惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Engineering at Meta
Engineering at Meta
T
Threatpost
P
Palo Alto Networks Blog
NISL@THU
NISL@THU
O
OpenAI News
Project Zero
Project Zero
G
GRAHAM CLULEY
P
Privacy International News Feed
A
Arctic Wolf
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
H
Help Net Security
M
MIT News - Artificial intelligence
T
Threat Research - Cisco Blogs
S
Security @ Cisco Blogs
Google DeepMind News
Google DeepMind News
B
Blog RSS Feed
D
Docker
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 【当耐特】
N
Netflix TechBlog - Medium
云风的 BLOG
云风的 BLOG
雷峰网
雷峰网
W
WeLiveSecurity
P
Proofpoint News Feed
腾讯CDC
Cloudbric
Cloudbric
S
Secure Thoughts
C
Check Point Blog
博客园 - Franky
T
The Exploit Database - CXSecurity.com
T
Troy Hunt's Blog
GbyAI
GbyAI
Security Archives - TechRepublic
Security Archives - TechRepublic
Application and Cybersecurity Blog
Application and Cybersecurity Blog
月光博客
月光博客
C
Cyber Attacks, Cyber Crime and Cyber Security
I
Intezer
TaoSecurity Blog
TaoSecurity Blog
L
Lohrmann on Cybersecurity
V
Visual Studio Blog
F
Fortinet All Blogs
博客园 - 叶小钗
C
CXSECURITY Database RSS Feed - CXSecurity.com
CTFtime.org: upcoming CTF events
CTFtime.org: upcoming CTF events
Recorded Future
Recorded Future
C
Cisco Blogs
博客园 - 司徒正美
Stack Overflow Blog
Stack Overflow Blog
Y
Y Combinator Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
மேற்கு வங்கத்தில் திரிணமூல், பாஜகவுக்கு சவாலாகும் முதல் கட்ட வாக்குப் பதிவு - காரணம் என்ன?
2026-04-23 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தின் முதல்கட்ட வாக்குப்பதிவு, திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) மற்றும் பாஜகவுக்கு பெரும் சவாலாகி விட்டது. 152 தொகுதிகளில் கடந்த காலத் தேர்தல்களில் பல உயிர்கள் பலியாகி உள்ளன.

கடந்த காலத் தேர்தல் முடிவுகள், வன்முறைச் சம்பவங்களின் வரலாறு மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை இந்தத் தேர்தல் கட்டத்தை மிகவும் முக்கியமானதாக மாற்றியுள்ளன. முதல் கட்டத் தேர்தலின் புள்ளிவிவரக் கணக்குகள், இந்தப் போட்டியை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுகின்றன.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, முதல் கட்டத்தின் 152 தொகுதிகளில் பாஜக 59 இடங்களைக் கைப்பற்றியது. இரண்டாம் கட்டத்தில் அமைந்த 142 தொகுதிகளில் அதன் வெற்றி எண்ணிக்கை வெறும் 18-ஆகக் குறைந்தது.

பாஜகவைப் பொறுத்தவரை, தன் வெற்றிப் பயணத்தில், முதல் கட்டத்திலேயே முன்னிலையைப் பெறுவது மிக அவசியமாகும். இந்த முதல் கட்டத்தில் அதன் பலம் குறைந்தால், அடுத்த கட்டம் மிகவும் கடினமானதாக அமையும்.

மறுபுறம், மம்தா பானர்ஜியின் டிஎம்சியும் சற்றும் குறைவில்லாத சவாலை எதிர்கொண்டுள்ளது. 2021 தேர்தலில், முதல் கட்டத்தில் அமைந்த 152 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 92 இடங்களை வென்றது.

அதேவேளையில், இரண்டாம் கட்டத்தில் அமைந்த 142 தொகுதிகளில் 123 இடங்களைக் கைப்பற்றியது. முதல் கட்டத்திலேயே பாஜகவின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த டிஎம்சியால் முடிந்தால், அது மம்தா பானர்ஜியை நான்காவது முறையாக முதலமைச்சர் பதவியில் அமர்த்தும். 2011 முதல் 2024 வரையிலான தேர்தல் தரவுகளின்படி, இந்த 152 தொகுதிகளில் பாஜகவின் வளர்ச்சி வரைபடம் உயர்ந்துள்ளதைக் காண முடிகிறது. 2011 தேர்தலில், பாஜகவால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற இயலவில்லை.

2016 தேர்தலில், இந்த வெற்றி எண்ணிக்கை வெறும் மூன்றாக உயர்ந்தது. இருப்பினும், 2019 மக்களவைத் தேர்தலில், இதே தொகுதிகளில் பாஜக 86 இடங்களைக் கைப்பற்றிப் பெரும் முன்னேற்றம் கண்டது.

தொடர்ந்து, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், அத்தொகுதிகளில் பாஜக 59 இடங்களை வென்றது. அதன் தொடர்ச்சியாக, 2024 மக்களவைத் தேர்தல்களில் இக்கட்சி 64 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதனாலேயே, அமித் ஷா தலைமையிலான இக்கட்சி, இக்கட்டத் தேர்தலின் மீது தனது முழு பலத்தையும் காட்டியுள்ளது.

இருப்பினும், டிஎம்சியின் செயல்பாடுகளும் சற்றும் சளைத்தவை அல்ல. 2011-இல் 68 தொகுதிகளையும், 2016-இல் 86 தொகுதிகளையும் வென்ற டிஎம்சி, 2019 மக்களவைத் தேர்தல்களில் 57 தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

2021-இல் 92 தொகுதிகளை வென்றதன் மூலமும், 2024 மக்களவைத் தேர்தல்களில் 76 தொகுதிகளில் முன்னிலை பெற்றதன் மூலமும் டிஎம்சி ஒரு வலுவான நிலையைப் பதிவு செய்தது. 2019-ல் ஒரு பின்னடைவைச் சந்தித்திருந்தாலும், மரபு ரீதியாகவே முதல்கட்டத் தேர்தலின் தொகுதிகள் டிஎம்சிக்கு சாதகமானவையே.

முதல் கட்டத் தேர்தலில் அடங்கியுள்ள தொகுதிகளில், மக்கள் தொகையில் 50 முதல் 66 சதவீதம் வரை முஸ்லிம்கள் வசிக்கும் முர்ஷிதாபாத், மால்டா மற்றும் வடக்கு தினாஜ்பூர் போன்ற மாவட்டங்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

இம்மூன்று மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளில், கடந்த முறை டிஎம்சி 35 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியிருந்தன. இம்முறை, இந்து வாக்குகளைத் துருவப்படுத்துவதில் கவனம் செலுத்தி, டிஎம்சியைத் தகர்க்கும் வகையில் பாஜக தனது தேர்தல் வியூகத்தை வகுத்துள்ளது.

தேர்தலுக்கு முந்தைய சூழலும் பதற்றமான நிலையிலேயே காணப்பட்டது. துர்காபூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தன.

மேற்கு வங்க மாநிலத்தின் தேர்தல் கால வன்முறை வரலாறு குறித்த கவலைகளும் தற்போது எழுந்துள்ளன. 2019 மக்களவைத் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்ததுடன், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 1,300 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. இதில் 17 உயிர்கள் பலியாகின. 2023 பஞ்சாயத்துத் தேர்தலின்போது 45 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 18 பேர் வாக்குப்பதிவு நாளன்று மட்டுமே உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் 10 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இத்தகைய பின்னணியில், இம்முறை தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்பையும் கட்டுப்பாடுகளையும் மேலும் கடுமையாக்கியுள்ளது.

வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே தொடங்கி, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இருசக்கர வாகனப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மட்டுமே இருசக்கர வாகனத்தில் சென்று வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

மது விற்பனைக்கான தடைக்காலம், 48 மணி நேரத்திலிருந்து 96 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

மத்தியப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டிருப்பது தேர்தல் சூழலைப் பாதிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனினும், அம்மாநிலத்தில் நிலவும் வன்முறைச் சூழலைக் கருத்தில் கொண்டு இத்தகைய கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியமென பாஜக தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு நாளன்று எவ்விதக் குழப்பமும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில், சுமார் 800 டிஎம்சி தலைவர்களின் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இயல்பான சூழலில் எவரையும் கைது செய்யுமாறு எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை எனத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக இன்றைய முதல்கட்ட வாக்குப்பதிவும் பாஜக மற்றும் டிஎம்சி ஆகிய இரு கட்சிகளுக்குமே மிக முக்கியமானதாகிறது.