





















சென்னை: அதிமுக தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்குமாறு திமுக கேட்டது. ஆனால், அதற்கு நாங்கள் மறுத்துவிட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அவர்களை கலந்தாலோசிக்காமலேயே வெளியேறியது.
ஆனால், எங்களை பொறுத்தவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்தோம். எங்களது மாநில தலைவர்கள், அவரை சந்தித்து பேசியபோது, திமுக ஆதரவுடன் ஒரு அரசை அமைப்பது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.
அதாவது, அதிமுக தலைமையிலான அரசை திமுக வெளியில் இருந்து ஆதரிக்க இருப்பதாக தெரிவித்தனர். மற்ற விவரங்கள் எதையும் எங்களிடம் கூறவில்லை. ஆனால், திமுக என்ன செய்ய விரும்புகிறது என்பதை எங்களிடம் நியாயமான முறையில் கலந்தாலோசித்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。