惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hugging Face - Blog
Hugging Face - Blog
GbyAI
GbyAI
Engineering at Meta
Engineering at Meta
有赞技术团队
有赞技术团队
博客园 - 【当耐特】
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
WordPress大学
WordPress大学
博客园_首页
美团技术团队
H
Help Net Security
MongoDB | Blog
MongoDB | Blog
宝玉的分享
宝玉的分享
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
J
Java Code Geeks
A
About on SuperTechFans
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
IT之家
IT之家
T
The Blog of Author Tim Ferriss
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
B
Blog
雷峰网
雷峰网
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
75-வது ஆண்டு நிறைவை ஒட்டி குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில...
2026-05-12 · via hindutamil

Updated on

1 min read

கிர் சோம்நாத்: குஜ​ராத்​தின் சோம்​நாத் கோயில் குட​முழுக்கு நேற்று நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்று சிறப்பு பிரார்த்​தனை​களை நடத்​தி​னார்.

குஜ​ராத்​தின் கிர் சோம்​நாத் மாவட்​டத்​தில் அமைந்​துள்ள சோம்நாத் கோயில், முன்​னாள் குடியரசு தலை​வர் டாக்​டர் ராஜேந்​திர பிர​சாத், சர்​தார் படேல் உள்​ளிட்​டோ​ரால் புதுப்​பிக்​கப்​பட்டு கடந்த 1951-ம் ஆண்டு திறக்​கப்​பட்​டது. இதன் 75-வது ஆண்டு நிறைவை ஒட்டி சோம்​நாத் கோயி​லில் நேற்று குட​முழுக்கு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்று சிறப்பு பிரார்த்​தனை​கள், வழி​பாடு​களை நடத்​தி​னார்.

கோயில் குட​முழுக்கு விழா நடை​பெற்​ற​போது ஹெலி​காப்​டர் மூலம் மலர்​கள் தூவப்​பட்​டன. மேலும் விமானப் படை​யின் சாகச நிகழ்ச்​சி​யும் நடை​பெற்​றது. பின்​னர் கோயில் அறக்​கட்​டளை அருங்​காட்​சி​யகத்தை பிரதமர் மோடி பார்​வை​யிட்​டார். அப்​போது அவர் சோம்​நாத் கோயில் நினைவு தபால் தலையை வெளியிட்டார்.

பின்​னர் கோயில் வளாகத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: ஒரு பக்​த​னாக சோம்​நாத் கோயிலில் பலமுறை வழி​பாடு நடத்தி உள்​ளேன். தற்​போது குடமுழுக்கு விழா​வில் பங்​கேற்​றது மிகுந்த பரவச​மாக இருக்கிறது. ஆயிரம் ஆண்​டு​களைக் கடந்​தும் சோம்​நாத் கோயில் கம்​பீர​மாக எழுந்து நிற்​கிறது.

கடந்த 1947-ம் ஆண்​டில் இந்​தியா விடு​தலை அடைந்​தது. அப்போது சுமார் 500-க்​கும் மேற்​பட்ட சமஸ்​தானங்​களை அப்போதைய உள்​துறை அமைச்​சர் சர்​தார் படேல் ஒன்றிணைத்தார். அதோடு சோம்​நாத் கோயிலை​யும் அவர் கட்டி எழுப்​பி​னார். முன்​னாள் பிரதமர் வாஜ்​பாய் ஆட்​சிக் காலத்​தில் கடந்த 1998-ம் ஆண்டு மே.11-ம் தேதி பொக்​ரானில் அணு சக்தி சோதனை நடத்​தப்​பட்​டது. மே 13-ம் தேதி மேலும் 2 அணு சக்தி சோதனை​கள் நடத்​தப்​பட்​டன.

அப்​போது இந்​தி​யா​வின் வலிமையை உலக நாடு​களுக்கு நமது விஞ்​ஞானிகள் தெளி​வாக உணர்த்​தினர். பல்​வேறு நாடு​கள் இந்தியா மீது பொருளா​தார தடைகளை விதித்​தன. ஆனால் தடைகளைத் தாண்டி இந்​தியா அதிவேக​மாக முன்​னேறியது. எந்தவொரு உலக சக்​தி​யாலும் இந்​தி​யாவை அடிபணிய வைக்க முடி​யாது. நில​வின் தென்​துரு​வத்​தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெரு​மையை நாம் பெற்​றிருக்​கிறோம். நில​வில் நமது ரோவர் தரை​யிறங்​கிய பகு​திக்கு சிவசக்தி முனை என்று பெயர் சூட்டி உள்​ளோம்.

மஹ்மூத் கஸ்​ன​வி, அலா​வுதீன் கில்ஜி உள்​ளிட்​டோர் சோம்​நாத் கோயில் மீது தாக்​குதல் நடத்​தினர். அந்​நிய படையெடுப்பாளர்களால் இந்த கோயில் மீது பலமுறை தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. அப்​போதெல்​லாம் சிவபக்​தர்​கள் கோயிலை மீண்டும், மீண்​டும் கட்டி எழுப்​பினர். நாடு சுதந்​திரம் அடைந்​த​பிறகு சர்​தார் படேல், ராஜேந்​திர பிர​சாத், கே.எம்​.​முன்ஷி உள்ளிட்டோர் சோம்​நாத் கோயிலை பிரம்​மாண்​ட​மாக கட்டி எழுப்பினர். அவர்​களை இந்த நேரத்​தில்​ நினை​வு​ கூர்​கிறேன்​. இவ்வாறு அவர்​ பேசி​னார்​.