






















பேருந்துகள், ரயில்களில் முன்பதிவு செய்யாதவர்களும், திடீரென பயணத்தை திட்டமிட்டவர்களும் முந்தைய நாளான 22-ம் தேதி இரவு சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்தனர். ஆனால், அங்கிருந்து திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். குழந்தைகள், பெண்கள் விடிய விடிய பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், பயணிகள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மறுநாள் காலை 9 மணிக்குப் பிறகே நிலைமை சீரடைந்தது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் கூறியதாவது: கடந்த 21-ம் தேதி வழக்கமான 2,092 பேருந்துகள், கூடுதலாக 1,339 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1.89 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். 22-ம் தேதி முதல் 23-ம் தேதி நண்பகல் 12 மணி வரை, வழக்கமான 3 ஆயிரம் பேருந்துகள், கூடுதலாக 4,206 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 7,206 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4.38 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். அந்த வகையில், 21-ம் தேதி முதல் 23-ம் தேதி காலை 6 மணி வரை, மொத்தம் 10,637 பேருந்துகள் இயக்கப்பட்டு, 6.25 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். எனவே, பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。