惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

美团技术团队
D
DataBreaches.Net
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
D
Docker
N
Netflix TechBlog - Medium
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
C
Check Point Blog
腾讯CDC
Stack Overflow Blog
Stack Overflow Blog
V
Visual Studio Blog
IT之家
IT之家
月光博客
月光博客
U
Unit 42
K
Kaspersky official blog
T
Threatpost
cs.AI updates on arXiv.org
cs.AI updates on arXiv.org
GbyAI
GbyAI
P
Proofpoint News Feed
Last Week in AI
Last Week in AI
云风的 BLOG
云风的 BLOG
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
I
InfoQ
Engineering at Meta
Engineering at Meta
Recorded Future
Recorded Future
Exploit-DB.com RSS Feed
Exploit-DB.com RSS Feed
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
S
Security @ Cisco Blogs
MyScale Blog
MyScale Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Security Archives - TechRepublic
Security Archives - TechRepublic
Webroot Blog
Webroot Blog
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org
Hacker News - Newest:
Hacker News - Newest: "LLM"
S
Schneier on Security
S
Secure Thoughts
The Register - Security
The Register - Security
B
Blog RSS Feed
The Last Watchdog
The Last Watchdog
P
Palo Alto Networks Blog
爱范儿
爱范儿
B
Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
N
News and Events Feed by Topic
阮一峰的网络日志
阮一峰的网络日志
L
LINUX DO - 热门话题
C
Cisco Blogs
Spread Privacy
Spread Privacy
F
Full Disclosure
博客园 - 聂微东
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
காட்டுக்குள் கேட்ட குரல்கள்! | கதை
2026-05-06 · via hindutamil

Updated on

2 min read

செண்பகக் காட்டின் மலை அணில் வயிறு முட்டப் பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, நிம்மதியாகக் தூங்குவதற்கு ஓர் இடத்தைத் தேடிக்கொண்டிருந்தது. அப்போதுதான் மலை அடிவாரத்தில் திடீரென முளைத்திருந்த ஓர் இரும்புக் கோபுரம் அதன் கண்ணில் பட்டது. அது ஓர் அலைபேசி நிறுவனம் தனது இணைய சேவைக்காகவும், தகவல் பறிமாற்றத்துக்காகவும் நட்டு வைத்த கோபுரம்.

கோபுரத்தின் உச்சியில் ஏறிப் பார்த்தால் மேகத்தைத் தொட்டுவிடலாம் போலிருக்கிறதே என்று நினைத்த மலை அணில், மடமடவென ஏறியது. சுமார் 60 அடி உயரத்திற்குச் சென்றதும் குளிர்ந்த காற்று வீசியது. இரும்புக் கோபுரத்தில் கவிழ்த்த குடை போலிருந்த ஆண்டெனா பெட்டியை நெருங்கியதும், ‘அப்பாடா, இதுதான் சரியான இடம்’ என்று அதன் அடியில் படுத்துக்கொண்டது மலை அணில்.

சில நிமிடங்களில் அங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சில விசித்திரமான குரல்கள் அணிலின் காதுகளில் கேட்கத் தொடங்கின. "வணக்கம்! நான் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுகிறேன். உங்கள் உயிருக்கு நாங்கள் பாதுகாப்பு தருகிறோம். மிகக் குறைந்த பிரீமியத்தில் மாதம் வெறும் 500 ரூபாய் கட்டினால் போதும்" என்று சொன்னதைக் கேட்ட மலை அணில் அதிர்ச்சி அடைந்தது.

சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தது. ஆனால் யாரையும் காணோம். ‘யார் அது? என் உயிர் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. ஒருவேளை நான் மரத்திலிருந்து குதிக்கும்போது வால் துண்டானால் புதிய வால் தருவார்களா?’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டது.

அடுத்து ஒரு பெண் குரல், "சார், உங்களுக்கு கிரெடிட் கார்டு வேண்டுமா? வாழ்நாள் முழுவதும் இலவசமாக எதை வேண்டுமானாலும் வாங்கலாம். ஒரு மாதத்துக்குப் பிறகு பணம் கட்டலாம்” என்றது. ‘எனக்குத் தேவையான பழங்களையும் பருப்புகளையும் நானே உழைத்துச் சம்பாதித்துக்கொள்வேன். எனக்கு எதுக்கு இந்தக் கடன் அட்டை?’ என்று நினைத்த அணிலுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

அடுத்து வந்த குரலோ இன்னும் வேடிக்கை. “வாழ்த்துகள்! நீங்கள் 5 கோடி குலுக்கல் லாட்டரியில் வென்றிருக்கிறீர்கள். உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைத் தந்தால் பணத்தை அனுப்பி வைப்போம்” என்றது.

அணில் இப்போது பரபரப்பானது. ‘5 கோடியா? ஒருவேளை 5 கோடி நிலக்கடலைகளாக இருக்குமோ? அந்த அளவு கடலை கிடைத்தால் வாழ்நாள் முழுவதும் கவலையே இருக்காது. வங்கி என்றால் எறும்புகள் சேமித்து வைக்கும் குழியைப் போன்றதா? ஆனால், எதையும் பத்திரமாகக் கையாள வேண்டும். தப்பித் தவறி கறையான் புற்றில் 5 கோடியைப் பத்திரப்படுத்தினால் கறையான்கள் தின்றுவிடுமே’ என்று கவலைப்பட்டது.

எதிர்பாராத நேரத்தில் ஓர் எச்சரிக்கைக் குரல் கேட்டதும் அணிலுக்குப் பயம் அதிகரித்தது. "உங்கள் ஏ.டி.எம் கார்டு முடக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உங்களின் ரகசிய எண்ணைச் சொல்லுங்கள்" என்கிற வார்த்தைகளைக் கேட்ட அணிலுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரே குழப்பம்.

மலை அணில் பயத்தில் எழுந்து உட்கார்ந்தது. “ஐயோ, இங்கு எனக்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது. நான் பருப்புகளையும், நிலக்கடலைகளையும் ஒளித்து வைத்திருக்கும் 3 மரப்பொந்துகள் பற்றி அந்த எலி தகவல் தந்திருக்குமோ? என் ரகசிய இடத்தை யாரிடமும் சொல்ல மாட்டேன்” என்று தலையை ஆட்டியது.

தொடர்ந்து வந்த அழைப்புகள் மலை அணிலைக் குழப்பத்தில் ஆழ்த்தின. கடைசியாக ஒரு நிறுவனத்தின் மேலாளர், "நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு 24 மணிநேரமும் சேவை செய்கிறோம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம்..." என்றார் கரகரத்த குரலில்.

அப்போதுதான் மலை அணிலுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. சில நாள்களுக்கு முன் காட்டில் முகாமிட்டிருந்த மனிதர்கள், சிக்னல் கிடைக்கவில்லை என்று கோபுரத்தின் அடியில் நின்று கத்திக்கொண்டிருந்தார்கள்.

‘இது மனிதர்களின் குரல். 24 மணி நேரமும் யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நிமிடம்கூட அமைதியாக இயற்கையை ரசிக்கவோ, பறவைகளின் பாட்டைக் கேட்கவோ நேரம் ஒதுக்குவதில்லை. எப்போதும் எதையாவது வாங்க, விற்க ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கை நிறையப் பணம் இருந்தாலும், நிம்மதியாகத் தூங்க ஒரு நல்ல மரக்கிளைகூட மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை போலிருக்கிறது’ என்று பரிதாபப்பட்டது மலை அணில்.

திடீரெனக் கோபுரத்திலிருந்து ஒரு பலமான ‘பீப்' சத்தம் கேட்க, மலை அணில் காதுகளைப் பொத்திக்கொண்டு, “ஆளை விடுங்க. எனக்கு இன்சூரன்ஸும் வேண்டாம், 5 கோடியும் வேண்டாம். எனக்கான காடு, என் மரம், நான் சேமித்த பழங்கள், பருப்புகள்... இவையே எனக்குப் போதும்” என்று கத்திக்கொண்டே கீழே இறங்கியது.

வேகமாக ஓடிவந்த மலை அணில் ஆலமரப் பொந்திற்குள் புகுந்துகொண்டது. அங்கு வந்த பக்கத்து மர அணில், “எங்கே போயிருந்தாய்?” என்று கேட்டது. “மனிதர்களின் உலகத்திற்குப் போனேன்.

அவர்கள் எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.” “நமக்கு அந்தத் தொல்லை இல்லை. நிம்மதியாகத் தூங்கு” என்றது பக்கத்து மர அணில். அன்று இரவு மலை அணில் எந்தத் தொந்தரவும் இன்றி நிம்மதியாக உறங்கியது.