惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

小众软件
小众软件
量子位
阮一峰的网络日志
阮一峰的网络日志
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
美团技术团队
J
Java Code Geeks
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
腾讯CDC
V
Visual Studio Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 三生石上(FineUI控件)
IT之家
IT之家
博客园 - 【当耐特】
L
LangChain Blog
A
About on SuperTechFans
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
N
Netflix TechBlog - Medium
博客园_首页
WordPress大学
WordPress大学
博客园 - Franky
Engineering at Meta
Engineering at Meta
C
Check Point Blog
aimingoo的专栏
aimingoo的专栏
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
செங்கல்பட்டு: சமூக விரோதிகளின் கூடாரமாகும் மகளிர் சுய உதவ...
2026-05-03 · via hindutamil

Updated on

2 min read

செங்கலபட்டு ஊராட்சிகளில் சேதமடைந்து செயல்பாடின்றி உள்ள மகளிர் சுய உதவி குழு கட்டிடங்களால் அரசின் நிதி வீணாகிறது. அவற்றில் புதர்மண்டி சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது.

தமிழகத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாலெ அரசின் பெண்கள் மேம் பாட்டுக் கழகம் மூலம் முதன்முதலில், 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மகளிர் சுயசார்பு பெற உதவியதால் இக்குழுக்கள் மிக வேகமாக அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டன.

கிராமப்புற பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசு மகளிர் சுய உதவி குழு திட்டத்தை அறிமுகம் செய்தது. இத் திட்டத்தின் மூலம் ஊராட்சிகள் தோறும் பல்வேறு மகளிர் சுய உதவி குழுக்கள் தற் போது செயல்பட்டு வருகின்றன. ஊராட் சிகள் தோறும் மகளிர் சுய உதவி குழுக் களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப் பதற்காக கட்டிடங்கள் கட்டப்பட்டன.

இந்த கட்டிடங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தையல் பயிற்சி, கூடை முடைதல், சலவை சோப்பு தயாரித்தல், வீட்டு பராமரிப்புக்கான பினாயில் தயாரிப்பு, சாம்பிராணி, ஊதுபத்தி, சூடம் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பதுகுறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த பயிற் சியை பெற்ற மகளிர் குழுக்கள் குழுவாக சேர்ந்தும் தனித்தனியாக வீடுகளிலும் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றை அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலமும் தாங்களாகவும் மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து லாபம் ஈட்டி வந்தனர். இதற்கு ஊராட்சிகள் தோறும் கட்டப்பட்டிருந்த மகளிர் சுய உதவி குழு கட்டிடங்கள் மகளிருக்கு உதவியாக அமைந்திருந்தது.

இதனிடையே காலப் போக்கில் இக்கட்டிடங்கள் பராமரிப்பின்றி கூரை இடிந்து விழுந்தும் மின் இணைப்பு இன்றியும் சேதமடைந்த நிலையில் உள்ளன. பல ஊராட்சிகளில் கட்டிடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 395 ஊராட்சிகளில் மகளிர் குழு கட்டிடங்கள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டன. அவற்றில் 90 சத வீத கட்டிடங்கள், பல ஆண்டுகளாக பாழாகியும் உள்ளன. இதனால் மகளிர் குழு கூட்டங்கள், கோயில், திண்ணை, வீடுகளின் மரத்தடியில் நடத்தப்படுகின்றன.

மகளிர் குழுவை சேர்ந்த செண்பகம் கூறியது: தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் மகளிர் சுய உதவிக் குழு கட்டிடங்கள் மேற்கூரை, தரைத் தளம், பெயர்ந்து சேதமடைந்த நிலையில் பூட்டிக் கிடக்கின்றன. இதனால் மகளிர் சுய உதவி குழு கூட்டங்கள் நடத்த இட வசதி யின்றி தெருவில் சந்தித்து கூட்டம் நடத்தும் நிலை உள்ளது. கட்டிடங்களை பராமரிப்பதற்கு எங்களால் முடியவில்லை. மாறாக ஒன்றிய, மாவட்ட நிர்வாகம் தான் இதனை மேற்கொள்ள வேண்டும்.

அவர்கள் சரிவர செய்வதில்லை. சில இடங்களில் கட்சி பாகுபாடு பார்ப்பதால் கூட்டங்கள் அனுமதிப்பதில்லை. இதனால் வேறு இடங்களில் கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். சேதமடைந்த மகளிர் சுய உதவிக்குழு கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்களை மின் இணைப்புடன், தண்ணீர், கழிப்பறை வசதியோடு கட்டித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.