惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

cs.AI updates on arXiv.org
cs.AI updates on arXiv.org
WordPress大学
WordPress大学
宝玉的分享
宝玉的分享
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 聂微东
IT之家
IT之家
V
V2EX
Jina AI
Jina AI
V
Visual Studio Blog
有赞技术团队
有赞技术团队
博客园 - 司徒正美
博客园 - 叶小钗
The Cloudflare Blog
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org
小众软件
小众软件
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 三生石上(FineUI控件)
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Google DeepMind News
Google DeepMind News
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
腾讯CDC
Google Online Security Blog
Google Online Security Blog
博客园 - 【当耐特】
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
K
KPMG report finds enterprise disconnect between AI and its ROI | CIO
N
News and Events Feed by Topic
N
News and Events Feed by Topic
The Last Watchdog
The Last Watchdog
W
WeLiveSecurity
月光博客
月光博客
Security Archives - TechRepublic
Security Archives - TechRepublic
Webroot Blog
Webroot Blog
SecWiki News
SecWiki News
博客园_首页
罗磊的独立博客
量子位
Latest news
Latest news
I
Intezer
V
Vulnerabilities – Threatpost
A
Arctic Wolf
Last Week in AI
Last Week in AI
Recent Commits to openclaw:main
Recent Commits to openclaw:main
S
SegmentFault 最新的问题
S
Security Affairs
阮一峰的网络日志
阮一峰的网络日志
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
P
Palo Alto Networks Blog
C
CXSECURITY Database RSS Feed - CXSecurity.com
N
News | PayPal Newsroom

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
முன்னேறும் இந்திய ரயில்வே | சொல்... பொருள்... தெளிவு
2026-04-29 · via hindutamil

Updated on

3 min read

இன்று உலகின் மிகப்பெரிய ரயில்வே வலைப்பின்னல்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கிற இந்திய ரயில்வே, 173 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறு முயற்சியாகவே தொடங்கியது. இன்று நாள்தோறும் 25,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

2025–2026 நிதியாண்டில் 741 கோடி பேர் ரயில்களில் பயணித்துள்ளனர். இந்தக் காலக்கட்டத்தில் ரயில்வே துறை கையாண்ட சரக்குகளின் அளவு 167 கோடி டன். அனைத்துக்கும் மேலாக, இந்தியாவில் 99.6% ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கம் செய்யப்பட்டுள்ளன.

முதல் பயணிகள் ரயில்

பம்பாய் (இன்றைய மும்பை) - தானே இடையேயான 34-35 கி.மீ. தொலைவை 1853 ஏப்ரல் 16இல் கடந்தது இந்தியாவின் முதலாவது பயணிகள் ரயில். ‘கிரேட் இந்தியன் பெனின்சுலா ரயில்வே’ நிறுவனத்தால் அது இயக்கப்பட்டது.

புதிய போக்குவரத்து நடைமுறையைக் காண விடுமுறையும் அனுமதியும் வழங்கப்பட்டதால், போரி பந்தர் ரயில்நிலையத்தில் பெருந்திரள் மக்கள் கூடியிருந்தனர்.

21 குண்டுகள் முழங்க, ரயில் கிளம்பியது. 14 பெட்டிகளில் ஏறக்குறைய 400 பேர் பயணித்த அந்த ரயிலை ஃபாக்லேண்ட் (Falkland) நீராவி இன்ஜின் இழுத்துச்சென்றது.

இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் பிராட்கேஜ் எனும் அகலவழிப் பாதையில் (1.60 மீ.) இயக்கப்பட்டாலும், நாட்டின் வெவ்வேறுபட்ட புவியியல் பரப்புக்கு ஏற்ப மீட்டர்கேஜ், ஸ்டாண்டர்டுகேஜ், நேரோகேஜ் என இருப்புப்பாதைகள் வெவ்வேறாக அமைக்கப்பட்டன.

1880 வாக்கில் 14,500 கி.மீ. தொலைவுக்கு இருப்புப்பாதைகள் நீட்டிக்கப்பட்டன. 1881இல் மேற்கு வங்கத்தின் சமவெளிப் பகுதியான புது ஜல்பாய்குரியையும் மலைப்பகுதி ஊரான டார்ஜிலிங்கையும் இணைக்கும் வகையில் ரயில் தடம் போடப்பட்டது. 1895இல் ராஜபுதனா மால்வா ரயில்வேயின் அஜ்மீர் பணிமனையில் முதலாவது நீராவி இன்ஜின் தயாரிக்கப்பட்டது.

1925இல் பம்பாய் விக்டோரியா முனையம் - குர்லா துறைமுகம் இடையே முதன்முறையாக மின்சாரம் மூலம் ரயில் இயக்கப்பட்டது. அதன் பின்னரும் நீராவி, டீசல் இன்ஜின்களைச் சார்ந்தே நாட்டின் ரயில் போக்குவரத்து இருந்தது.

நாடு விடுதலை பெற்ற பின்னர் 42 ரயில்வே அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு ‘இந்திய ரயில்வே’ உருவாக்கப்பட்டது. எளிதாக நிர்வகிக்கும் நோக்கில், 1952இல் அது ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. 1985க்குப் பின்னர் நீராவி இன்ஜின் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.

நவீன யுகத்தில்...

தொழில்நுட்பங்கள், கட்டமைப்பு வசதிகளில் மேம்பாட்டைத் துரிதப்படுத்தியதன் மூலமாக, 21ஆம் நூற்றாண்டில் அபார வளர்ச்சியை இந்திய ரயில்வே எட்டியிருக்கிறது.

மின்மயமாக்கம், நவீன ரயில் வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள், ரயில் நிலையங்கள் புனரமைப்பு, டிஜிட்டல் சேவைகள் போன்றவற்றில் அது பிரதிபலிக்கிறது.

பயணிகள் வசதி, செயல்பாட்டுத் திறன், தடையற்ற இணைப்பு ஆகியவற்றில் வலுவாகக் கவனம் செலுத்துவதன் வழியாக நவீனமயமாக்கத்தை எட்டிவருகிறது. 2014இல் ரயில் தடங்களில் மின்மயமாக்கல் 20% ஆக இருந்த நிலையில், தற்போது அது 99.6 சதவீதத்தைத் தொட்டிருக்கிறது.

இதனால், கடந்த நிதியாண்டில் மட்டும் ஏறக்குறைய 180 கோடி லிட்டர் டீசல் பயன்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளைவிட முன்னணி வகிக்கிறது இந்தியா. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் 54,600 கி.மீ. இருப்புப்பாதைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

அதிநவீன ரயில் சேவைகள்

2019 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வந்தே பாரத்’ விரைவு ரயில், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு ‘மேக் இன் இந்தியா’ (உள்நாட்டில் தயாரிப்போம்) திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்ட முதலாவது ‘ஓரளவு-அதிவேக ரயில்’.

தற்போதுவரை ஒரு லட்சம் பயணங்களை நிறைவு செய்திருக்கும் இந்த ரயில் சேவை, ஏறக்குறைய 9.1 கோடிக்கும் மேற்பட்டோரைச் சுமந்து சென்றுள்ளது. 2026 ஜனவரியில் அறிமுகமான ‘படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்’ கடந்த மூன்று மாதங்களில் 1.21 லட்சம் பயணிகளை ஏற்றிச்சென்றுள்ளது.

ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் மலிவான கட்டணத்தில் பயணிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் ‘அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்’களின் எண்ணிக்கை இப்போது 60 ஆகியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, 2026-27 மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2,78,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வலுவான பயணிகள் பாதுகாப்பு

பயணிகள் சேவை, பாதுகாப்பு, செயல்பாட்டுத் திறனை விரிவுபடுத்துவதற்காகத் தொலைதொடர்பு, டிஜிட்டல் கட்டமைப்பை ரயில்வே துறை வலுப்படுத்தி வருகிறது. உயர்திறன்மிக்க, மிக முக்கியமான ரயில்வே பயன்பாடுகளைச் செயல்படுத்தும் வகையில் ஐபி எம்பிஎல்எஸ் (Internet Protocol Multi-Protocol Label Switching) மூலமாகத் தொலைதொடர்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

1,396 ரயில்நிலையங்களில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. பரவலான வீடியோ கண்காணிப்பு, மொபைல் ரயில் வானொலி தொடர்பு (MTRC), பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS), கட்டுப்பாட்டுக் கண்காணிப்பு, தரவு சேகரிப்பு (SCADA) உள்ளிட்டவை இயங்க இது உதவுகிறது.

ர​யில்கள் மோதிக்​கொள்​வதைத் தடுப்பது, செயல்​பாட்டுப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதை நோக்க​மாகக் கொண்டு ‘கவச்’ தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு வடிவமைக்​கப்​பட்​டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்​கப்பட்ட இந்நுட்பம் 3,100 கி.மீ. வழித்​தடத்தில் செயல்​படுத்​தப்​பட்டு இருப்​ப​தோடு, மேலும் 24,400 கி.மீட்​டருக்கு விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று​வரு​கின்றன.

1,874 ரயில் நிலையங்​களில் செயற்கை நுண்ணறிவு அடிப்​படையிலான பகுப்​பாய்வு, முக அடையாளத் தொழில்​நுட்​பத்தில் செயல்​படும் காணொளிக் கண்காணிப்பு அமைப்பு (AI-Enabled Video Surveillance) செயல்​பாட்டுக்கு வந்துள்ளன.

சரியான நேரத்தில் அறிவிப்புகள், சிறப்பான பயணிகள் தொடர்பை உறுதிப்​படுத்தும் வகையில் 1,405 ரயில் நிலையங்​களில் நிகழ்-நேரப் பயணிகள் தகவலமைப்பு செயல்​படுத்​தப்​படு​கிறது. சுரங்​கப்​பாதைத் தடங்களில் பயணிகள் தடையற்ற இணைப்​பையும் பாதுகாப்பான செயல்​பாடு​களையும் பெறும் வகையில் சுரங்கத் தகவல்​தொடர்பு அமைப்பு (Tunnel Communication Systems) செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

எட்டப்பட்ட சாதனைகள்

ரயில்வே விரிவாக்கத்தில் தன்னிறைவைப் பிரதிபலிக்கும் வகையில், கடந்த நிதியாண்டில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் 1,674 ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சரக்குப் போக்குவரத்துக் கட்டமைப்பை விரிவாக்கும் வகையில் 35 கதிசக்தி (PM Gati Shakti) சரக்கு முனையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி ஏறக்குறைய 65,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. பயணச்சீட்டு முன்பதிவு, ரயில்கள் குறித்த தகவலறிதல், குறைகள் தீர்வுக்கான ஒருங்கிணைந்த தளமாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ‘ரயில்ஒன்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

பல்வேறு மாற்றங்களுக்கு மத்தியில் இன்றளவும் அடுத்த தலைமுறையோடு நெருக்கமாகப் பயணிக்கும் ரயில்வே துறை, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தோடு பிணைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.