
























Updated on
:
1 min read
புதுடெல்லி: நீட், சிபிஎஸ்இ, எஸ்எஸ்சி, கியூட் ஆகிய 4 தேர்வுகளின் குளறுபடியால் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3-ம் தேதி நடைபெற்றது. வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் விடைத்தாள் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதில் சர்ச்சை எழுந்திருக்கிறது. உத்தர பிரதேசம், பிஹாரில் அண்மையில் நடைபெற்ற கணினி வழியிலான எஸ்எஸ்சி தேர்வின்போது சர்வர் கோளாறால் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடைபெற்ற கணினி வழியிலான கியூட் நுழைவுத் தேர்வின்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நீட், சிபிஎஸ்இ, எஸ்எஸ்சி, கியூட் ஆகிய 4 தேர்வுகளின் குளறுபடியால் சுமார் ஒரு கோடி மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு தேர்வுகூட நேர்மையாக நடத்தப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியை, ‘உலக குரு' என்று அழைக்கிறார்கள். ஆனால் அவர் ஒட்டுமொத்த கல்வி முறையையும் சீர்குலைத்து உள்ளார். நீங்கள் (மோடி) ஒரு தலைமுறையின் எதிர்காலத்தை அழித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த தலைமுறை நீங்கள் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்க வைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。