



























இந்த விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பங்களுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர இறந்தவர்களின் உடல்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி அடக்கம் செய்வதற்கான செலவை தமிழக அரசே மேற்கொள்ளும் எனவும், விபத்தில் உயிரிழந்து மற்றும் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப் நிதியை உடனே வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோர் அறிக்கையை 24 மணி நேரத்துக்குள்ளும், முழுமையான விசாரணையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மொத்தம் 54,957 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் 27 லட்சத்து 65,313 பேர் பணிபுரிகின்றனர். அதில் அபாயகரமான தொழிற்சாலைகள் 6,669 உள்ளன. வரும் காலங்களில் இத்தகைய விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, உடனே குழு அமைத்து ஆபத்தான தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
மேலும், விபத்து ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。