின் பலம் 319 ஆகும். அப்போதும் கூட 360 என்ற எண்ணை எட்ட இன்னும் ஒரு காத தூரம் இருக்கும்.

ஆனால், பாஜகவின் சில முக்கியப் பிரமுகர்கள் சிலர், சமாஜ்வாதி கட்சியிலிருந்து 37 மக்களவை எம்.பி.க்கள் போர்க்கொடி தூக்கிக் கொண்டு எங்கள் கட்சிக்கு தாவிவிடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சிகளுக்குள் பூகம்பங்கள் தொடரும் என்று அவர்கள் கோட் வேர்டுடன் இதைச் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து பழனிசாமியை முதல்வராக்குவது என்ற ‘போஸ்ட் போல்’ அதிர்ச்சியில் திமுக சம்பந்தப்பட்டதாக வெளியான தகவலைப் போல், காங்கிரஸால் கழட்டி விடப்பட்ட திமுகவுடன் நெருங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் முன்னெடுப்புகளை பாஜக மேற்கொள்ளாமல் இல்லை என்கின்றனர் சில அரசியல் பார்வையாளர்கள்.

245 என்ற உறுப்பினர்கள் பலம் கொண்ட மாநிலங்களவையில், என்டிஏ 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி என்பது 164 என்ற நிலையில், தற்போது என்டிஏ 152 என்ற அளவில் உள்ளது. ஏப்ரல் 24-ல் ஆம் ஆத்மியில் இருந்து 7 எம்.பிக்கள் தாவியதால் அது கிடைத்தது. திரிணமூல் எம்.பி.க்கள் மூவர் ராஜினாமாவால் ஏற்பட்ட காலியிடத்தை எப்படியும் பாஜக தனது பலத்தால் நிரப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றல்ல, இரண்டல்ல என்று பழங்கள் அடுத்தடுத்து பாலில் நழுவி விழுவதைக் கண்டு உண்மையில் பாஜகவினரே ஆச்சர்யத்தில் இருக்கிறார்களாம். ஏப்ரலில் ஆம் ஆத்மி, மே மாதத்தில் திரிணமூல், ஜூன் மாதத்தில் உத்தவ் தாக்கரே சிவசேனா என்று விக்கெட்டுகள் தங்களுக்கு சாதகமாக விழுவதில் மகிழ்ச்சியில் திளைக்கின்றனராம்.

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதும், ஒரே நாடு ஒரே தேர்தலை அமலாக்குவதிலும் பாஜக ஏன் இத்தனை முனைப்பு காட்டுகிறது என்று கேட்டால், “போஸ்ட் நரேந்திர மோடி பாஜக”-வை வலுவாகக் கட்டமைப்பதற்கான அடிப்படைத் தேவைகள் என்கிறார்கள் உள் விவகாரத்தை கசியவிட்டவர்கள்.

மோடிக்கு அடுத்த வாரிசை கட்சி சீக்கிரத்தில் முடிவு செய்யவேண்டும். அடுத்த மக்களவை தேர்தலில் மோடி 79 வயதை எட்டியிருப்பார். மோடிக்கு மாற்றாக வருபவர் அதே மக்கள் செல்வாக்கை, அபிமானத்தை பெற்றவராக இருக்க வேண்டும். அதற்கு தொகுதி மறுவரையறை உத்தரவாதம் தரும் என்று பாஜக நம்புகிறது.

எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் இதே உத்தரவாதத்தை நினைத்துதான் அஞ்சுகின்றனர். தொகுதி மறுவரையறை பாஜகவுக்கு என்றென்றைக்குமான அமைப்பு ரீதியான பலத்தை உருவாகித் தந்துவிடும் என்கின்றனர். அதற்கு அசாம் மாடலை உதாரணமாகக் கூறுகின்றனர்.

அசாமில் 2023 தேர்தலுக்கு முன்னர் பாஜக தொகுதி மறுவரையறை செய்தது. அது மாநிலத்தின் கிழக்கு, மத்திய மாவட்டங்களில் முஸ்லிம் பெரும்பான்மை வாக்கு வங்கிகளை பதம் பார்த்தது. அதனால் தேசிய அளவில் தொகுதி மறுவரையறை என்பது அசாமில் நடந்ததை நாடு முழுவதும் சாத்தியப்படுத்தும் என்று அஞ்சுகின்றனர்.

“அசாமில் எதிர்க்கட்சித் தலைவர்களின் தொகுதிகளை அரசு வேண்டுமென்றே அபகரித்து தொகுதி மறுவரையறை செய்தது. அதேதான் நாடு முழுவதும் நடக்கப் போகிறது” என்று பிரியங்கா காந்தி வாதிட்டது இங்கே நினைவுகூரத்தக்கது.

ஆனால், இதை மத்திய அரசு தரப்பு திட்டவட்டமாக மறுக்கிறது. 1971 சென்சஸ் அடிப்படையில் கடைசியாக தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. இப்போது மக்கள் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் நாடாளுமன்ற, மக்களவை தொகுதி மறுவரையறை செய்வது அவசியமானது என்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தலைப் பொறுத்தவரை, தேசப் பாதுகாப்பு, தேசிய உணர்வு, தேசப் பெருமை, இறையான்மை என்ற தேசிய அளவிலான விவாகரங்களையே மாநில அளவிலும் முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது அதற்கு சாதகமாக அமையும் என்று பாஜக நம்புகிறது.

மேலும், “தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி தன்னை இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய அரசியலில் சாத்தியமே இல்லாதது எனக் கருதப்பட்ட மாற்றங்களை எல்லாம் செய்ய வேண்டும். அதன்மூலம் வரலாற்றில் தான் நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறார். கிட்டத்தட்ட இது தனது கடைசி பதவிக்காலமாக இருக்கக்கூடும் என்பதால் ஸ்வீப்பிங் சேஞ்சஸ் தான் அவரின் இலக்கு” என்று பாஜக மூத்த தலைவர் ஒருவரே கூறுகிறார்.

உத்தவ் தாக்கரேவின் சமீபத்திய கருத்து ஒன்று இங்கே கவனிக்கத்தக்கது. “கட்சியில் யாரேனும் ஒருவர் சிவசேனாவின் அடுத்த தலைவரானால் நான் மகிழ்ச்சியுடன் எனது பதவியை ராஜினாமா செய்வேன். இந்தக் கட்சியை நிச்சயமாக திருடர்களின் கைகளில் நழுவிச் செல்ல விடமாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று ஆரம்பித்து பாஜக தேசிய அளவிலும், மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையை நோக்கி நகர்கிறதா என்று அஞ்சவைக்கிறது என்ற அரசியல் நோக்கர்கள் சிலர் கருதுகின்றனர்.