惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
I
InfoQ
J
Java Code Geeks
Microsoft Security Blog
Microsoft Security Blog
G
Google Developers Blog
D
DataBreaches.Net
Recent Announcements
Recent Announcements
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
B
Blog RSS Feed
Y
Y Combinator Blog
博客园 - 【当耐特】
博客园 - 聂微东
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
大猫的无限游戏
大猫的无限游戏
P
Proofpoint News Feed
量子位
C
Check Point Blog
F
Fortinet All Blogs
罗磊的独立博客
Last Week in AI
Last Week in AI
GbyAI
GbyAI
L
LangChain Blog
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உடன் பிறவா உடன் பிறப்பு - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ...
Guest Author · 2026-05-25 · via hindutamil

Updated on: 

என்​னிடம் மானேஜ​ராக இருந்​தவர், தம்பி அருணாச்​சலம். அவர் நிறைய விஷ​யங்​களில் என்​னிடம் ஆலோ​சனை கேட்​பார். நானும் அவரிடம் கேட்​பேன். தொழில் விஷய​மா​னாலும் சரி, குடும்​பம் தொடர்​பாக​வும் சரி. எனக்கு இன்​சூரன்ஸ் எடுக்க வேண்​டும் என்று பேசிக்​கொண்​டிருந்த போது, அவர் ஒரு முகவரை அனுப்​பி​னார். அவர் பெயர் செபாஸ்​டியன் இன்​ப​ராஜ்.

அவர் மனைவி புனி​தா. மகன் பெயர் நைஜில், மகள் இன்​பென்​டா. இன்​சூரன்ஸ் ஏஜென்​டாக அறி​முக​மான செபாஸ்​டியன், பிறகு என் குடும்​பத்​துட​னும் என்​னுட​னும், என் உடன் பிறந்த தம்பி மாதிரி ஒட்​டிக் கொண்​டார். எனக்கு எந்த வேலை என்​றாலும் சரி, அவர் கவனித்​துக் கொள்​வார். நான் இரண்டு வீடு​களை வாடகைக்கு விட்​டிருந்​தேன்.

அதன் வாடகை, அதில் ஏதும் ரிப்​பேர் செய்ய வேண்​டும் என்​றாலும் அதுதொடர்​பான அனைத்து வேலைகளை​யும் பார்த்​துக்​கொள்​வார். எனக்கு எல்லா விஷ​யங்க ளிலும் அவர்​தான் உறு​துணை.

சில சிறுகதைகளை நான் என் குரலில் பேசி வெளி​யிட்​டிருக்​கிறேன். லால்​குடி சாது ராம் என்​பவர் கதைகளை எழுதி அனுப்​பு​வார். நான் அதை சரி செய்து படிப்​பேன். அப்​படி அவர் அனுப்பிஇருந்த ஒரு கதைக்கு ‘அப்​பா- மகள்’ என்று தலைப்பு வைத்து அதில் வரும் போலீஸ் அதி​காரி கதா​பாத்​திரத்​துக்கு செபாஸ்டி யன் இன்​ப​ராஜ் என்ற பெயரை வைத்​திருந்​தேன்.

அவர் மனை​விக்கு புனிதா என்ற பெயரை​யும் மகளுக்கு இன்​பென்டா என்​றும் வைத்​தேன். அதை அவருக்கு அனுப்பி வைத்​ததும் அதைக் கேட்​டு​விட்டு போனில் அழ ஆரம்​பித்​து​விட்​டார். “ஏன் அழறீங்க தம்​பி? இது சின்ன மேட்​டர்​தானே?” என்று சொன்​னேன்.

பிறகு வீட்​டுக்கு வந்து என் மனை​வி​யிடம், “அண்​ணி, எவ்​வளவு பெரிய கவுர​வத்தை அண்​ணன் எனக்கு கொடுத்​திருக்​காங்க” என்று கண்​கலங்​கி​னார். “அவர் குரூப்​பில் எல்​லோருக்​கும் அனுப்ப அனை​வரும், “என்​ன​டா.. உன் அண்​ணன் உன் மேல இவ்​வளவு பாசம் வச்​சிருக்​கார் என்று சொன்​னார்​கள்” என்​றார்.

<div class="paragraphs"><p>செபாஸ்​டியன் இன்​ப​ராஜ்</p></div>

செபாஸ்​டியன் இன்​ப​ராஜ்

எல்​.ஐ.சி-​யில் அவர் ஏஜென்​டாக இருந்​தார். அவர் ஆபிஸில் ஏதாவது பங்​ஷன் என்​றால் அவரிடம் என்னை அழைத்து வரச்​சொல்​வார்​கள். நானும் செல்​வேன். அவர் மூல​மாக என் குடும்​பத்​தில் அனை​வருக்​கும் இன்​சூரன்ஸ் போட்​டிருக்கிறேன்.

அவர் ஒவ்​வொரு வருட​மும் விரதம் இருந்து திருச்​சி​யில் இருந்து வேளாங்​கண்​ணிக்கு பாத​யாத்​திரை செல்​வார். செல்​லும் முன் “அண்​ணே, உங்​களை பார்க்​கணும்​ணே” என்று வீட்​டுக்கு வந்​து​விடு​வார். நான் நெற்​றி​யில் பட்டை பட்​டை​யாக விபூதி பூசி​யிருந்​தா​லும் அவர் என் முன் மண்​டி​யிடு​வார்.

நான் தேவால​யங்​களில் ஃபாதர்​கள் சொல்​வது போல அவருக்கு ஆசி வழங்​கி, நெற்​றி​யில் சிலுவை போட்ட பின்​தான் கிளம்​பு​வார். இதை எதற்​காகச் சொல்ல வந்​தேன் என்​றால், மதங்​களை கடந்து நாங்​கள் அண்​ணன் - தம்​பி​யாக இணைந்​திருந்​தோம் என்​ப​தற்​காக​தான்.

“அண்​ணே, நான் கடைசி வரைக்​கும் உங்​களு​டன் இருப்​பேன் அண்​ணே. என்ன பிரச்​சினை என்​றாலும் நான் பார்த்​துக்​கொள்​கிறேன்” என்று சொல்​கிற தம்பி அவர். ‘விந்​தை’ என்ற படத்​தின் படப்​பிடிப்பு போரூரில் நடை​பெற்ற போது “நான் ஷூட்​டிங் வரலா​மாண்​ணே?” என்று கேட்​டார். ““என்ன தம்பி இப்​படி கேட்கி றீங்க, வாங்க” என்​றேன்.

வந்​தார். நான் நடிப்​பதை வியந்து பார்த்​துக் கொண் டிருந்​தார். நாங்​கள் பழனி கோயிலுக்​குப் போன போது மகன் நைஜிலை அழைத்​துக்​கொண்டு எங்​களு​டன் வந்​து​விட்​டார். நாங்​கள் வேளாங்​கண்ணி போனால், தீர்த்​தம் வாங்கி வந்து அவருக்கு கொடுப்​போம். அவரும் அப்​படி செய்​வார். எங்​கள் இரு​வருக்​குள்​ளும் பெரிய பிணைப்பு இருந்​தது.

நான் நசரத்​பேட்​டைக்கு குடிவந்த பிறகு, தூர​மாக இருப்​ப​தால் அவர் என் வீட்​டுக்கு வரு​வது குறைந்​து​விட்​டது. ஆனாலும் எனக்கு செய்​யும் உதவி​களை செய்து கொண்டே இருந்​தார். பிறகு “வேறு வீடு மாறி​விட்​டேன், நீங்​கள் வரணும்” என்று அழைத்​துக்​கொண்டே இருந்​தார்.

‘வர்​றேன்​’என்று சொல்​லிக் கொண்​டிருந்​தேன். கடந்த வருடம் ஆகஸ்ட் 20-ம் தேதி காலை அவர் மகன் போன் பண்​ணி​னார். “அப்பா வேளாங்​கண்​ணிக்கு பாதை​யாத்​திரை போனாங்க. ஹார்ட் அட்​டாக்லதவறிட்​டாங்க” என்று சொன்​னதும் எனக்கு பகீரென்​றது. அவருக்கு வயது 53, 54 தான் இருக்​கும்.

உடனே, காலம் சென்ற ஏழு​மலை​யும் நானும் திருச்​சிக்கு சென்று அவர் உடலைப்​பார்த்து கதறி அழுது விட்டு வந்​தோம். அப்​படி என் மீது அக்​கறை கொண்ட உடன் பிற​வா, உடன் பிறப்​பின் இறப்​பைத் தாங்​கிக்​கொள்ள முடிய​வில்​லை.

இறைவன் ஒவ்​வொரு உறவாக கொடுக்​கிறான். பிறகு அவனே எடுத்​துக்​கொள்​கிறான். அதனால் வரும் வேதனையை நாம் அனுப​விப்​பது​தான் நாம் அறிந்தோ அறி​யாமலோ செய்​த பாவங்​களுக்​கான தண்​டனையோ? அவன்​ கணக்​கை யார்​ அறி​வார்​?

(திங்​கள்​தோறும் பேசுவோம்)