






















புதுடெல்லி: நீட் போன்ற கசிந்த தேர்வுத் தாள்களை பரப்புதல், இணையவழி மோசடி, பயங்கரவாதம் தொடர்பான பிரச்சாரம், சிறார் ஆபாசப் படங்கள், போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய தளமாக டெலிகிராம் உருவெடுத்துள்ளதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், “அச்சுறுத்தும் சக்திகளை இணைக்கும் புதிய கருப்பு இணையமாக டெலிகிராம் மாறியுள்ளது. தவறான இணையதள இணைப்புகளை பதிவிட குற்றவாளிகள் டெலிகிராமை பயன்படுத்துகின்றனர். இது, குற்றவாளிகளை கண்காணித்து அடையாளம் காண்பதை அதிகாரிகளுக்கு கடினமானதாக்குகிறது. டெலிகிராமின் தனியுரிமை மற்றும் அடையாளம் மறைப்பு அம்சங்கள், குற்றத்தில் ஈடுபடும் குழுக்களுக்கு சாதகமாக உள்ளன.
டெலிகிராம் பயனர்கள், தனியுரிமை அமைப்புகள் மூலம் தொலைபேசி எண்கள் மற்றும் டெலிகிராம் முகவரி போன்ற அடையாளங்களை மறைக்க முடிகிறது. இதனால், இந்த கணக்குகளுக்கு உரியவர் யார் என்பதை அடையாளம் காண்பது புலனாய்வு பிரிவினருக்கு கடிதனமானதாகிறது. தனியுரிமை அம்சங்கள் காரணமாக போதைப் பொருட் கடத்தல், இணையக் குற்றங்கள், தீவிரவாதம், பயங்கரவாதம், குழந்தைகளைச் சுரண்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு டெலிகிராம் பயன்படுத்தப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。