惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 司徒正美
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Last Week in AI
Last Week in AI
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
爱范儿
爱范儿
The Cloudflare Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 叶小钗
博客园_首页
有赞技术团队
有赞技术团队
WordPress大学
WordPress大学
宝玉的分享
宝玉的分享
V
V2EX
V
Visual Studio Blog
博客园 - 三生石上(FineUI控件)
S
SegmentFault 最新的问题
量子位
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
美团技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஐ.சி.எஃப்​-ல் இருக்கை வந்தே பாரத் ரயில்​கள் தயாரிப்பு நிற...
செய்திப்பிரிவு · 2026-06-22 · via hindutamil

Updated on: 

சென்னை: சென்னை ஐசிஎஃப் ஆலை​யில் கடைசி​யான இருக்கை வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி நிறைவடைந்த நிலை​யில், தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு முழு​வீச்​சில் தொடங்க உள்​ளது. நடப்பு நிதி​யாண்​டில் 8 ஸ்லீப்​பர் வந்தே பாரத் ரயில்​களை தயாரிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

உலகப் புகழ்​பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்​சாலைகளில் ஒன்​றான சென்னை ஐ.சி.எஃப். திகழ்​கிறது. இங்கு பல்​வேறு வகை​களில் 80 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ரயில் பெட்​டிகள் தயாரித்து வழங்​கப்​பட்​டுள்​ளன. தற்​போது, இந்த ஆலை​யில் அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிப்​பில் ஆர்​வம் காட்​டப்​படு​கிறது.

வந்தே பாரத் ரயிலைப் பொருத்​தவரை, ஐ.சி.எஃப்​-ல் முதன் முறை​யாக உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் “ரயில் 18” என்ற பெயரில் தயாரிக்​கப்​பட்​டது. இதற்கு “வந்தே பாரத் ரயில்” என்று பெயரிடப்​பட்​டது. இருக்கை வசதி கொண்ட இந்த ரயில் சேவை முதன்​முதலாக, புதுடில்லி - வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு தொடங்​கியது. தற்​போது நாட்​டின் பல்​வேறு நகரங்​களுக்கு இடையே 80-க்​கும் மேற்​பட்ட வந்தே பாரத் ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

பல்​வேறு வசதி​களை கொண்ட இந்த ரயில்​களுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது. முன்​ன​தாக, ஐசிஎஃப் ஆலை​யில் இருக்கை வசதி​யுடைய 97 வந்தே பாரத் ரயில்​களை தயாரிக்க ஆர்​டர் வழங்​கப்​பட்​டது. இதுத​விர, தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், பார்​சல் வந்தே பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில், அம்​ரித் பாரத் ரயில் உள்​ளிட்ட வகை​களில் ரயில்​கள் தயாரிக்க முடிவு செய்​யப்​பட்​டன.

<div class="paragraphs"><p>தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் மற்றும் ரயிலின் உட்புறதோற்றம்.	(கோப்பு படம்)</p></div>

தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் மற்றும் ரயிலின் உட்புறதோற்றம். (கோப்பு படம்)

இவற்​றில் அம்​ரித் பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில் அடுத்​தடுத்து தயாரித்து வழங்​கப்​பட்​டது. 16 பெட்​டிகள் கொண்ட தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெங்​களூரு​வில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறு​வனத்​தில் ஐ.சி.எஃப் பங்​களிப்​புடன் தயாரிக்​கப்​பட்​டது. இந்த ரயில் தற்​போது ஹவுரா (மேற்கு வங்​கம்) - காமாக்யா (கவு​காத்​தி, அசாம்) இடையே வழித்​தடத்​தில் இயக்​கப்​படு​கிறது. இதையடுத்​து, தூங்​கும் வசதி வந்தே பாரத் ரயில்​கள் தயாரிப்பு பணியை அதி​கப்​படுத்த முயற்சி எடுக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், சென்னை ஐசிஎஃப் ஆலை​யில் கடைசி​யான இருக்கை வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி அண்​மை​யில் நிறைவடைந்​தது. இனி வரும் காலங்​களில், தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​கள் தயாரிப்பு முழு​வீச்​சில் நடை​பெறவுள்​ளன. அந்த வகை​யில், நடப்பு நிதி​யாண்​டில் 8 தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​கள் தயாரிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இது குறித்​து, சென்னை ஐ.சி.எஃப் அதி​காரி​கள் கூறிய​தாவது: ஐசிஎஃப் ஆலை​யில் மொத்​தம் 97 இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​கள் தயாரித்து வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டிருந்​தது. அண்​மை​யில் 97-வது வந்தே பாரத் ரயில் தயாரித்து உள்​ளோம். இந்த ரயில் வடக்கு ரயில்​வேக்கு அனுப்​பப்​படும். இனி வரும் காலங்​களில் தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி முழு​வீச்​சில் மேற்​கொள்ள உள்​ளோம்.

தற்​போது வரை, பாரத் எர்த் மூவர்ஸ் நிறு​வனத்​துடன் இணைந்​து, 4 தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரித்து வழங்கி உள்​ளோம். நடப்பு நிதி​யாண்​டில், பாரத் எர்த் மூவர்ஸ் நிறு​வனத்​துடன் இணைந்து 6 தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​கள் தயாரித்து வழங்க உள்​ளோம்.

இதுத​விர, இரண்டு தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​களை ஐசிஎஃப் ஆலை​யில் சொந்​த​மாக தயாரிக்க இருக்​கிறோம். ஒரு ரயில் தயாரிக்க சுமார் ரூ.1.30 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. தூங்​கும் வசதி கொண்ட வந்​தே​பாரத் ரயில் தயாரிப்பு பணி விரை​வில் தொடங்க உள்​ளது. இந்​தர​யில்​கள் தலா 16 பெட்​டிகளை கொண்​ட​தாக இருக்​கும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

நாட்​டில் முக்​கிய வழித்​தடங்​களில் 400 வந்தே பாரத் ரயில்​களை இயக்க ரயில்வே திட்​ட​மிட்​டுள்​ளது. இதன் ஒரு பகு​தி​யாக, தூங்​கும்​ வசதி கொண்​ட வந்​தே ​பாரத்​ ரயில்​களை படிப்​படி​யாக த​யாரித்​து வழங்​கப்​பட உள்​ளன. இவை​கள்​ 16 பெட்​டிகளை​யும், 24 பெட்​டிகளை​யும்​ கொண்​ட ரயில்​களாக இருக்​கும்​.