
























10-க்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்களை சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஊதா வழித்தட மெட்ரோ சேவை முடங்கியதால் பேருந்து, ஆட்டோ, வாடகை கார் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் 5 கி.மீ. வரை நடந்து சென்றனர். பெரும்பாலானோர் அதிக கட்டணம் கொடுத்து வாடகை வாகனங்களில் சென்றனர்.
கெங்கேரி, எலச்சனஹள்ளி, நாகசந்திரா போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வெளியே 11 மணி வரை காத்திருந்த பயணிகள் லாரி, சரக்கு வாகனம் ஆகியவற்றில் ஏறி வீட்டுக்குச் சென்றனர். ஐடி ஊழியர்கள் லாரிகளில் ஏறிச் செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலானது. இதனிடையே தொழில் நுட்ப குழுக்கள் சம்பவ இடத்துக்கு சென்று சேவையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டன. இதையடுத்து நேற்று காலை 5 மணி முதல் மெட்ரோ சேவை மீண்டும் தொடங்கியது.
இது குறித்து பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கூறுகையில், ”உலகின் முதல்தர திறமை படைத்த ஐடி ஊழியர்கள், மூன்றாம் தர அரசின் காரணமாக சரக்கு வாகனங்களில் ஏறிச் செல்லும் அவலம் நிகழ்ந்துள்ளது. லட்சக்கணக்கில் வரி செலுத்தியும் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதியும், போக்குவரத்து வசதியும் அரசு அவர்களுக்கு செய்து தரவில்லை. மெட்ரோ சேவை முடங்கினால் அரசு உடனடியாக போக்குவரத்து வசதி செய்து தந்திருக்க வேண்டும்” என விமர்சித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。