






















சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் செவ்வாய்க்கிழமை மட்டும் 1.88 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 21-ம் தேதி நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1,339 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,88,705 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் இதுவரை 18,633 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。