

























Updated on
:
1 min read
அகமதாபாத்: டீப்ஃபேக் வீடியோ மூலம் வங்கியில் கடன் பெற்று நூதன மோசடி செய்த நான்கு பேரை அகமதாபாத் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் எப்படி கவனம் பெற்று என்பது குறித்து பார்ப்போம்.
வழக்கமாக சைபர் மோசடியாளர்கள் ஓடிபி எண்ணை கொண்டு மோசடி செய்வர். அதனால் ஓடிபி-யை யாரிடமும் பகிர வேண்டாம் என காவல் துறையினர், வங்கிகள் சொல்வதுண்டு. இந்நிலையில், அந்த ஓடிபி-யை பெற டீப்ஃபேக் வீடியோவை குஜராத்தில் நான்கு பேர் பயன்படுத்தி உள்ளனர்.
அகமதாபாத் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு தனது வங்கியில் இருந்து எந்தவித ஓடிபி-யும் கடந்த சில நாட்களாக வரவில்லை என்பதை கவனித்துள்ளார். அது தொடர்பாக சந்தேகம் அடைந்த அவர், போலீஸாரை தொடர்பு கொண்டார். தொடர்ந்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு, இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
இந்த மோசடி எப்படி நடந்தது என்பது குறித்து போலீஸார் விவரித்துள்ளனர். சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் ஆதார் எண் உடன் லிங்க் செய்யப்பட்ட மொபைல் எண் மாற்றப்பட்டுள்ளது எங்களுக்கு தெரியவந்தது. இதற்காக அவரது பயோமெட்ரிக் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட அந்த மொபைல் எண்ணை கொண்டு, அந்த தொழிலதிபரின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, ரூ.25,000 கடன் பெற்றுள்ளனர். மேலும், அவரது டிஜிலாக்கர் கணக்கிலும் முக்கிய தரவுகள் உள்ளதா என்பதை மோசடியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
இதற்காக ஏஐ டூலை கொண்டு அந்த தொழிலதிபரின் டீப்ஃபேக் வீடியோவை உருவாக்கி உள்ளனர். அதன் மூலம் ஆதார் ஆத்தென்டிகேஷனை சரிபார்த்து, அதில் மொபைல் எண்ணை மாற்றி, ஓடிபி பெற்றுள்ளனர். தொடர்ந்து கேஒய்சி சரிபார்ப்பு மூலம் வங்கியில் கணக்கு தொடங்கி, கடன் பெற்றுள்ளனர். இந்த குற்றம் தொடர்பாக கனுபாய் பர்மர், ஆஷிஷ் வானந்த், முகமது கைஃப் படேல், தீப் குப்தா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பொது சேவை மையத்தில் பணி செய்தவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。