惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
Jina AI
Jina AI
博客园 - 叶小钗
J
Java Code Geeks
博客园 - 聂微东
博客园 - 司徒正美
大猫的无限游戏
大猫的无限游戏
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
美团技术团队
WordPress大学
WordPress大学
M
MIT News - Artificial intelligence
雷峰网
雷峰网
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
GbyAI
GbyAI
罗磊的独立博客
T
The Blog of Author Tim Ferriss
aimingoo的专栏
aimingoo的专栏
T
Tailwind CSS Blog
The Cloudflare Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
N
Netflix TechBlog - Medium
小众软件
小众软件

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமைச்சர் ரமேஷ் ‘ரகசிய’ ஆய்வு, ‘சிக்கிய’ அர்ச்சகர்கள்... -...
ரெ.ஜாய்சன் · 2026-05-29 · via hindutamil

Updated on: 

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சாதாரண பக்தரைப் போல மாஸ்க் அணிந்து அதிரடி ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷிடம், சிறப்பு தரிசனத்துக்காக ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரமேஷ், “தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விசேஷ மற்றும் சிறப்பு தரிசனங்களுக்காக பக்தர்களிடம் அர்ச்சகர்களும், ஊழியர்களும் ஆயிரக்கணக்கில் பணம் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அண்மையில் போலி தரிசன டிக்கெட் வழங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் திருச்செந்தூர் கோயிலில் தொடர்ந்து பல்வேறு புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதையடுத்து தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று காலை திருச்செந்தூர் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோயில் அதிகாரிகள் யாருக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல், தனது காரை கோயில் வளாகத்துக்கு வெளியே சற்று தொலைவில் நிறுத்தினார். பின்னர், சாதாரண டி-ஷர்ட் மற்றும் மாஸ்க் அணிந்து, தனது உதவியாளருடன் ஒரு சாதாரண பக்தரைப் போலச் சென்றார்.

அங்கு விரைவாக சாமி தரிசனம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று விசாரிக்குமாறு தன் உதவியாளரை அர்ச்சகர்களிடம் அனுப்பினார். வந்திருப்பது அமைச்சர் என்று தெரியாமல், “தலைக்கு தலா ரூ.1,000 வீதம் நான்கு பேருக்கு மொத்தம் ரூ.4,000 கொடுத்தால் உடனே விஐபி (VIP) தரிசனத்தூக்கு அழைத்துச் செல்கிறோம்” என்று அங்குள்ள அர்ச்சகர்கள் பேரம் பேசியுள்ளனர்.

தன்னிடம் தற்போது கைவசம் ரொக்கப் பணம் இல்லை என்று கூறிய அமைச்சர், அங்கிருந்த அர்ச்சகரின் கூகுள் பே எண்ணுக்கு ரூ.4,000 பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்பியுள்ளார். பணம் கணக்கில் ஏறியதை அர்ச்சகர்கள் உறுதி செய்த அடுத்த நொடியே, தனது மாஸ்க்கை கழற்றி தான் யார் என்பதை அமைச்சர் வெளிப்படுத்தினார்.

பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ஆதாரத்துடன் அர்ச்சகர்களையும், அதற்குத் துணையாக இருந்த ஊழியர்களையும் அமைச்சர் கையும் களவுமாகப் பிடித்ததால் கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஊழல் அராஜகத்தில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்களை கோயில் அலுவலகத்துக்கு வரவழைத்த அமைச்சர், அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக விளக்கக் கடிதம் எழுதி வாங்கியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, அன்னதான கூடத்துக்குச் சென்று பக்தர்களோடு பக்தர்களாக அமர்ந்து உணவருந்திய அமைச்சர், அங்கு வழங்கப்படும் அன்னதான டிக்கெட் குறித்து ஆய்வு செய்தார். அங்கும் சில குழப்பங்கள் இருப்பதை அறிந்த அமைச்சர் ஊழியர்களைக் கடுமையாக எச்சரித்தார்.

மேலும் திருச்செந்தூர் கோயிலின் சொத்துக்கள், மாதாந்திர வருவாய் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து அமைச்சர் ரமேஷ் தொடர்ந்து தீவிர ஆய்வு மேற்கொண்டார். இந்தச் சம்பவம் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரின் இந்த திடீர் நடவடிக்கையை பக்தர்கள் வெகுவாக வரவேற்றனர்.

மேலும் அமைச்சர் ரமேஷ் இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இணையத்தில் பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். பணம் வசூலித்தோரிடம் மன்னிப்புக் கடிதம் அல்ல, விளக்கக் கடிதம் கேட்டுள்ளோம். அதோடு அன்னதானம் , கோயிலின் சொத்துக்கள், ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்து வருகிறோம். இந்த ஆய்வு முடிவுகள் வெளியான பிறகு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்தார்.