



















Updated on
:
1 min read
ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுதர்சன் ரெட்டி நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜூன் மாதம் 25-ம் தேதி முதல் ஜூலை மாதம் 24-ம் தேதி வரை தெலங்கானா மாநிலத்தில் வீடு, வீடாக வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் (எஸ்ஐஆர்) நடைபெற உள்ளது. வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) வீடு, வீடாக சென்று 2 படிவங்களை வழங்குவர். அதனை வாக்காளர்கள் நிரப்பி, அதில் ஒன்றை வீட்டுக்கு வந்த அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.
மற்றொரு படிவத்தை பொதுமக்களே வைத்துக் கொள்ளலாம். ஆன்-லைனிலும் எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்கலாம். அதன் பின்னர், ஜூலை 31-ம் தேதி முதல் வாக்காளர் வரைவுப் பட்டியலை அனைத்து கட்சியினருக்கும் வழங்குவோம். ஆகஸ்ட் 30-ம் தேதி வரை கருத்துக்கள் கேட்கப்படும்.
அதன்படி மறுசீராய்வு நடத்தி அக்டோபர் 1-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். கடந்த 2002-ல் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணி நடத்தப்பட்டது. சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் நடத்தப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் தகுதியான நபர்களின் பெயர்கள் விடுபட்டு விடக் கூடாது என்பதே எங்களின் நோக்கம். இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சுதர்சன் ரெட்டி தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。