






















Updated on
:
1 min read
புதுச்சேரி: அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்து விட்டு எடப்பாடி பழனிசாமி புதுச்சேரியில் இருந்து செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டார். அரசியல் சூழலுக்கு ஏற்ப முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரத்தை அவருக்கு எம்எல்ஏக்கள் அளித்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் தங்கியுள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி வியாழக்கிழமை இரவு வந்தார். எடப்பாடி பழனிசாமி இரவு 7 மணிக்கு வந்து 8.15 மணிக்கு புறப்பட்டார். அவர் ஒரு மணி நேரம் ரிசார்ட்டில் இருந்தார். 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களிடம் முக்கிய ஆலோசனை நடத்தி விட்டு சென்றதாகவும், அவர்களிடம் கையெழுத்து வாங்கியதாகவும் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு, அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கும் அதிகாரத்தையும் அவருக்கு இந்தக் கூட்டம் அளித்துள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
வழக்கமாக செய்தியாளர்களை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி இம்முறை சந்திப்பதை தவிர்த்து புறப்பட்டார். அதிமுக எம்எல்ஏக்களிடம் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு தொடர்பாக புதுச்சேரி மாநில அதிமுக செயலர் அன்பழகனிடம் கேட்டதற்கு, “புதிய எம்எல்ஏக்களிடம் பேசிவிட்டு எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார்.
விஜய்க்கு ஆதரவா என கேட்கிறீர்கள். நாங்கள் ‘யார் விஜய்?’ என கேட்கிறோம். அத்துடன் திமுகவுடன் கூட்டணியா என்பதை திமுக தலைவர் ஸ்டாலினிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும். சினிமா நடிகர் விஜய் உடன் அதிமுகவினருக்கு ஒட்டும் உறவும் இல்லை. இங்கு ஓய்வு எடுக்கதான் எம்எல்ஏக்கள் வந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர். சி.வி.சண்முகம் உட்பட சிலர் வேலைக்காக சென்றுள்ளனர்.
பதவி வெறிக்காக காங்கிரஸார் விஜய் கட்சிக்கு ஆதரவு தருகின்றனர். இது சந்தர்ப்பவாத ஆதரவு. திமுக ஆதரவுடன்தான் காங்கிரஸார் வென்றுள்ளனர். அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்ற காங்கிரஸார் பதவி வெறியால் தமிழக அரசியலை புரட்டி போடும் சூழலை உருவாக்கியதால், அதை தடுக்கும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். எம்எல்ஏக்கள் எத்தனை நாட்கள் இருப்பார்கள் என கேட்கிறீர்கள். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமையும் வரை காத்திருக்க வேண்டும்” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。