惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
量子位
GbyAI
GbyAI
腾讯CDC
T
Tailwind CSS Blog
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
D
Docker
G
Google Developers Blog
aimingoo的专栏
aimingoo的专栏
The GitHub Blog
The GitHub Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
小众软件
小众软件
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
N
Netflix TechBlog - Medium
Jina AI
Jina AI
IT之家
IT之家
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நடுக்கடலில் மீன் பிடித்தபோது தாக்குதல் நடத்திய இலங்கை கடற...
2026-04-28 · via hindutamil

பிடிபட்ட இலங்கை கடற்கொள்ளையர் அயந்தன்.

Updated on

1 min read

நாகப்பட்டினம்: கடலில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்த நாகை மீனவர்​களுக்​கும், இலங்கை கடற்​கொள்​ளையர்​களுக்​கும் மோதல் ஏற்​பட்டது. இதில் ஒரு​வரை நாகை மீனவர்​கள் பிடித்து வந்து போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர்.

மேலும் 2 பேர் படகு மூலம் தப்பினர். நாகை மாவட்​டம் செருதூரிலிருந்து பால​முரு​கன் என்​பவருக்​குச் சொந்​த​மான பைபர் படகில் கடந்த 25-ம் தேதி சக்​தி​ம​யில், அபிமன், பாலசுப்​பிரமணி​யன், பழனிச்​சாமி, கன்​னி​யாகுமரி உவரி பகு​தியை சேர்ந்த அபி ஆகியோர் கடலுக்கு மீன்​பிடிக்​கச் சென்​றனர்.

நேற்று முன்​தினம் இரவு 11 மணி​யள​வில் அங்கு ஒரு படகில் இலங்கை கடற்​கொள்​ளை​யர்​கள் 3 பேர் வந்தனர். மீனவர்களைத் தாக்​கி, படகில் இருந்த மீன்​கள், ஜிபிஎஸ் கரு​வி, செல்​போன் ஆகிய வற்றை பறித்​துக் கொண்​டு, வலை​யை​யும் அறுக்க முற்​பட்​டனர்.

அதை தடுக்க முயன்​ற​போது இருதரப்​பினர் இடையே மோதல் ஏற்​பட்​டது. இதில், கடற்​கொள்​ளையர்களில் ஒருவரை செருதூர் மீனவர்​கள் பிடித்தனர். மற்ற 2 பேர் படகில் தப்​பினர்.

பிடிபட்ட நபர் இலங்கை காங்​கேசன்​துறை வழலை​யைச் சேர்ந்த அயந்​தன் என்​பதும், இவர் உள்ளிட்ட 3 பேரும், இதற்கு முன் செருதூர் மீனவர் மணி​வாசகம் என்​பவரது படகை மறித்​து, அதிலிருந்​தவர்​களை தாக்​கி உடமைகளை கொள்ளையடித்ததும் தெரிய​வந்​தது.

பின்​னர் அவரை செருதூர் மீன்​பிடி இறங்​கு தளத்​துக்கு நேற்று அழைத்து வந்து கீழையூர் போலீ​ஸாரிடம் மீனவர்​கள் ஒப்​படைத்​தனர். கடலில் நடந்த மோதலில் காயமடைந்த அயந்​தன், நாகை அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அதே​போல, கடற்​கொள்​ளை​யர்​கள் தாக்​கிய​தில் காயமடைந்த செருதூர் மீனவர்​கள் 7 பேரும் மருத்​து​வ​ மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

இதுகுறித்து பாதிக்​கப்​பட்ட மீனவர் மணி​வாசகம் கூறும்​போது, எங்​கள் படகை வழிமறித்த இலங்கை கடற்​கொள்​ளை​யர்​கள், படகில் இருந்த மீன்​பிடி சாதனங்​கள் மற்​றும் மீன்​களை பறித்​துக் கொண்​டனர்.

தொடர்ந்து நள்​ளிரவு முதல் அதி​காலை 3 மணி வரை அடித்து உதைத்து கொடுமைப்​படுத்​தினர். எனது மகனின் கழுத்தில் கத்​தியை வைத்து மிரட்டி, இனி நீங்​கள் வந்​தால் பெட்​ரோல் குண்டு வீசி கொன்று விடு​வோம் என மிரட்​டினர் என்​றார்.

தாக்​குதல் நடத்​திய இலங்கை கடற்​கொள்​ளை​யர்​களில் ஒரு​வரை தமிழக மீனவர்​கள் பிடித்து வந்து தமிழக போலீஸாரிடம் ஒப்​படைத்​துள்ளது இதுவே முதல்​முறை​ என்பது குறிப்​பிடத்​தக்​கது.