惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Engineering at Meta
Engineering at Meta
雷峰网
雷峰网
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog
Y
Y Combinator Blog
WordPress大学
WordPress大学
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
小众软件
小众软件
G
Google Developers Blog
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 叶小钗
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
量子位
The Cloudflare Blog
T
The Blog of Author Tim Ferriss
博客园_首页
B
Blog RSS Feed
Hugging Face - Blog
Hugging Face - Blog
IT之家
IT之家
阮一峰的网络日志
阮一峰的网络日志
L
LangChain Blog
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கரூர் கல்லூரி மாணவி கொலை வழக்கில் பிறழ்சாட்சியம் அளித்த ச...
செய்திப்பிரிவு · 2026-06-17 · via hindutamil

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Updated on: 

மதுரை: கரூர் பொறி​யியல் கல்​லூரி மாணவி வகுப்​பறை​யில் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் பிறழ்​சாட்சி அளித்த மாணவர்​கள் சமூக ஊடகங்​களில் வெறுமனே எதிர்ப்பு கருத்​துகளை தெரி​விப்​ப​தால் எந்​தப் பலனும் இல்​லை. அது செய​லாக மாறா​விட்​டால் மாணவர்​கள் நிஜ வாழ்க்​கை​யில் காகிதப் புலிகளாக மட்​டுமே இருப்​பர் என உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் அறி​வுரை வழங்கி உள்​ளனர்.

கரூர் பொறி​யியல் கல்​லூரி​யில் 2016-ல் பிஇ 3-ம் ஆண்டு படித்து வந்​தவர் சோனாலி. இவருடன் படித்​தவர் உதயகு​மார். இருவரும் நண்​பர்​களாக இருந்​துள்​ளனர். பின்​னர், உதயகு​மாருடன் பேசுவதை சோனாலி நிறுத்​தி​விட்​டார்.

இந்​நிலை​யில் 2016 ஆக. 30-ல் கல்​லூரி​யில் வகுப்பு நடந்​த​ போது, மரக்​கட்​டை​யுடன் வந்த உதயகு​மார் வகுப்​பறை​யில் பேராசிரியர், சக மாணவர்​கள் முன்​னிலை​யில் சோனாலி​யின் தலை​யில் கடுமை​யாகத் தாக்​கி​னார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்டு உயி​ரிழந்​தார். இதையடுத்து உதயகு​மாரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இவ்​வழக்கை விசா​ரித்த கரூர் மகளிர் நீதி​மன்​றம் உதயகு​மாருக்கு ஆயுள் தண்​டனை வழங்கி 2022 பிப். 1-ல் தீர்ப்​பளித்​தது. இந்த தண்​டனையை ரத்து செய்​யக்​கோரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் உதயகு​மார் மேல்​முறை​யீடு செய்​தார். இம்​மனுவை நீதிப​தி​கள் ஆனந்த் வெங்​கடேஷ்,ராமகிருஷ்ணன் அமர்வு விசா​ரித்​தது. மனு​தா​ரர் தரப்​பில், வழக்​கின் சாட்​சிகள் பலர் பிறழ்சாட்​சிகளாக மாறி​விட்​டனர்.

அடை​யாள அணி வகுப்பு முறை​யாக நடத்​தப்​பட​வில்லை என வாதிடப்பட்டது. பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: பழகு​வதை நிறுத்​தும் பெண்ணை கொலை செய்​வது நியாய​மான செயல் என நினைக்​கும் போக்கு சமீப​காலங்​களில் அதி​கரித்து வரு​கிறது. மனு​தா​ரரின் கொடூர​மான செய​லால், பெரிய கனவு​களு​டன் வாழ்ந்த ஒரு பெண்​ணின் உயிர் பறி​போய்​விட்​டது.

வகுப்​பறை​யில் பல மாணவர்​கள் முன்​னிலை​யில் பட்​டப்​பகலில் சம்​பவம் நடந்​துள்​ளது. தாக்​குதலை தடுக்க சக மாணவர்​கள் எந்த முயற்​சி​யும் எடுக்​க​வில்​லை. நீதி​மன்​றத்​திலா​வது உண்​மை​யான சாட்​சி​யம் அளித்​திருக்க வேண்​டும். அதை செய்​யாமல் பிறழ் சாட்​சி​யாக மாறி​யுள்​ளனர். சமூக ஊடகங்​களில் வெறுமனே எதிர்ப்பு கருத்​துகளைத் தெரி​விப்​ப​தில் எந்​தப் பலனும் இல்​லை. அது செய​லாக மாற வேண்​டும். இல்​லா​விட்​டால், மாணவர்​கள் நிஜ வாழ்க்​கை​யில் காகிதப் புலிகளாக மட்​டுமே இருப்​பர்.

இந்த வழக்​கில் போது​மான அளவு உறு​திப்​படுத்​தப்​பட்ட சாட்​சி​யங்​கள் உள்​ள​தால் சிறிய முரண்​பாடு​களை கவனிக்க வேண்​டிய​தில்​லை. இதனால் விசா​ரணை நீதி​மன்​றத்​தின் தீர்ப்​பில் தலை​யிட வேண்​டிய​தில்​லை. மேல்​முறை​யீடு மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​வில் குறிப்​பிட்​டுள்​ளனர்.