惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
爱范儿
爱范儿
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
雷峰网
雷峰网
V
V2EX
博客园_首页
Engineering at Meta
Engineering at Meta
博客园 - 聂微东
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
GbyAI
GbyAI
H
Help Net Security
A
About on SuperTechFans
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
cs.AI updates on arXiv.org
cs.AI updates on arXiv.org
Blog — PlanetScale
Blog — PlanetScale
W
WeLiveSecurity
云风的 BLOG
云风的 BLOG
D
Docker
Security Archives - TechRepublic
Security Archives - TechRepublic
Help Net Security
Help Net Security
N
News and Events Feed by Topic
Simon Willison's Weblog
Simon Willison's Weblog
G
Google Developers Blog
A
Arctic Wolf
T
The Blog of Author Tim Ferriss
博客园 - 叶小钗
CTFtime.org: upcoming CTF events
CTFtime.org: upcoming CTF events
Google DeepMind News
Google DeepMind News
博客园 - 三生石上(FineUI控件)
aimingoo的专栏
aimingoo的专栏
Hacker News: Ask HN
Hacker News: Ask HN
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 司徒正美
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
P
Privacy International News Feed
T
Troy Hunt's Blog
T
Tenable Blog
Exploit-DB.com RSS Feed
Exploit-DB.com RSS Feed
Recent Commits to openclaw:main
Recent Commits to openclaw:main
Recorded Future
Recorded Future
F
Fortinet All Blogs
D
DataBreaches.Net
B
Blog
T
Threat Research - Cisco Blogs
MyScale Blog
MyScale Blog
Hacker News - Newest:
Hacker News - Newest: "LLM"
The GitHub Blog
The GitHub Blog
Security Latest
Security Latest
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
“ஊழல் பெருச்சாளிகள்... தமிழக பாஜகவை மோடி, அமித் ஷா தூய்மைப்படுத்த வேண்டும்” - ஏ.என்.எஸ்.பிரசாத்
2026-05-08 · via hindutamil

Updated on

4 min read

சென்னை: ‘தமிழக பாஜகவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியத் தலைவர் நிதின் நபின் தூய்மைப்படுத்த வேண்டும். தமிழக பாஜகவின் மோசமான தோல்விக்கு தார்மிக பொறுப்பேற்று நயினார் நாகேந்திரன் பதவி விலக வேண்டும்’ என தமிழக பாஜக மாநில முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய், திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்று சொல்லி இருந்தேன். அப்போது, தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து என்னை விடுவித்தார்கள்.

கட்சியின் நலன் கருதி தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை மிக பிரம்மாண்டமாக முடிவு செய்யும் வண்ணம், திமுக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வீழ்த்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நான் கூறிய கருத்துக்கு எந்தவித விளக்கமும் கேட்காமல் என் மீது அன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

என் மீது எந்த தவறும் இல்லை என தமிழக பாஜக தலைமை நன்கு உணர்ந்த உடன், நான் எந்த கடிதமும் கொடுக்காமல், திடீரென்று பத்து நாட்களுக்குள், நான் மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்ததாக என்னை அவமானப்படுத்தும் விதத்தில், மீண்டும் செய்தி தொடர்பாளராக என்னை தொடர மாநில தலைமையில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தற்பொழுது நடிகர் விஜய் ஆட்சி அமைய அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நான் கூறிய அறிக்கை கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக இருப்பதாக கூறப்பட்டதன் அடிப்படையில், கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் என்னை நீக்கி இன்று மதியம் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தமிழக முதல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக மக்கள் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை அளித்ததை அனைத்து கட்சிகளும் வரவேற்க வேண்டும். அனைத்து தலைவர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நேர்மறை அரசியலை எனது தனிப்பட்ட கருத்தாக குறிப்பிட்டு இருந்தேன்.

இதுகுறித்து பிரதமர் மோடியிடமும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும், தேசியத் தலைவர் நிதின் நபீன் ஆகியோரிடமும் வலியுறுத்துவேன் என்று கூறியிருந்தேன்.

நடிகர் விஜய் அரசமைப்பதை பாஜக தடுக்கிறது என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும் என்பதை நன்கு உணர்ந்து, தொலைநோக்கு சிந்தனையுடன் அதை முறியடிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பாஜகவிற்கும், பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் அறிக்கை அளித்திருந்தேன்.

எனது அறிக்கையை முழுவதுமாக படித்தால் பாஜகவின் பெருமையை, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு இந்த தேர்தலில் ஆற்றிய பங்களிப்பை தெளிவாக குறிப்பிட்டு இருந்தேன்.

அதேசமயம் தமிழக மக்கள், எதிர்கால தமிழகத்தின் மாற்றத்திற்கான தலைவராக நடிகர் விஜய்யை முதல்வராக வேண்டி வாக்களித்துள்ளார்கள். நடிகர் விஜய் பெற்ற வெற்றிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி மிக முக்கியமான காரணமாக, அடித்தளமாக இருந்துள்ளது என்கிற உண்மையை மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் ஆதரவு பெற்ற நடிகர் விஜய் ஆட்சி அமைக்க அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் ஆதரவளிக்க வேண்டும் என்று அரசியல் நாகரிகத்தோடு, தமிழகத்தில் சுயநல குதிரை பேர அரசியல் நடக்கக் கூடாது என்கிற எனது தமிழக அரசியல் நலம் சார்ந்த நியாயமான கருத்தை, தமிழ் குடிமகனாக மிக எதார்த்தமாக தெரிவித்திருந்தேன். இதில் எந்த தவறும் இல்லை.

ஆனால், 28 ஆண்டுகள் தமிழக பாஜக கட்சியின் தொண்டராக, தொகுதி, மாவட்ட, மாநில நிர்வாகியாக அனைத்து படிநிலைகளிலும் முழுமையாக அர்ப்பணிப்புடன் பணி செய்து வந்த என்னிடம், எந்தவித விளக்கமும் கேட்காமல், திடீரென்று இன்று அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உள்நோக்கத்துடன் என்னை நீக்கியது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

மேலும் கடந்த முறை மாநில செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ஏ.என்.எஸ் பிரசாத் விடுவிக்கப்படுகிறார் என்று மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தார். இன்று என்னை நீக்கும் பொழுது கட்சியின் கட்டுப்பாட்டிற்கு தொடர்ந்து களங்கம் விளைவிப்பதாக, அவதூறு செய்து காயப்படுத்தி பொறுப்பில் இருந்து வெளியேற்றுவது கண்ணீரை வரவழைக்கிறது.

தமிழக பாஜக தலைமை எடுக்கும் முடிவை நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் அதேசமயம் தேசிய தலைமை என்னை அகில இந்திய செய்தி தொடர்பாளராக அறிவிக்கக்கூடிய சூழ்நிலையில், வேண்டுமென்றே என்னை திட்டமிட்டு அவதூறு செய்து என்னை, என் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தின் அடிப்படையில் என்னை பொறுப்பில் இருந்து நீக்கி இருப்பது நியாயமற்றது.

தமிழக பாஜகவின் சில மூத்த தலைவர்கள், வேண்டுமென்று எனக்கு அங்கீகாரம் கொடுக்காமல், என்னை தொடர்ந்து அவமானப்படுத்தி துரோகங்கள் செய்தாலும், சோதனைகள் வந்தாலும்

அனைத்தையும் தாங்கிக் கொண்டு பாஜகவின் கொள்கைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் கட்டுப்பட்டு, பாரத பிரதமர் மோடியின் தொண்டனாக தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்கு நான் சிறப்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.

என்னை தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளராக முழு சுதந்திரம் அளித்து செயல்பட வைத்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும், தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம், தமிழக பாஜகவின் மோசமான தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதவி விலக வேண்டும்.

அதேபோல் ஒவ்வொரு முறையும் தொகுதிகளை மாற்றி, தமிழக பாஜக கட்சியினரை ஏமாற்றி, தொடர்ந்து கட்சியினரை அனைத்து நிலைகளிலும் அவமானப்படுத்தி கேவலப்படுத்தி, நேர்மையின்றி, ஒழுக்கமற்ற முறையில் செயல்படும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தன்னுடைய தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று, பிரதமர் மோடிக்கு களங்கம் ஏற்படுத்தாமல் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

கட்சிக்காக அர்ப்பணிப்புடன் முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் உயிரைப் பணயம் வைத்து, திமுகவை எதிர்த்து தேர்தல் கமிஷன் எஸ்சி எஸ்டி கமிஷன் மனித உரிமை கமிஷன் மாநில மகளிர் கமிஷன் என்ன பல்வேறு மத்திய அரசு துறைகளில் ஏராளமான புகார்கள் அளித்தேன். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு போட்டேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்னுடைய சொந்த பணம் 20 லட்சம் ரூபாய் செலவு செய்து கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக பத்தாயிரம் வாக்குகளுக்கு மேல் குறைவாக பெற்றிடும் வகையில் பல அச்சுறுத்தல்களுக்கு இடையில், உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தான சூழ்நிலையில் துணிந்து தேர்தல் வேலை பார்த்தேன்.

எத்தனையோ வகையில் கட்சிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தும் என்னை எந்தவித விளக்கமும் கேட்காமல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே என் பதவியை பறிக்கும் எண்ணத்துடன் திட்டமிட்டு நீக்கியது குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியத் தலைவர் நிதின் நபின் அவர்களிடம் விரைவில் நேரில் சந்தித்து தெரிவிப்பேன்.

மேலும் தமிழக பாஜகவில் நடைபெற்ற அனைத்து சீர்கேடுகளையும் ஆதாரங்களுடன் அளித்து, தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு என் பங்களிப்பை துணிந்து இனி உறுதியாக அளிப்பேன். இனி தமிழக பாஜகவும் தமிழக பாஜக தொண்டர்களும் எந்தவித பாதிப்புக்கும் ஆளாகாதவாறு தொண்டனாக எனது பங்களிப்பை அளிப்பேன்.

மேலும் தமிழக பாஜகவின் சுயநல அரசியல் தலைவர்கள் தேர்தலின் போது கட்சி பணத்தை கொள்ளை அடித்தது குறித்தும், நிர்வாகிகளை வேட்பாளராக அறிவிக்க பணம் பெற்றது குறித்தும், தேர்தலுக்கு வேட்பாளர்கள் தங்கள் பூத்துகளுக்கு செலவிட கொடுக்கப்பட்ட பணத்தை இடையில் சூறையாடியது குறித்தும் முழுமையாக விசாரணை செய்ய வேண்டும் என்று தேசிய தலைமையிடம் வலியுறுத்துவேன்.

மேலும், எந்தவித கட்சிப் பணியும் செய்யாமல், கட்சித் தொண்டர்களுக்கு பதவி வாங்கித் தருகிறேன் என்று பணம் பறித்து, குடித்து, ஓட்டலில் ஓசி சோறு சாப்பிட்டு பல்வேறு கட்சியினரோடு வியாபார ஒப்பந்தங்களை போட்டு ,அரசியல் வியாபாரம் செய்து, தமிழக பாஜக கட்சியின் நிர்வாக சீர்கேட்டுக்கு காரணமாக இருந்த மாநில நிர்வாகிகள், மற்றும் பிரதமரின் நிகழ்ச்சிகள், மற்றும் முக்கிய பாஜக நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் கட்சி நிதியை முறைகேடாக செலவு செய்ததாக கூறி பணம் பெற்ற நிர்வாகிகள் குறித்தும் முழுமையாக விசாரணை நடைபெற வேண்டும் என்றும் தேசிய தலைமையை வலியுறுத்துவேன்.

தமிழக பாஜகவை முழுமையாக சீர்படுத்தும் விதத்தில், தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை மீண்டும் தமிழக பாஜக தலைவராக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.

தமிழகத்தில் உள்ள பாஜகவின் இளம் தலைவர்களை அடையாளம் கண்டு தமிழக பாஜகவில் ஊழல் பெருச்சாளிகளை அகற்றி புது ரத்தம் ரத்தம் பாய்ச்சக் கூடிய வகையில்

பிரதமர் மோடியின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தொலைநோக்கு சிந்தனைகளை லட்சியங்களை, மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் கடைகோடி தொண்டனுக்கும் கொண்டு போய் சேர்க்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்க முயற்சிப்பேன். தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் தமிழக மக்கள் விரும்பும் மாற்றத்திற்கான ஆட்சி அமைய வேண்டும் என தொண்டர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்பொழுது யார் தமிழகத்தில் ஆட்சி அமைத்தாலும், வருகின்ற 2030 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் தமிழக பாஜக தலைமையிலான வெற்றி கூட்டணி பிரதமர் மோடியின் வெற்றிக்கு மிகச் சிறப்பான பங்களிப்பை அளிக்கக்கூடிய, தமிழக பாஜகவின் மாநில நிர்வாகத்தில் இறைவன் திருவருளால் முக்கிய பங்கு வகிப்பேன் என்ற நம்பிக்கை உடன் செய்தி தொடர்பாளர் பணியில் இருந்து விடைபெறுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.