




















நேற்றுமுன்தினம் இரவு அவர், சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில் 2-வது தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று காலை 6 மணிக்கு இவரை பணி மாற்றம் செய்வதற்காக, மற்றொரு காவலர் அங்கு வந்த போது, காந்தி கன்னியப்பன் இல்லை.
அவரை தேடிய போது, அவர் அங்குள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கியபடி இறந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும், விரைந்து வந்த சென்னை விமான நிலைய போலீஸார் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து பார்த்த போது, அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。